01

01

“பயணத்தடைகளால் ஒமிக்ரோன் வைரஸை கட்டுப்படுத்த முடியாது.” – உலக சுகாதார ஸ்தாபனம்

பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரோன் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்தகைய தடைகளால் உலகளாவிய சுகாதார முயற்சிகள் மோசமாக பாதிக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டஒமிக்ரோன் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறித்த பாதிப்புள்ள தென்னாபிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹொங்கொங், பிரித்தானியா, உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணத் தடைகள் மூலம் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்ததுள்ளது.

மேலும் பயணத் தடைகள் மூலம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் மீது பெரும் சுமையையே ஏற்படுத்தும் என்றும் ஆபத்துக்களை நீக்கும் வகையில் உலக நாடுகள் அத்தியவாதிய சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

கரு்கலைப்பு உரிமை பிறக்காத மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.” – மைக் பென்ஸ்

அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய 1973 ஆம் ஆண்டு ரோ வி வேட் வழக்கை இரத்து செய்யுமாறு முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த தீர்ப்பு மில்லியன் கணக்கான பிறக்காத குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் தவறான முடிவு என்றும் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 15 வாரங்களுக்குப் பின்னர் கருக்கலைப்பைத் தடைசெய்யும் மிசிசிப்பி சட்டத்தின் மீதான வாதங்கள் இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளன.

இதனை அடுத்து இந்த வழக்கு மீதான தீர்ப்பு அடுத்த கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1973 ஆம் ஆண்டு தீர்ப்பு அமெரிக்காவில் பெண்களுக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வதற்கான முழு உரிமையையும், இரண்டாவது மூன்று மாதங்களில் வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் வழங்கியது.