28

28

முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அபார வெற்றி

cricket1.jpgபங்களா தேஷ் கிரிக்கெட் அணி மே.தீவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரு கிறது. 2 டெஸ்டிலும் வென்று பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதிய முதல் நாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. “நாணயச் சுழற்சியில் வென்ற மே. தீவு முதலில் பங்களாதேஷை “பேட்டிங்” செய்ய அழைத்தது.

பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 246 ஓட்ட ங்கள் எடுத்தது.  முகம்மது அஸ்ரப் 57 ஓட்டமும், தற்காலிக கப்டன் சகிப் அல்-ஹசன் 54 ஓட்டமும் மகமதுல்லா 42 ஓட்டமும் எடுத்தனர். ரோச் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய மே.தீவு அப்துல் ரசாக்கின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 43.4 ஓவரில் 194 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி பெற்றது. மே.தீவில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

மே.தீவு அணியில் சுமித் அதிகபட்சமாக 65 ஓட்டம் எடுத்தார். அப்துல் ரசாக் 39 ஓட்டம் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அவரே ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.இந்த வெற்றி மூலம் 3 போட்டித் தொடரில் பங்களாதேஷ் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2 வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

ஆபாச இணையத் தளங்களை மூடிவிடுமாறு உள்நாட்டு சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தல்

computer.jpgபாலியல் மற்றும் ஆபாச விடயங்களை உள்ளடக்கிய இணையத் தளங்களை மூடிவிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நேற்று சகல உள்நாட்டு இணையத்தள சேவை வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாலியல் விடயங்களுடன் தொடர்புள்ள 12 இணையத் தளங்களை தடை செய்யுமாறு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதிவான் நிஷாந்த ஹப்புஆராச்சி இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவுக்கு விடுத்த உத்தரவுக்கு அமையவே இந்த அறிவுறுத்தலை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  இவ்வாறான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணையத் தளங்களைக் கண்டுபிடிப்பதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனகராயன்குளம் பொலிஸ் நிலையத் திறப்பு விழா

புளியங்குளம் ஏ-9 பிரதான வீதியின் கனகராயன்குளம் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் ஆகியன எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சகல வசதிகளையும் கொண்ட இந்த பொலிஸ் நிலையம் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள இந்த வைபவத்தில் பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்ரமரத்ன மற்றும் அரசியல் முக்கிஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

மாணவி மீது வல்லுறவு ஒருவருக்கு விளக்கமறியல்

images000.jpgபாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இருபிள்ளைகளின் தந்தையை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. குருவிட்ட புஸ்தல்ல மகாவித்தியாலயத்தில் 8 ஆம் தரத்தில் கல்விகற்கும் 13 வயதான இம்மாணவி பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் அருகிலுள்ள நீர் நிலையொன்றுக்கருகில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு வல்லுறவுக் குட்படுத்தப்பட்டதாக மாணவியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இரத்தினபுரி பட்டுகெதர பகுதியில் மறைந்திருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் உத்தரவிட்டார்.

யாழ். குடாவில் சதொச விற்பனை நிலையம் – இன்று அங்குரார்ப்பணம்

யாழ். குடாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கும் நோக்குடன் மூன்று கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களை அங்கு (சதொச) அமைக்க வர்த்தக நுகர்வோர் அமைச்சு தீர்மானித்துள்ளது. முதலாவது கூ. மொ. வி. நிலையம் யாழ். வின்சர் திரையரங்கில் இன்று (28) காலை திறந்து வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்தன, சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சதொச தலைவர் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

யாழ். குடாவில் அத்தி யாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்ப ட்ட அதிகாரிகளுக்குப் பணித்திருந்தார். இதன்படி அங்கு கொழும்பு விலைகளில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் வழங்குவதற்காக கூ. மொ. வி. களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய இரு கூ. மொ. விகளும் விரைவில் திறக்கப்படவுள்ளன