13

13

20-20 உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் இன்று இலங்கை – பிரித்தானிய அணிகள் மோதல்

sri-lanka.jpgமேற்கிந்திய தீவுகளின் நடைபெற்றுவரும் 20-20 உலகக்கிண்ண போட்டியின் காலிறுதியின் இறுதிப் போட்டியில் அரையிறுதி வாய்ப்பிற்கான இலக்குடன் இலங்கை இந்திய அணிகள் பலப்பரீட்சை கண்டன. மிகவும் விறுவிறுப்பாக நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இலங்கை- இந்திய அணிகளுக்கிடையலான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன் படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கார்த்திக்இகம்பீர் இருவரும் களம் இறங்கினர்.கார்த்திக்13, கம்பீர்41, ரெய்னா63, டோனி23, யுவராஜ் சிங்1, பதான்13 ஒட்டங்களை பெற்றனர். இந்திய அணி உதிரிகளாக 09 ஓட்டங்களை பெற்றது. 20ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை எடுத்திருந்தது. இலங்கை அணியின் பந்து வீச்சில் துஷார, மலிங்க இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பெரேரா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குதுடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் ஜயவர்த்தன4, ஜயசூரிய 0, இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர். எனினும் இருவரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை .  பின்னர் களம் இறங்கிய ஏனைய வீரர்கள் டில்சான்33, சங்கக்கார46 ,  மத்தியூஸ்46, கப்புகெதர37, ஓட்டங்களை பெற்றனர். உதிரிகளாக 1 ஓட்டம் பெறப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது. இதனால் அரையிறுதி வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டது.  இந்திய அணியின் பந்து வீச்சு சார்பில் ஆகியோர் நெஹ்ரா இபதான் இருவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.வினய் குமார் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நேற்றுமுன்தினம் அவுஸ்திரேலியாவுட‌ன் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌‌தீவு அ‌ணி தோல்வி கண்டதால் மேற்கிந்திய தீவு அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.  இப்போட்டியில் பூவா தலையா வென்று முதலில் துடுப்பாடிய மே‌‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களையே பெற்றது.

கூடிய ஓட்டமாக சர்வான் 31 பந்துகளில் 26 ஓட்டங்களையும், சந்திரபோல் 18 ப‌ந்‌துகளை எதிர்கொண்டு 24 ஓட்டங்களையும் பெற்றனர்.  அ‌ணி‌த் தலைவ‌ர் கெ‌ய்‌ல் 4 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். அவுஸ்திரேலியா தர‌ப்‌பி‌ல் ‌‌‌ஸ்‌மி‌த் 3 வி‌க்கெ‌ட்டு‌ம், ஜா‌ன்ச‌ன், ஹ‌ஸ்‌ஸி ஆ‌கியோ‌ர் தலா 2 வி‌க்கெ‌ட்டுகளை கை‌ப்ப‌‌ற்‌‌றின‌ர்.  பின்னர் களம் இறங்கிய ஆஸ்‌ட்ரேலிய அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் அரையிறுதியில் முதலாட்டம் விருவிருப்பாக நடைபெறுமென கிரிக்கட் இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நாளை அவுஸ்திரேலியா அணியும் பாக்கிஸ்தான் அணியும் அரையிறுதியில் மோதவுள்ளன.

முதன்முறையாக நேற்று சிவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் ஜெனரல் பொன்சேகா

sarath_.jpgமுன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா முதல் தடவையாக நேற்று புதன்கிழமை சிவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதுடன் வன்முறைகளைத் தூண்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள பொன்சேகா வெவ்வேறான இராணுவ நீதிமன்ற விசாரணைகளையும் எதிர்கொண்டுள்ளார்.பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக அவர் கருத்துகளைத் தெரிவித்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பொன்சேகா நேற்று கொழும்பு பிரதம நீதிவான் சம்பா ராஜரட்ண முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த வருடம் சரணடைந்த தமிழ் புலிகளைக் கொல்லுமாறு ஜனாதிபதியின் இளைய சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாகப் பத்திரிகையொன்றுக்குப் பேட்டியளித்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டைப் பொலிஸ் விசாரணையாளர்கள் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளனர். பத்திரிகை தன்னை தவறாக மேற்கோள் காட்டியிருந்ததாக பொன்சேகா கூறுகிறார்.  இந்த மனு மீதான விசாரணை மே 26 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பார்வதியம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார் : சிவாஜிலிங்கம்

parwathy.jpgமலேசியா விலிருந்து கொழும்பை வந்தடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் நேற்று யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தார். இவரை முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அம்புலன்ஸ் வண்டி மூலம் நேற்றுக்காலை கொழும்பிலிருந்து அழைத்துச் செனறார்.

மத்திய மாகாண அமைச்சராக அனுஷியா பதவிப்பிரமாணம்

மத்திய மாகாண தமிழ்க் கல்வி, இந்துக் கலாசார கைத்தொழில் அமைச்சராக அனுஷியா சிவராஜா நேற்று புதன்கிழமை மத்திய மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இவ்வைபவத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டார்.

அனுஷியா சிவராஜா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி சங்க உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான அண்ணாமலையின் புதல்வியாவார். இவரது கணவர் சிவராஜா நுவரெலியா மாநகர சபைப் பிரதி மேயராக கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

வே.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றம் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து மத்திய மாகாண அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அத்துடன் நேற்று புதன்கிழமை மத்திய மாகாண விவசாய அமைச்சராக நிமல் பியதிஸ்ஸவும் சுகாதார அமைச்சராக சுனில் அமரதுங்கவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.