September

September

வடக்கில் அரச உத்தியோகத்தர்கள் நியமனம்!

appoinmentfornorth.jpgவட மாகாணத்தில் அரச சேவையில் புதிதாக 30 உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழு நியமித்துள்ளது. திருகோணமலையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜனரல் பீ.ஏ.சந்ரசிறி இதற்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.

வழங்கப்பட்ட நியமனங்களுக்கான தகுதி உடையவர்கள் கிளிநொச்சிää முல்லைத்தீவு,  மன்னார் மற்றும்; வவுனியா மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி : ஆஸ்ட்ரேலியா வெற்றி

999cri.jpgநேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி 6 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட நாட்-வெஸ்ட் தொடரில் 3-0 என்ற போட்டிக் கணக்கில் ஆஸ்ட்ரேலியா முன்னிலை பெற்றுள்ளது. ஸ்கோர் விபரம் வருமாறு

NatWest Series [Australia in England] – 3rd ODI

England v Australia

Australia won by 6 wickets (with 9 balls remaining)
ODI no. 2885 | 2009 season
Played at The Rose Bowl, Southampton
9 September 2009 – day/night (50-over match)
       
 England innings (50 overs maximum)
 AJ Strauss c Clarke b Hauritz  63 
 RS Bopara  c Hopes b Bracken  10
 MJ Prior†  c Hopes b Johnson  0
 OA Shah  lbw b Johnson  8
 PD Collingwood  c Bracken b Watson  28
 EJG Morgan  c Johnson b Lee  43 
 LJ Wright  c sub (AC Voges) b Hopes  9
 TT Bresnan  not out  31 62 37 3 0 83.78
  GP Swann  lbw b Watson  3 
 RJ Sidebottom  c White b Watson  24 
 Extras (lb 1, w 4, nb 4) 9     
      
 Total (9 wickets; 50 overs) 228 (4.56 runs per over)
 Did not bat JM Anderson 
Fall of wickets1-41 (Bopara, 7.5 ov), 2-41 (Prior, 8.4 ov), 3-62 (Shah, 14.5 ov), 4-98 (Strauss, 22.3 ov), 5-132 (Collingwood, 31.4 ov), 6-147 (Wright, 35.4 ov), 7-183 (Morgan, 42.3 ov), 8-188 (Swann, 43.3 ov), 9-228 (Sidebottom, 49.6 ov) 
        
 Bowling    B Lee 9 1 58 1 
 NW Bracken 10 0 36 1
 MG Johnson 10 1 39 2  
 NM Hauritz 6 0 24 1 
 SR Watson 8 0 36 3

Australia innings (target: 229 runs from 50 overs)
 SR Watson  lbw b Anderson  7 
 TD Paine†  lbw b Collingwood  29 
 CL White  c Sidebottom b Wright  105 
 MJ Clarke*  b Swann  52
 CJ Ferguson  not out  20  
 MEK Hussey  not out  8  
 Extras (b 1, lb 2, w 6) 9     
      
Total (4 wickets; 48.3 overs) 230 (4.74 runs per over)
Did not bat JR Hopes, MG Johnson, B Lee, NM Hauritz, NW Bracken 
Fall of wickets1-16 (Watson, 4.6 ov), 2-52 (Paine, 13.3 ov), 3-195 (Clarke, 43.4 ov), 4-220 (White, 47.2 ov) 
        
 Bowling
 JM Anderson 9.3 1 52 1
 RJ Sidebottom 10 1 39 0
 TT Bresnan 10 1 46 0  
  PD Collingwood 7 0 39 1 ) 
  LJ Wright 7 1 16 1
 GP Swann 5 0 35 1
 
Match details
Toss England, who chose to bat
Series Australia led the 7-match series 3-0
Player of the match CL White (Australia)
Umpires PJ Hartley and AL Hill (New Zealand)
TV umpire RA Kettleborough
Match referee RS Mahanama (Sri Lanka)
Reserve umpire NJ Llong
 

தலிபான்களால் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் செய்தியாளர் மீட்பு

100909press.jpgஆப்கா னிஸ்தானில் நேட்டோ சிறப்புப் படையினர் நடத்திய ஒரு பிரமிப்பூட்டும் வகையில் ஹெலிகாப்டர் மூலமான மீட்பு நடவடிக்கையில், தலிபான்களால் கடத்தப்பட்டிருந்த ஒரு பிரிட்டிஷ் செய்தியாளர் மீட்கப்பட்டார்.

ஆனால், இந்த நடவடிக்கையில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில், இவரது சகாவான ஆப்கானியர் ஒருவரும், பிரிட்டிஷ் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதில் வேறு இரு ஆப்கானிய பொதுமக்களும் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூயோர்க் டைம்ஸ் செய்தியாளரான ஸ்டீபன் ஃபரலும், சுல்தான் முனாடியும் பிடித்து வைக்கப்பட்டிருந்த தலிபான்களின் வளாகம் ஒன்றினுள் நேட்டோ படையினர் தரையிறங்கினார்கள். படையினர் மேலும் கவனமாக இருந்திருந்தால், செய்தியாளர் முனாடி காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று ஆப்கான் செய்தியாளர் அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

அமைச்சர் திஸ்ஸவிதாரண இன்று யாழ்.விஜயம்

100909tissa.jpgஇனப் பிரச்சினைக்கான அனைத்துக் கட்சித் தெரிவுக்குழுவின் தலைவரும் விஞ்ஞான, தொழில் நுட்பத்துறை அமைச்சருமான திஸ்ஸ விதாரண இரண்டு நாள் விஜயமாக இன்று யாழ்ப்பாணம் வருகின்றார். இன்று காலை 9.30 மணிக்கு யாழ். செயலகத்தில் இடம்பெறும் விஞ்ஞான தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொள்ளும் அமைச்சர் பின்னர் பிரதேச செயலகங்களுக்குச் செல்வார். யாழ்ப்பாணம், கோப்பாய், நல்லூர் ஆகிய பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள விஞ்ஞான, தொழில்நுட்ப வள நிலையங்களை அமைச்சர் பார்வையிடுவார்.

மாலை 5.30 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் அதிகாரப்பகிர்வு: இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்னும் பொருளில் உரை நிகழ்த்துவார். இந்த நிகழ்வில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. நாளை காலை கரவெட்டிப் பிரதேச செயலகத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப வள நிலையத்தைத் திறந்து வைப்பார்.

தோட்ட தொழிலாளர் சம்பள விவகாரம் – பேச்சில் தீர்வு கிட்டாவிடின் அரசு தலையிட்டு தீர்த்து வைக்கும்

26parliament.jpgதோட்டத் தொழிலாளர்க ளின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்க ளும் முதலாளிமார் சம்மேளனமும் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டுள்ளன. அதில் தீர்வுகிட்டாவிட்டால் அரசாங்கம் தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்குமென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி. எம். ஜயரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இப் பிரச்சினையிலிருந்து அரசாங்கம் ஒரு போதும் நழுவிவிடவில்லை.

தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டக் கம்பனிகள் ஆகிய இரு தரப்பதையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் இத்துறை வீழ்ச்சியடைந்துவிடும் என்பதை உணர்ந்தே அரசாங்கம் செயற்படுகின்றதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பி.யும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக எழுப்பிய பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனக் கோரி பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப்மைக்கல் பெரேரா எம்.பி. விசேட கவனயீர்ப்புப் பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றினார்.

இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி, மனோ கணேசன் எம்.பி., அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோரும் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டி. எம். ஜயரத்ன மேலும் தெரிவிக்கையில்; தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண நீண்டகாலமாக பேச்சுவார்த் தைக்ள நடத்தப்பட்டு வருகிறது. தொழிற்ச ங்கக் கூட்டமைப்புக்கும் முதலாளிமார் சம் மேளனத்துக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை. இதற்கி டையில் நாம் இது பற்றி அழுத்தம் கொடு ப்பது முறையல்ல.

இப் பேச்சுவார்த்தை நிறைவில் தீர்வு எட்டப்படாதபட்சத்தில் அரசாங்கம் இதில் தலையிட்டு தோட்டத் தொழிலாளர்களுக் குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க அர சாங்கம் தயாராகவுள்ளது.

எனினும் இதனை அரசியலாக்க வேண்டாம் இது ஒரு தேசிய வருமானம் சம்பந்தமான பிரச்சினை என் பதை சகலரும் உணர்ந்து செயற்படுவது அவசியம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி கூறியதாவது:

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை வென்றெடுப்பதில் தொழிற் சங்கங்களுக்குள்ள உரிமையை வழங்குவது அவசியம். கூட்டுக்கமிட்டி பேச்சுவார்த்தை அல்லது சம்பள நிர்ணயசபை இரண்டின் மூலம்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்றார்.

அரசு தலையிட வேண்டுமென நாம் கேட்க வில்லை. சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதில் தொழிற்சங்கங்களுக்கு உள்ள உரிமை கொடுக்கப்படவேண்டுமெனவும் பிரதியமைச்சர் கூறினார்.

காங்கிரஸில் சேர்ந்தார் ரோஜா

999-roja.jpgராசியில் லாதவர் என்ற பலத்த எதிர்ப்புக்கிடையே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார் நடிகை ரோஜா. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்த ரோஜா, சித்தூர் மாவட்டம், நகரி, சந்திரகிரி தொகுதிகளில் இரண்டுமுறை போட்டியிட்டுத் தோற்றார். சொந்தக் கட்சியினரே தன்னைத் தோற்கடித்து விட்டதாகக் குற்றம் சாட்டிய அவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டமிட்டரா.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன், அவரைச் சந்தித்து, காங்கிரசில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், ராசியில்லாத அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என ஆந்திர காங்கிரசார் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்குமேல் சும்மா இருந்தால், ‘ஜோலியை முடித்துவிடுவார்கள்’ என பயந்த ரோஜா, நேற்று ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்தார். காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேர்ந்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், “தெலுங்கு தேச கட்சியிலிருந்து நான் விலகுவதாக, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். 10 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி காங்கிரஸ் கட்சிதான் எனக்கு எல்லாமும். அந்தக் கட்சிக்காக உழைப்பேன்!” என்றார். 

பாலித கோஹணவுக்கு விசா வழங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மறுப்பு

Dr Kohonaஇலங் கையின் வெளியுறவுச் செயலர் கலாநிதி பாலித கோஹணவுக்கு விசா வழங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மறுத்திருப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் வெளியுறவுச் செயலரின் விசா விண்ணப்பம் போதிய கால அவகாசத்துடன் கையளித்திருக்கவில்லை எனக் காரணம் கூறி நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் கலாநிதி பீற்றர் ஹேய்ஸை நேரில் அழைத்து விளக்கம் கோருவதற்கு இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெற்றோரைப் பிரிந்த இரு குழந்தைகள் வவுனியா சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பு

999children.jpgபெற் றோரைப் பிரிந்த நிலையில் திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையைச் சேர்ந்த சகோதரிகளான இரண்டு குழந்தைகளை கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றம் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அருளகம் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

தயாபரன் புகழரசி என்ற 4 வயது சிறுமியும், தயாபரன் சாகலரசி என்ற 2 வயது குழந்தையுமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அறங்காவலர் அவையின் செயலாளர் ஆறுமுகம் நவரட்ணராஜா தெரிவித்துள்ளார்.

தமது சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற இந்தக் குழந்தைகளின் பெற்றோர் அல்லது இரத்த உறவினர்கள் இருந்தால் ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு சிவன்கோவில் அறங்காவலர் அவையின் செயலாளர் கோரியுள்ளார்.

புல்மோட்டை இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த இவர்களை இனங்கண்ட சிறுவர் பராமரிப்பு அதிகாரிகள், இவர்கள் தொடர்பாக கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதையடுத்தே நீதிமன்றம் இவர்கள் இருவரையும் வவுனியா கோவில்குளம் அருளகம் சிறுவர் இல்லத்தி்ற்கு அனுப்பி வைத்துள்ளது

இலங்கைக்கு இந்திய அணி செல்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

999.jpgஇலங் கையில் நடைபெறும் முக்கோண கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக, இந்திய கிரிக்கட் இலங்கை செல்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறுவதாக கூறி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு 512 சட்டத்தரணிகள் ஆதரவு கையொப்பங்களை இட்டிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இடைக்கால தடையை விதிக்க சென்னை மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.  இந்த மனுவின் பிரதிவாதியாக குறிப்பிட்ப்பட்டிருந்த இந்திய கிரிக்கட் சபை, நேற்று தமது விளக்கத்தை நீதிமன்றத்தில் அளித்திருந்தது.

அதில் தமது சபைக்கு இந்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை செய்வதில்லை என்றும் தமது சபையை அரசாங்கம் அமைக்கவில்லை என்றும் அதில் தெரிவித்திருந்தது. எனவே இந்த மனுத்தாக்கல்  தொடர்பில் தமக்கு பதிலளிக்கமுடியாது என்றும் இந்திய கிரிக்கட் சபை குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையில் நீதிபதிகள் குழு இடைக்கால தடையுத்தரவை விதிக்க மறுத்துள்ளது

யாழ்ப்பாணத்திற்கு ஏ-9 ஊடாக காஸ் சிலிண்டர்கள் அனுப்பி வைப்பு

2009_sep_04.jpgநீண்ட கால இடைவெளிக்கு பின்பு தரை வழி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் லொறிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், விற்பனைக்கான முச்சக்கரவண்டிகளும் லொறிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

யுத்தம் முடிவடைந்து நிலைமை வழமைக்கு வந்து கொண்டு இருப்பதினால் அனைத்து பொருட்களையும் கொழும்பு விலையில் யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு விற்பனை செய்ய வசதி வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தினமும் ஏ-9 வீதி வழியாக பொருட்களை ஏற்றிச் செல் லும் லொறிகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் புறப்பட்டு வருகின்றன.

அதேநேரம் வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடை யிலான பயணிகள் இபோச பஸ் சேவை தினமும் 10 முதல் 15 வரையில் இரு வழி பயணத்தினை மேற்கொள்கின் றன. யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் திராட்சைப்பழங் கள் மற்றும் வாழைப்பழங்கள் விற்பனைக்கு வவுனியா கொண்டுவரப்பட்டுள்ளன.