2023

2023

ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக போராடிய நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் !

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு (Narges Mohammadi) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் அவருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈரானிய ஆட்சியாளர்கள் அவரை 13 முறை கைது செய்துள்ளனர். ஐந்து முறை அவர் குற்றவாளி என்று தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 31 ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையுடன் 154 கசையடிகளையும் பெற்றுள்ளார். துயரம் என்னவென்றால், நர்கிஸ் முகம்மதி இன்னும் சிறையில் தான் இருக்கிறார்.

 

இயற்பியல் மாணவியான முகம்மதி, சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

 

ஈரானிய பெண்களுக்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டார்.

 

இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

 

பிணையில் வெளிவந்த முகம்மதி, ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

 

அவரது இந்த போராட்டம், 2015 ஆம் ஆண்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, கூடுதலாக சில ஆண்டுகள் சிறைக்குள் இருக்கும் நிலையை உருவாக்கியது.

 

சிறைப்பிடிக்கப்பட்டதிலிருந்து, நர்கிஸ் முகம்மதி, ஈரானில் போராட்டங்களுக்கான வலு குறையாமல் இருக்க உதவிக்கொண்டேயிருந்தார்.

 

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் இதுவரை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (06) அமைதிக்கான நோபல் பரிசு நர்கிஸ் முகம்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் பேருந்து தீப்பற்றி விபத்து – குழந்தைகள் உள்ளடங்கலாக 21 பேர் பலி !

வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் குழந்தைகள் உள்ளடங்கலாக 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவிகின்றனர்.

பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றியதால் பாலத்திலிருந்து விலகி புகையிரத பாதைக்கு அருகில் விழுந்து விபத்து சம்பவித்துள்ளது

பேருந்திலிருந்து எரிபொருள் கசிந்ததில் பேருந்து தீப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயினை அணைத்ததாகவும், இந்நிலையில் பயணிகளை மீட்க வேண்டியும் இருந்ததால் பெரும் சவாலுக்கு உள்ளதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு

மலேசியாtில் இலங்கையர் மூவர் கொல்லப்பட்ட விவகாரம் – சந்தேகநபர் சிறைக்காவலில் உயிரிழப்பு !

மலேசியா – சென்டுல் பகுதியில் இலங்கையர்கள் மூவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோலாலம்பூர் காவல்துறை தலைமையக அதிகாரி டத்தோ அலாவுதீன் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு பிரதான சந்தேக நபர்களுக்கு கொலைகளை செய்வதற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று இலங்கையர்களும், பாகிஸ்தானியரும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர். நான்கு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்திய போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு முக்கிய சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்தது.

உயிரிழந்த இலங்கையர் தவிர மேலும் ஆறு இலங்கையர்களும், பாகிஸ்தானியர் ஒருவரும் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள்” எனத் தெரிவித்தார்.

நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி முடங்கியது யாழ்ப்பாணம் நீதிமன்றவளாகம் !

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றையதினம் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நீதிமன்றவளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு திங்கட்கிழமை (02) ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக இன்றும் நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பது என தீர்மானம் எடுத்திருந்தனர்.

நாளையும் (04) யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை

2023 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு – கொவிட் 19 தடுப்பூசியை கண்டுபிடிக்க மூல காரணமானவர்களுக்கு !

கொவிட் 19 தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக 2023 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை ரோயல் ஸ்வீடிஸ் அக்கடமி இன்று (அக்.2) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மூலமாக, நமது நோய் எதிர்ப்பு சக்தியில் எம்ஆர்என்ஏ எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய அடிப்படை புரிதலை மாற்றியமைத்துள்ள பரிசு பெற்றவர்கள், நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்துக்கான அச்சுறுத்தலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முன்னோடியில்லாத பங்களிப்பினை செய்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் வேதியியலாளரான கடாலின் கரிகோ, எம்ஆர்என்ஏயின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டார் என்றாலும், அவர் நோயெதிர்ப்பியல் நிபுணரான ட்ரூவ் வைஸ்மேன் உடன் இணைந்து நியூக்லியோசைடின் பாதிப்பும், நோய் எதிர்ப்பு அமைப்பில் அதன் தாக்கம் குறித்தும் கடந்த 2005-ல் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். பின்னர் 2008, 2010ம் ஆண்டுகளில் வெளியான மேலும் சில ஆய்வுக்கட்டுரைகள் ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகளை சரிசெய்ய உதவியது. இதன் மூலம் எம்ஆர்என்ஏவை மருத்துவ ரீதியாக பயன்படுத்துவதில் இருந்த முக்கியமான தடைகள் நீங்கின.

இதன் மூலம், மனித ஆரோக்கியத்துக்கான அச்சுறுத்தலாக விளங்கிய கோவிட் 19-க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்த இணை முன்னோடியில்லாத பங்களிப்பை செய்துள்ளதாக நோபல் பரிசு குழுவின் நடுவர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த இணையை கவுரவிக்கும் வகையில், ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் கமிட்டி மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு இருவரையும் தேர்வு செய்துள்ளது. பரிசு பெற உள்ள அறிவியல் கண்டுபிடிப்பு 2005ம் ஆண்டைச் சேர்ந்தது என்றாலும், கோவிட் 19க்கு எதிராக ஃபைசர்/பையோடெக் மற்றும் மடேர்னாவால் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை.

 

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணிபுரியும் ஹங்கேரியைச் சேர்ந்த கரிகோவும், அமெரிக்காவைச் சேர்ந்த வைஸ்மேனும் தங்களின் ஆராய்ச்சிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளனர். இதில் 2021ம் ஆண்டு பெற்ற லஸ்கர் விருது நோபல் விருத்துக்கு இணையாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் விஞ்ஞானியான ஸ்வாண்டே பாபோவின் அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமத்தின் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டது. இவரது கண்டுபிடிப்பு முற்றிலும் புதிய துறையான பலியோஜெனோமிக்-ல் மனித பரிணாமம் மற்றும் இடம்பெயர்வு குறித்து ஆழமாக புரிந்து கொள்ள அறிவியல் சமூகத்துக்கு உதவியது.

இந்தாண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலமாக நோபல் பரிசு அணிவகுப்பு தொடங்கியுள்ளது.

உலகின் பொருளாதார சுதந்திரம் 2023 இற்கான ஆண்டறிக்கை – இலங்கைக்கு பின்னடைவு !

கனடாவின் ஃப்ரேசர் நிறுவனத்துடன் இணைந்து அட்வகேடா நிறுவனம் வெளியிட்ட உலகின் பொருளாதார சுதந்திரம் 2023 இற்கான ஆண்டறிக்கையில் உள்ளடங்கிய 165 நாடுகளில் இலங்கை 116 வது இடத்தினைப் பிடித்துள்ளது.

 

165 நாடுகளின் கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தனிநபர்களின் பொருளாதார சுதந்திரத்தை அதாவது தங்கள் சொந்த பொருளாதார முடிவுகளை எடுக்கும் திறனை வெளியிடும் அறிக்கையே இந்த பொருளாதார சுதந்திர அறிக்கையாகும்.

 

இதில் நாட்டின் ஒழுங்குமுறை, சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கான சுதந்திரம், அரசாங்கத்தின் அளவு, சட்ட அமைப்பு, சொத்து உரிமைகள் மற்றும் நல்ல பணக் கொள்கை என்பன அடங்குகின்றது.

மேலும் இந்த தரவரிசையில் இப்போது முதலிடத்தில் சிங்கப்பூர் உள்ளது, அதனைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ஹாங்காங், 3 ஆம் இடத்தில் சுவிட்சர்லாந்து, 4 ஆம் இடத்தில் நியூசிலாந்து, 5 ஆம் இடத்தில் அமெரிக்கா, அயர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் முறையே 6 தொடக்கம் 10 ஆம் இடம் வரை தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.

மேலும் ஜப்பான் (20வது), ஜெர்மனி (23வது), பிரான்ஸ் (47வது) மற்றும் ரஷ்யா (104வது) ஆகிய இடங்களை முறையே பெற்றுள்ளன. வெனிசுலா மீண்டும் கடைசி இடத்தினைப் பெற்றுள்ளது.

வட கொரியா மற்றும் கியூபா போன்ற சில நாடுகளின் தரவுகள் இல்லாததால் அவற்றை தரவரிசைப்படுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் தரவரிசையில் 104 வது இடத்தில் இருந்த இலங்கை 116 ஆவது இடத்தினை அடைந்திருப்பது பொருளாதார சுதந்திரத்தில் சரிவடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையின் பொருளாதார சுதந்திரத்தின் 5 துணைக் கூறுகளில் 4 அந்தந்த தனிப்பட்ட மதிப்பெண்களில் சரிவை பதிவு செய்வதால், இலங்கையின் மதிப்பெண்ணில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அளவு, பணத்திற்கான அணுகல், சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கான சுதந்திரம் மற்றும் கடன், உழைப்பு மற்றும் வணிகத்தின் கட்டுப்பாடு ஆகிய கூறுகளில் சரிவை சந்தித்துள்ளது.

சட்ட அமைப்பு மற்றும் சொத்து உரிமைகள் மதிப்பெண்ணில் முன்னேற்றத்தை காட்டிய கூறாகும்.

இந்த பின்னடைவிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளாக நிலையான பணம் மற்றும் நிதி சூழலில் சுதந்திரமாக வர்த்தகம் செய்யவும், வேலை செய்யவும், பரிவர்த்தனை செய்யவும் குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கபட்டால் இலங்கை இந்த சரிவிலிருந்து மீண்டுவர முடியும் என அட்வகேடா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை மாணவி – நகோயா சட்டத்தரணிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

இலங்கை யுவதி ஒருவர் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் உயிரிழந்தமை தொடர்பில், குடிவரவு சேவைகள் பணியக அதிகாரிகளுக்கு எதிராக இரண்டாவது முறையாக குற்றம் சுமத்த வேண்டாம் என தீர்மானித்துள்ளதாக ஜப்பானில் உள்ள நகோயா சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் உயிரிழந்த யுவதியின் குடும்பத்தினர், குறித்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.

ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி என்ற 33 வயதான இலங்கை யுவதி 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் உயிரிழந்தார்.

அவர் நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியக தடுப்பில், சுமார் ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

 

இந்த நிலையில் நாகோயாவில் உள்ள வழக்கு விசாரணைக்கான குடிமக்கள் குழு, இலங்கை யுவதியின் மரணத்திற்கு காரணமான தொழில்முறை அலட்சியத்திற்காக அந்த நேரத்தில் குறித்த குடிவரவு சேவைகள் பணியகத்தில் பணியாற்றிய பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட முடியுமா என்பதை சட்டத்தரணிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.

எனினும் விசாரணைகளை மேற்கொண்ட சட்டவாதிகள், யுவதியின் மரணத்திற்கான காரணங்கள் அல்லது அவரது மரணத்திற்கு வழிவகுத்த காரணங்களை குறிப்பிட முடியவில்லை என அறிவித்துள்ளனர்.

இருந்த போதும் மரணமான யுவதியின் குடும்பத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, ஸோய்ச்சி இபுசுகி (Shoichi Ibusuki), ”அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்த குற்றத்தை மூடிமறைத்து அலட்சியம் செய்கின்றனர்” என குற்றம் சுமத்தியுள்ளார்.

ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி ஒரு மாணவியாக 2017ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றார். எனினும் வீசா காலம் முடிந்தும் அங்கு தங்கியிருந்தமைக்காக குடிவரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தனுஷ்க குணதிலக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை – அவுஸ்ரேலிய சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றம் விடுதலையளித்து தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அனுமதியின்றி உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

32 வயதான அவர், டி20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்ரேலியா சென்றிருந்தபோது, இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

 

இதனை தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் வழங்கும் காணொளி கடந்த வாரம் நீதிமன்றில் காட்டப்பட்டது.

 

இதனை தொடர்ந்து அவரது நேர்காணலில் உண்மை வெளிப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண் எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு தனுஷ்க குணதிலகாவை குற்றமற்றவர் என்று அறிவித்தார்.

இதேவேளை சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த தனுஷ்க குணதிலக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

 

“நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீதிபதியின் தீர்ப்பில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக. இன்று எனது சட்டத்தரணி முருகன் தங்கராஜ் இங்கு இல்லாவிட்டாலும் அவருக்கும் மற்ற வழக்கறிஞர்களுக்கும் மிக்க நன்றி. எனது மேலாளர் எலீன் மற்றும் எனது பெற்றோர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சிலர் அனைவரும் என்னை நம்பினார்கள். அது எனக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது. அதனால் இறுதியில் நீதிபதி சரியான முடிவை எடுத்தார். நான் சொன்னது போல் அந்த முடிவு எல்லாவற்றையும் சொல்கிறது. “எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடும் வரை என்னால் காத்திருக்க முடியாது.”

இதேவேளை தனுஷ்க குணதிலகவிற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்று பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜர்பைஜான் – அர்மேனியா இடையோன போர் – அகதிகளாக அலையும் மக்கள் !

ஐரோப்பாவிலிருந்து ஆசிய கண்டம் வரை ஐக்கிய சோவியத் சோஷலிஸ குடியரசு எனும் பெயரில் ஒருங்கிணைந்த பல நாடுகளுடன் 1922ல் இருந்த வந்த கூட்டமைப்பு, 1991ல் 15 நாடுகளாக உடைந்தது. இவற்றில் அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கருங்கடலுக்கும் கேஸ்பியன் கடலுக்குமிடையே உள்ள தெற்கு காகஸஸ் மலைப்பகுதியையொட்டி உள்ள நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்கு உரிமை கொண்டாடி போர் நடைபெற்று வருகிறது.

2020ல் 6 வாரங்களாக நடைபெற்ற மிக பெரிய போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மக்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதியிலிருந்து அர்மேனியாவிற்குள் அகதிகளாக நுழைந்திருக்கின்றனர்.

கடந்த வாரம், இப்பகுதியை அஜர்பைஜான் கைப்பற்றியதிலிருந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சத்தில் தங்கள் உடைமைகளை விட்டு விட்டு அர்மேனியாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அப்பகுதியில் காலங்காலமாக வசித்து வந்த அர்மேனியர்களை அஜர்பைஜான்வாசிகளாக மாற்ற போவதாக அஜர்பைஜான் எச்சரித்திருந்தது. இவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தர அர்மேனியா முன் வந்திருக்கிறது.

“ஜோபைடன் வேண்டாம்“ – கருத்துக்கணிப்பில் வெளியான அமெரிக்கர்களின் அதிர்ச்சியான முடிவு !

அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 80) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அங்கு அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகள் தற்போதே சூடுபிடித்துள்ளன. இதற்கிடையே ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேசமயம் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில் சுமார் 44 சதவீதம் பேர் ஜோ பைடன் ஆட்சியில் தங்களது பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறி உள்ளனர். மேலும் சுமார் 37 சதவீதம் பேர் மட்டுமே ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 56 சதவீதம் பேர் இவரது செயல்பாட்டை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

 

அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்தை சுமார் 48 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது 2021-ல் அவர் தனது பதவியை இராஜினாமா செய்தபோது இருந்ததை விட 10 சதவீதம் அதிகம் ஆகும். 74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதிலாக வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என 62 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதன் மூலம் அங்கு தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இதேவேளை அண்மையில்  அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் செயல்படும் விமானப் படைக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது, அதிபர் ஜோ பைடன் கால் இடறி கீழே விழுந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஜோபைடனின் வயது தொடர்பில் அதிக கேள்வி எழுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.