பங்களா தேஷ் கிரிக்கெட் அணி மே.தீவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரு கிறது. 2 டெஸ்டிலும் வென்று பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதிய முதல் நாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. “நாணயச் சுழற்சியில் வென்ற மே. தீவு முதலில் பங்களாதேஷை “பேட்டிங்” செய்ய அழைத்தது.
பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 246 ஓட்ட ங்கள் எடுத்தது. முகம்மது அஸ்ரப் 57 ஓட்டமும், தற்காலிக கப்டன் சகிப் அல்-ஹசன் 54 ஓட்டமும் மகமதுல்லா 42 ஓட்டமும் எடுத்தனர். ரோச் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய மே.தீவு அப்துல் ரசாக்கின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 43.4 ஓவரில் 194 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி பெற்றது. மே.தீவில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
மே.தீவு அணியில் சுமித் அதிகபட்சமாக 65 ஓட்டம் எடுத்தார். அப்துல் ரசாக் 39 ஓட்டம் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அவரே ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.இந்த வெற்றி மூலம் 3 போட்டித் தொடரில் பங்களாதேஷ் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2 வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.