09

09

மட்டக்களப்பு நகரில் பாரிய குண்டுச் சத்தம் – செயலிழக்கசெய்யப்பட்டதாக அறிவிப்பு

udaya_nanayakkara_brigediars.jpgமட்டக் களப்பு நகரில் நேற்று பிற்பகல் 1.25 மணியளவில் பாரிய குண்டுச் சத்தமொன்று கேட்டது. மட்டக்களப்பு பிரதேசத்தில் மீட்கப்பட்ட குண்டுகள், கல்லடியிலுள்ள இராணுவ முகாமில் செயலிழக்கச்செய்யப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தனர்.

இப்பாரிய சத்தத்தினால் மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி போன்ற பகுதிகளிலுள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளதுடன், பல கட்டடங்கள் அதிர்ந்துள்ளன.

குறிப்பாக, கல்லடியிலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலயத்தின் கண்ணாடிகள் நொருங்கியுள்ளன. அத்துடன் கல்லடியிலுள்ள இலங்கை மின்சார சபையின் அலுவலகத்திலிருந்த கண்ணாடிகளும் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் முன்வந்துள்ளது.

080909japan.jpgஇலங்கை அரசுடன் இணைந்து வடமாகாணத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு உதவி மற்றும் எனைய ஒத்துழைப்புக்களை வழங்க ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் முன்வந்துள்ளது.

ஜெயிக்கா நிறுவனத்தின் திட்டம்; மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நாயகம் மசாமி புவா தலைமையிலான குழுவினர் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீனை,அமைச்சின அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர்.

உயிரியல்வாயு காற்று மூலம் 159 சிறிய மின் திட்டங்களுக்கு அனுமதி; 2 வருடங்களில் பூர்த்தி

காற்று, உயிரியல் வாயு மற்றும் சிறிய நீர் மின் திட்டங்களினூடாக 500 மெகாவோர்ட் மின்சாரம் பெறுவதற் காக 159 சிறிய ரக மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. இந்தத் திட்டங்கள் இரு வருடங்களில் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

இலங்கையின் மொத்த மின்சாரத் தேவையில் 10 வீதத்தை சிறிய ரக மின் திட்டங்களினூடாக பெற மின்சக்தி எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. காற்றினூடாக 80 மெகாவோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள தாகவும் அமைச்சு கூறியது.

குப்பை கூளங்கள், கரும்புச் சக்கை, உமி என்பவற்றினூடாக மின்சாரம் உற்பத்தி செய்யும் பல திட்டங்கள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இவற்றினூடாக 130 மெகாவோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இரண்டு வருட காலத்தினுள் ஆரம்பிக்கப்படாத மின் திட்டங்களின் அனுமதிகள் இரத்துச் செய்யப்பட்டு வேறு தரப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சு எச்சரி த்துள்ளது.

9. 9. 9 கற்பிட்டியில் 6 நட்சத்திர ஹோட்டல்

sri-lanka-hotels.jpgஇலங் கையில் முதல் தடவையாக ஆறு நட்சத்திர ஹோட்டலொன்று அமைக்கப்படவுள்ளது. கற்பிட்டி பகுதியில் அமைக்கப்படவிருக்கும் இந்த ஹோட்டலுக்கான அடிக்கல் இன்று காலை நடப்படும்.

உலகிலேயே முன்னணியில் திகழும் ஹோட்டல் நிர்வாக நிறுவனமான ‘சிக்ஸ் சென்ஸஸ்’ இந்த ஆறு நட்சத்திர ஹோட்டலை முகாமைத்துவம் செய்யவிருப்பது இலங்கையின் சமாதானத்துக்கும் புகழுக்கும் கிடைத்திருக்கும் பெரும் கீர்த்தி என சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலாச் சபையில் நேற்று மாலை, கற்பிட்டியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ‘டச் பே ரிசோட்’ எனும் ஆறு நட்சத்திர ஹோட்டல் குறித்து விளக்கும் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.

இதில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் சுமார் 30 வருடகாலமாக நீடித்துவந்த பயங்கரவாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முடிவுக்கு வந்ததையடுத்து சர்வதேச தரம் கொண்ட நிறுவனங்கள் நாட்டில் முதலீடு செய்யவும் முகாமைத்துவம் செய்யவும் முன்வந்துள்ளன. இதன் மூலம் சுற்றுலாத்துறை என்றுமில்லாதவாறு உயர்ந்த ஸ்தானத்தை அடையவுள்ளதெனவும் அவர் தெரித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் சுற்றுலா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ‘டச்பே ரிசோட்ஸ்’ தலைவர் நீல் த சில்வா, இலங்கை சுற்றுலாத்துறை ஊக்கவிப்பு பணியகத்தின் தலைவர் பேர்னார்ட் குணதிலக்க, டச்பே ரிசோட்ஸ் பிரதம அபிவிருத்தி அதிகாரி பெட்ரிக் கூட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில்:- உலகின் முன்னணியில் திகழும் ‘சிக்ஸ் சென்ஸஸ்’ நிறுவனம் இலங்கை கரையோரத்துக்கு வருவது எமது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும். இது நீண்ட கால திட்டமாகும். 2011 இல் இது நிறைவு பெறுமென எதிர்ப்பாக்கின்றோம். ஆறு நட்சத்திர ஹோட்டலை அமைப்பதன் மூலம் 2010 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கற்பிட்டி டச்பே தீவில் 09-09-2009 ஆம் திகதியாகிய இன்று காலை 9 மணி 9 நிமிடமும் 9 செக்கனில் ஆறு நட்சத்திர ஹோட்டலுக்கான அடிக்கல் நடப்படவுள்ளது. இந்நிகழ்வுக்காக நான்கு மதங்களைச் சேர்ந்த மத குருமாரும் வரவழைக்கப்பட்டிருப்பதாக ‘டச்பே ரிசோஸ்ட்’ ஹோட்டலின் தலைவர் நீல் த சில்வா கூறினார்.

‘டச்பே ரிசோட்ஸ்’ ஆறு நட்சத்திர ஹோட்டலானது 175 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளது. 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பப்பில் இயற்கையான சதுப்பு நிலத்திற்கு மத்தியில் இது அமைக்கப்படும். முதற்கட்டமாக 5 ஆயிரம் அறைகள் அமைக்கப்படவுள்ளன.

பின்னர் அவை விரிவு படுத்தப்படும். ஒரு அறைக்கு ஒரு இரவுக்கு முதற்கட்டமாக ஆகக் குறைந்தது 850 டொலர் வீதம் அறவிடத் தீர்மானித்திருப்பதாகவும் நீல் த சில்வா தெரிவித்தார்.

இரண்டு கட்டடங்களை மாத்திரமே கொண்டு உருவாக் கப்படவிருக்கும் இந்த ஆறு நட்சத்திர ஹோட்டலின் முகப்பு வழமைபோல் கடலை நோக்கி அமையாது வித்தியாசமாக ஏரிப்புறமாக அமையவிருப்பது இதன் சிறப்பம்சம் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங் கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து ள்ளது. இயற்கை எழில் கொண்ட கற்பிட்டி பகுதிக்கான மவுசு அதிகரித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 4 ஆயிரம் அறைகள் மாத்திரமே அப்பகுதியிலுள்ள விடுதிகளில் இருக்கிறது.

இது எமக்கு கவலையளிக்கிறது. அதனை நிவர்த்தி செய்யும் விதமாக ‘டச்பே ரிசோட்ஸ்’ எனும் ஆறு நட்சத்திர ஹோட்டல் ‘சிக்ஸ் சென்ஸஸ்’ முகாமைத்து வத்தின் கீழ் அங்கு அமைக்கப்படவிருப்பது சுற்றுலாத்து றைக்கு மட்டுமன்றி இலங்கைக்கே பெருமை சேர்க்கும் விடயமென செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் பேர்னார்ட் குணதிலக்க தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு 150 மில்லியன் ரூபா நஷ்டஈடு – வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

rohitha-bogollagama_s.jpgவெளி நாடுகளில் தொழில்புரியும் காலத்தில் விபத்துக்களில் உயிரிழந்த இலங்கையர்களின் உறவினர்களுக்கு நஷ்டஈடாக வழங்க 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
 
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரிகையில் விபத்துக்களின்போது உயிரிழந்த இலங்கையர்களின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வெளிநாடுகளில் தொழில்புரியச் சென்று அங்கு விபத்துக்குள்ளானவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது இலகுவான விடயமல்ல.  இந்நிலையில் இலங்கையர்களுக்கு இந்தளவு பாரிய நஷ்டஈட்டுத் தொகையை வழங்கக் கிடைத்தமை கடந்த மூன்று வருடங்களில் வெளிவிவகார அமைச்சு ஈட்டிய பாரிய வெற்றியாகும்.

வெளிநாடுகளில் தொழில் புரியும்போது விபத்துக்களில் சிக்கும்  இலங்கையர்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது. அவ்வாறே அங்குள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சின் கொன்சியூலர் பிரிவு அந்நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்வில் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் காலத்தில் விபத்துக்களில் உயிரிழந்த இலங்கையர்களின் உறவினர்களுக்கு 45 மில்லியன் ரூபா நஷ்டஈட்டுத் தொகையாக வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இராக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கப் படையினர் நால்வர் பலி

இராக்கின் பல இடங்களில் இடம் பெற்றுள்ள பல சாலையோர தொடர் குண்டு வெடிப்புகளில், நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் எட்டு இராக்கிய போலீசார் ஆகியோர் பலியாகியுள்ளனர்.

அந்நாட்டின் வடபகுதியில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமது துருப்பினர் நாட்டு வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலக்கான போது மூவரும், தெற்கு பாக்தாதில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவரும் பலியாகியுள்ளதாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது

இதே போன்று வட இராக்கில் இடம் பெற்ற ஒரு குண்டுத் தாக்குதலில் அந்த நகரின் போலீஸ் தலைவரும் அவரது மூன்று சகாக்களும் பலியாகியயுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு கிர்குக் நகருக்கு அருகில் இடம் பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் இருக்கும் எண்ணெய் வளங்களை கட்டுப்படுத்தவும், அதிகாரத்தை கைப்பற்றவும் இராக்கிய குருதுகள், அரபுகள் மற்றும் துர்குமான்கள் ஆகியோர்கள் போட்டியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விமானிகள் வேலைநிறுத்தத்தால் பயணிகள் தவிப்பு – விமான சேவைகள் ரத்து

abu-dhabi-flight.jpgஇந்தியாவின் தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டிகளின் வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்காண பயணிகளின் பல விமான நிலையங்களில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களது சகாக்கள் இருவர் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பித்த காரணத்துக்காக கடந்த மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நிறுவனத்தின் ஆயிரம் விமான ஓட்டிகளில் அறுநூறுக்கும் அதிகமானவர்கள் உடல் நலக் குறைவு என்று கூறி பணிக்கு வரவில்லை.

இந்தியாவின் மிகப்பெரும் விமான நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸின் மூன்றில் ஒரு பங்கு அளவிலான விமானங்கள் இன்று செவ்வாய்கிழமை ரத்து செய்யப்பட்டன.

பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களது இரு சகாக்களும் மீண்டும் பணியில் அமர்த்தப்படும் வரையில் தங்களது வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டிகள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் முக்கிய இடங்களுக்கும், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் தனது விமான சேவையை நடத்துகிறது.

ரூ.500 சம்பள உயர்வு கிடைக்கும் வரை ஒத்துழையாமை போராட்டம் தொடரும் – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை ஒத்துழையாமை போராட்டத்தை தொடரப்போவதாக இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டிக்குமிடையே நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது.

இதையடுத்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் முகமாக நேற்று அமைச்சர் தொண்டமான் ஊடகவியலாளருடனான சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டிக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் முதலாம் ஆண்டில் 330 ரூபாவாகவும், இரண்டாம் ஆண்டில் 360 ரூபாவாகவும் அதிகரித்து தருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது.

தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்ப ளம் 500 ரூபாவாக அதிகரிக்குமாறு தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி விடுத்த கோரிக்கைக்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்காததையடுத்து ஒத்துழையாமை போராட்டத்தை தொடரப் போவதாகவும் சாதகமான முடிவு எட்டப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், தோட்ட நிர்வாக ஊழியர்கள், கணக்கப்பிள்ளை, மேற்பார்வையாளர்கள் ஆகியோரின் பணிப்புரைகளை ஏற்காமல் தாமாகவே தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உற்பத்தியாகும் தேயிலையை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்காது தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதாரண அரச ஊழியர்கள் மாதமொன்றுக்கு 11,500 ரூபா முதல் 13,000 ரூபா வரை சம்பளமாக பெறுகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தின் வெளிநாட்டு வருமானத்தை தேடித்தரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வை காணும் முகமாக தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

தொழிலாளர்களுக்கு பாதிப்பேற்படாத வகையில் புதிய முறையிலான ஒத்துழையாமை போராட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இதர சிறிய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கேட்டுக் கொண்டார். நற்று மாலை நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதியமைச்சர்களான முத்துசிவலிங்கம், ஜெகதீஸ்வரன், இரா. யோகராஜன், கே.வேலாயுதம், எஸ்.இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாள்தோறும் 12 பேர் தற்கொலை செய்வதாக ஸ்ரீலங்கா சுமித்ரயோ தகவல்

rope-0000.jpgஇலங் கையில் நாள்தோறும் 12 பேர் தற்கொலை செய்து கொள்வதாக ஸ்ரீலங்கா சுமித்ரயோ என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.  மேலும் நாள் தோறும் சுமார் 120 பேர் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்வதாகவும் பல்வேறு மன உலைச்சல்களினால் பாதிக்கப்படுவதாகவும் அது தெரிவிக்கின்றது.

கடந்த காலங்களைவிட தற்போது, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் பெண்கள் அதிகமாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும் தற்கொலை செய்து கொள்வதில் அதிகமாக ஆண்களே முன்னிற்பதாகவும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிடுகிறது.

ஆப்கன் அதிபர் தேர்தலில் ஹமீத் கார்சாய் முன்நிலை

ஆப்கானிஸ்தானின் அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பில், தற்போதைய அதிபர் ஹமீத் கர்சாய் அவர்கள், தற்போது 54 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அவருக்கு அடுத்த படியாக அதிக வாக்குகளைப் பெற்றுள்ள, அப்துல்லா அப்துல்லா அவர்கள் 28 வீதத்துக்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை முறைகேடுகள் குறித்த ஆதாரங்கள் காரணமாக 600 வாக்குச் சாவடிகளின் முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, எந்தவொரு வேட்பாளருக்கும் 95 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்த சாவடிகளில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் வாக்களிப்பு குறித்த பரிசோதனை நடத்தப்படும் என்றும், தேர்தல் முறையீட்டு ஆணையம் அறிவித்திருந்தது.