பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் ஊடகங்களின் போக்குத்தொடர்பில் பெண்கள் சந்திப்பு இணைய வழி கலந்துரையாடலில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணங்களாலும் அவதூறுகளாலும் மறைக்கப்படும் பெண்கள் மீதான சுரண்டல்கள் – உரத்துப் பேசுவோம் எனும் தலைப்பில் கடந்த 13.05.2023 சனிக்கிழமை இணைய வழிக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அண்மையில் வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ. சுகிர்தனால் ஏமாற்றப்பட்டு அவரின் வீட்டின் முன்பாக தீயில் எரிந்து உயிரிழந்த விஜிதா என்ற பெண்ணின் இறப்பு மற்றும் தேசம் இணையத்தளம் வெளிக்கொணர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பிரதம இணைப்பாளரான குடுமி ஜெயா என அறியப்பட்ட வெற்றிவேலு ஜெயந்திரனின் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்கள் ஆகிய இரு விடயங்கள் இந்த உரையாடலின் பிரதான பேசுபொருளாக இருந்தன.
இது தொடர்பில் தேசம் திரையின் முழுமையான காணொளியை காண கீழேயுள்ள Link ஐ Click செய்யுங்கள்.