02

02

ஜப்பானின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

japan-new-pri.jpgஜப்பானின் புதிய பிரதமராக இன்னும் இரு வாரங்களின் பின்னர் பதவியேற்கவுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவர்  யுகியோ ஹடோயாமாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

அச்செயதியில் குறிப்படப்பட்டுள்ளதாவது, உங்கள் தலைமையில் ஜப்பானில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உங்கள் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளனர். நீங்கள் அடைந்துள்ள வரலாற்று வெற்றியானது ஜப்பானில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த வழியமைக்குமென நம்புகிறேன்.

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையில் பல நூற்றாண்டு கால சரித்திர மற்றும் கலாசாரத் தொடர்புகள் உண்டு. எமது இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் ஜப்பான் வழங்கிய தாராள உதவிகளுக்கான நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர நல்லுறவு எதிர்காலத்தில் மேலும் பலமடையும் என நம்புகிறேன் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அடுத்த தேசத்துக்கு மகுடம் கண்டியில்

daladamaligawa.jpgஅடுத்த தேசத்துக்கு மகுடம் (தயட்ட கிருல) கண்காட்சி மலைநாட்டின் தலைநகரமான கண்டியில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடிக் கண்கானிப்பில்  இந்நக் கண்காட்சிப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சர்வதேச பௌத்த மத்திய நிலையமான பல்லேகெல  என்ற இடத்தில் இடம்பெறும்.
பல்லேகெல மத்திய நிலையம் 25 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டமைந்துள்ளது. கண்னொருவையிலுள்ள புதிய வளஅபிவிருத்தி மத்திய நிலையத்தில் பிரதிநிதி அமைச்சர் ரஞ்சித் சிம்பலாப்பிட்டிய தலமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில் இந்த இடம் கண்காட்சி நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டது. 

இக்கண்காட்சியில் புலிகளை தோற்கடிக்கப்பயண்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களும் பார்வைக்கா  வைக்கப்படவுள்ளன.  தேசத்துக்கு மகுடம் கண்காட்சி தேசிய மட்டத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.