22

22

ஏ 9 வீதி இன்று முதல் பொதுமக்கள் பாவனைக்கு

bus_ctb_logos.jpgபொது மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக  ஏ 9 வீதி இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்ற விசேட வைபவத்தில்  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இந்த வீதியைத் திறந்துவைத்தார்

இந்த வீதியினூடாக யாழ்ப்பாணத்திலிருந்து 210 பிரயாணிகள் இலங்கை போக்குவரத்து சபையின் ஐந்து பஸ் வண்டிகளில் இன்று மதவச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலியர்ட்ஸ் போட்டியில் கொழும்பு மாவட்ட சாம்பியன் பட்டம் ரவூப் ஹக்கீம் வசம்

akime-2.jpgஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், கொழும்பு மூவர்ஸ் விளையாட்டுக் கழக உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் எம்.பி. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிலியர்ட்ஸ் ஆட்டத் தொடரின் கொழும்பு மாவட்ட சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டார்.

கொழும்பு 7, ரீட் அவனியுவில் அமைந்துள்ள பிலியர்ட்ஸ், ஸ்னூகர் சம்மேளனத்தில் நடைபெற்ற இப்போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ரவூப் ஹக்கீம் எம்.பி. மூவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏ.எச். மனூர்ஜனை 176க்கு 153 புள்ளிகளால் வீழ்த்தினார். இந்த வெற்றியை தொடர்ந்து அகில இலங்கை மட்டத்திலான போட்டியில் விளையாட ரவூப் ஹக்கீம் எம்.பி. தகுதிபெற்றார்.

தனது ஓய்வு நேரத்தின்போது பிலியர்ட்ஸ் விளையாட்டில் நீண்ட காலமாக அதிக அக்கறை காட்டிவந்த ரவூப் ஹக்கீம் கொழும்பு மட்ட பிலியர்ட்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும். இதன்போது அவர் தனது காலிறுதி போட்டியில் வை.எம்.பி.ஏ.கழக வீரர் ஏ.டபிள்யூ.ஏ. ரட்ணசிறியை வீழ்த்தியதோடு, அரையிறுதியில் ஆர்.எஸ்.எஸ். கழக வீரர் என்.எம். ஷாமிலை வெளியேற்றினார்.

கொழும்பு மாவட்ட இறுதிச் சுற்றை தொடர்ந்து கண்டி, காலி மாவட்டங்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. இம் மாவட்டங்களுக்கான சாம்பியன் தெரிவுகளை தொடர்ந்து இன்று தொடக்கம் 25 ஆம் திகதி வரை பிலியர்ட்ஸ் ஸ்னூகர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை மட்டத்திலான போட்டிகள் நடைபெறவுள்ளன.

அகில இலங்கை மட்டத்திலான போட்டிகளுக்கு மொத்தம் 38 வீரர்கள் பங்கு பற்ற உள்ளனர். இவர்களில் 16 பேர் கொழும்பு மாவட்டத்தில் இருந்தும், மேலும் 16 பேர் கண்டி, காலி மாவட்டங்களில் இருந்தும், மிகுதி 6 வீரர்கள் கடந்த வருட சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றியவர்களில் இருந்தும் தெரிவுசெய்யப்படுவார்கள்.

இடம்பெயர்ந்த மக்களில் மூவாயிரம் குடும்பங்கள் 7ம் திகதிக்கு முன் 35 கிராமங்களில் மீள்குடியேற்றம் – பசில் ராஜபக்ஷ

basil.jpgஇடம் பெயர்ந்த சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதிக்கு முன்னர் 35 கிராமங்களில் மீள்குடியேற்றப்படுவரென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாணத்துக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். மீள்குடியேற்றப்படும் கிராமங்கள் அடையாளங் காணப்பட்டு அங்கு நிலக்கண்ணிகள் அகற்றப்பட்டுள்ளதோடு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (21) நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.வீதி, மின்சாரம், குடிநீர் வசதி, அடங்கலான சகல அடிப்படை வசதிகளும் அப்பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய பகுதிகளிலும் மிக விரைவில் மீள்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் வடக்கு வசந்தம் வேலைத் திட்டம் தொடர்பான மீளாய்வும் மேற்கொள்ளப்பட்டது. 180 நாள் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விவசாய வீதி, கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர், மீள்குடியேற்றம், நிலக்கண்ணி அகற்றல் என்பன குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

நீர்ப்பாசன திட்டங்களுக்கென 15.4 மில்லியன் ரூபாவும் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கான பாடசாலை கட்டிடங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்த 30 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பகுதியிலுள்ள மருத்துவ அதிகாரி காரியாலயத்தை புனரமைக்கவும் இரண்டு வாரத்தில் 10 மின்சாரத் திட்டங்களை ஆரம்பிக்கவும் விவசாயத் திட்டங்களுக்கென 32.6 மில்லியன் ரூபா ஒதுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

வடக்கு வசந்தம் 180 நாள் திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு மாத காலத்தில் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியும். சேதமடைந்த பாடசாலை கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகளின் குறைபாடுகள் என்பன தீர்க்கப்பட்டு வருகின்றன எனவும் பசில் ராஜபக்ஷ கூறினார்.

பாதுகாப்புப் படையின் உதவியுடன் மிதிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. தற்பொழுது வவுனியா மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1, 46, 298 பேர் வசிக்கின்றனர். மேலும் 35, 866 பேர் மீள் குடியேற்றப்படவுள்ளனர் என்றார்.

அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வவுனியா மாவட்டத்தை துரித அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, மாகாண பிரதம செயலாளர் எஸ். சிவகாமி மற்றும் மாகாண அமைச்சின் அனைத்து செயலாளர்கள், மாவட்ட அரச அதிபர், சகல திணைக்கள தலைவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

பங்களாதேஸ் டெஸ்ட் வரலாற்றில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி

bangladesh-cricket.jpgதற்போது மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான மேற்கிந்தியாவில் நடைபெற்றுவரும் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலுமே வெற்றிபெற்று பங்களாதேஸ் டெஸ்ட் அணி வரலாற்றில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றிபெற்றுள்ளது.

கிரினடா சென்ஜோன்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட்டில் முதலாவது இனிங்சில் மேற்கிந்திய அணி 237 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி முதலாவது இனிங்சில் 232 ஓட்டங்களை பெற்றது. இரண்டாவது இனிங்சில் மேற்கிந்திய அணிகளினால் 209 ஓட்டங்களையே பெறமுடிந்தது. 214 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 54.4 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்று வரலாற்று முக்கியத்துவம் பெற்ற டெஸ்ட் தொடர் வெற்றியை தனதாக்கிக் கொண்டது. ஸ்கோர் விபரம் வருமாறு:

ST GEORGE’S, Grenada

West Indies 1st Innings 237
Bangladesh 1st Innings 232
West Indies 2nd Innings 209

BANGLADESH 2nd Innings

Tamim Iqbal c Walton b Sammy  18
Imrul Kayes c Sammy b Roach   8
Junaid Siddique c Reifer b Sammy  5
Raqibul Hasan c and b Sammy  65
Mohammad Ashraful c Walton b Sammy  3
Shakib Al Hasan not out   96
Mushfiqur Rahim c and b Sammy  12
Mahmadullah not out    0
Extras (b1, lb3, w2, nb4)  10
TOTAL (6 wkts, 256 mins, 54.4 overs) 217

Fall of wickets: 1-27 (Imrul Kayes), 2-29 (Tamim Iqbal),
3-49 (Junaid Siddique), 4-67 (Mohammad Ashraful),
5-173 (Raqibul Hasan), 6-201 (Mushfiqur Rahim).

Bowling: Best 9-0-38-0 (nb1);
  Bernard 9-1-33-0 (nb3);
  Roach 13.4-4-68-1 (w1);
  Sammy 16-1-55-5;
  Austin 3-0-13-0;
  Hinds 4-0-6-0.
 

இடம்பெயர்ந்தோர் குறித்து இன்று சபையில் விவாதம்

26parliament.jpgவடக்கில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் தொடர்பாக இன்று  புதன்கிழமை பாராளுமன்றத்தில் விவாதமொன்று நடைபெறவுள்ளது. வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களின் நிலைமை தொடர்பான இந்த விவாதமானது சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாகவே நடைபெறவுள்ளது.

ஜே.வி.பி.யினால் இதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இன்று புதன்கிழமை நண்பகல் 12.30 மணி தொடக்கம் மாலை 4.30 பணி வரையான 4 மணி நேரத்துக்கு இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்கள் முன்னிலை; டில்சான் காயம்

srilanka-cri.jpgஇரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. பந்து வீச்சில் ஹேரத் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி இலங்கை அணியை விட 82 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. முன்னதாக பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 299 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி கொழும்பில் நேற்று முன்தினம் துவங்கிய 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியது.

துவக்க வீரர் குர்ரம் மன்சூர் (93), முகமது யூசுப் (90) ஆகியோரின் சிறப்பான பங்களிப் பால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்கள் எடுத்தது. 2 ஆம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி 299 ஓட்டங்களில் சுருண்டது.  தினேஷ் கனேரியா ஒரு ஓட்டத்துடனும், சயீத் அஜ்மல் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்சைத் துவக்கிய இலங்கை அணி முதல் பந்திலேயே துவக்க வீரர் வர்னபுரவை இழந்தது. உமர் குல் வீசிய பந்தில் வர்னபுர போல்ட் ஆனார். இதையடுத்து அணித்தலைவர் சங்கக்கார, துவக்க வீரர் பரனவிதானவுடன் இணைந்தார். இதில் பரனவிதான 5 ஓட்டங்கள் எடுத்திருந்த போது யூனிஸ் கான் வீசிய நேர்த்தியான இன்ஸ்விங் பந்தில் போல்ட் ஆனார்.

இதனால் இலங்கை அணி 23 ஓட்டங்களு க்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் சங்கக்கார 45 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்ட மிழந்தார். ஜயவர்த்தன 79 ஓட்டங்களையும் எடுத்தார். டில்சான் 44 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர். ஆனால் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

இதேவேளை பந்து வீச்சில் தினேஷ் கனேரியா 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இலங்கை அணி முதல் இன்னிங்சை 233 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த அடித்தளமிட்டார். அஜ்மல் 3 விக்கெட்டையும், குல், யூனுஸ்கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் திலகரத்ன டில்சான் காயம் ஏற்பட்டதால் இரண்டாவது இன்னிங்சில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக குமார் சங்கக்கார விக்கெட்காப்பாளராக செயல்பட்டார். டில்சான் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கன்னப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடரும்.

PAKISTAN 1ST INNINGS (overnight 289-7):
Khurram Manzoor c Jayawardene b Vaas  93
Fawad Alam c Dilshan b Thushara  16
Younus Khan b Thushara     2
Mohammad Yousuf run out   90
Misbah-ul Haq c Dilshan b Kulasekera  27
Shoaib Malik lbw b Thushara   45
Kamran Akmal b Thushara    1
Umar Gul b Kulasekera     2
Danish Kaneria lbw b Kulasekera   1
Mohammad Aamer not out     2
Saeed Ajmal b Thushara     8
Extras: (b10, nb2)    12
Total (all out, 89.4 overs)   299

Fall of wickets: 1-34 (Alam), 2-36 (Younus), 3-203 (Manzoor), 4-210
(Yousuf), 5-285 (Malik), 6-285 (Misbah), 7-287 (Gul), 8-289 (Kaneria),
9-289 (Akmal), 10-299 (Ajmal).

Bowling: Vaas 20-6-43-1,
  Kulasekera 16-2-47-3,
  Thushara 20.4-2-83-5 (nb2),
  Herath 23-4-76-0,
  Mathews 8-2-31-0,
  Jayawardene 2-0-9-0.

SRI LANKA 1ST INNINGS:
M. Warnapura b Gul     0
T. Paranavitana b Younus    5
K. Sangakkara lbw b Ajmal   45
M. Jayawardene b Kaneria   79
T. Samaraweera b Ajmal     6
A. Mathews c Misbah b Kaneria   31
C. Vaas lbw b Kaneria     4
T. Dilshan c Akmal b Kaneria   44
N. Kulasekera c Misbah b Ajmal     1
R. Herath lbw b Kaneria    7
T. Thushara not out     5
Extras: (lb2, nb4)     6
Total (all out, 68.3 overs)   233

Fall of wickets: 1-0 (Warnapura), 2-23 (Paranavitana), 3-63 (Sangakkara),
4-82 (Samaraweera), 5-153 (Mathews), 6-171 (Vaas), 7-174 (Jayawardene),
8-181 (Kulasekera), 9-204 (Herath), 10-233 (Dilshan).

Bowling: Gul 10-0-55-1 (nb4),
  Aamer 10-2-34-0,
  Younus 3-1-10-1,
  Ajmal 25-5-70-3,
  Kaneria 20.3-3-62-5.

PAKISTAN 2ND INNINGS:
Khurram Manzoor b Herath    2
Fawad Alam not out     14
Younus Khan not out     0
Extras:  0
Total (for 1 wkt, nine overs)   16

Fall of wicket: 1-16 (Manzoor)

Bowling: Kulasekera 4-2-4-0,
  Thushara 4-1-7-0,
  Herath 1-0-5-1

சிறுபான்மை என்ற பேச்சுக்கே இனி நாட்டில் இடமில்லை – ஜனாதிபதி

mahinda-rajapa.jpgநாட்டில் இனி சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் வார்த்தையில் மட்டுமன்றி செயலிலும் அதனை நிரூபித்துள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஒதுக்கி விட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நம் அனைவருக்குமான இத்தாய் நாட்டைப் பாதுகாப்பதிலும் கட்டியெழுப்புவதிலும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மொனராகலை பெல வத்தையில் நேற்று மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமையை சகல சமயங்களும் உணரத்தொடங்கியுள்ள காலமிது. இனி இந்த நாட்டில் சிறுபான்மை என்று ஒன்றில்லை. அதனை நாம் வார்த்தையில் மட்டுமன்றி செயலிலும் உறுதிப்படுத்தியுள்ளோம். இலங்கையில் தமிழும் சிங்களமும் அரச மொழியாக இருந்த போதிலும் தமிழ் மக்கள் தமது மொழியில் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாமலிருந்ததாலேயே பல பிரச்சினைகள் உக்கிரமடைந்தன.

இப்பிரச்சினைக்குத் தீர்வாக நாம் 2500 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தோம். அவர்களில் 500 பேருக்கு நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. அரச சேவையில் தமிழும் சிங்களமும் தெரிந்தவர்களுக்கு 25,000 ரூபாவை சம்பளமாக வழங்குகிறோம். இத்தகைய நடவடிக்கைகள் மூலமே பிரச்சினைகள் தீரும்.

மலையக மக்கள் இன்று கல்வியில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் அவர்கள் இது விடயத்தில் அக்கறையில்லாமல் இருந்ததற்குக் காரணம் ஆசிரியர் பற்றாக்குறையும் அரசபணிகளில் நிலவிய வசதியின்மையுமே. இதனைக் கருத்திற் கொண்டு நாம் 3,679 ஆசிரியர்களை நியமித்தோம், அத்துடன் அப்பகுதியில் கல்வித் துறையை மேம்படுத்த பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்தோம். ஆசிரியர்களை அப்பகுதியிலிருந்தே தேர்ந்தெடுத்தமை இதில் குறிப்பிடக் கூடியதொரு விடயம். அதனால் பெருந்தோட்டப் பகுதியில் பாரிய மாற்றமொன்று தற்போது ஏற்பட்டுள்ளது. இது நாம் மலையக மக்களுக்காகச் செய்த சேவையாகும்.

இன்று எல்லைக் கிராமங்கள் இல்லை. பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை. அன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட அதே அபிவிருத்தி இன்று கிராமப்புறங்களில் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ், சிங்களம், முஸ்லிம் என எந்த பாகுபாடுமில்லாமல் சகலருக்கும் அரசாங்கம் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கின்றது. தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் ஒதுக்கி வைத்து விட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மலையகப் பகுதிகளைப் பொறுத்த வரை வெள்ளைக்காரர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்ட லயன் காம்பிராக்களிலிருந்து அம்மக்களை விடுவித்து அவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது திட்டம். இத்திட்டத்தின் மூலம் தற்போது 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் லயன் காம்பிரா சூழல் மாற்றம் பெற்று கிராமங்கள் உருவெடுக்கும்.

யாழ்ப்பாணத்திலிருந்து பயங்கரவாதிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்தில் வாழ்கின்றனர். மூதூரிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களை நாம் 45 மணித்தியாலத்தில் மீளக்குடியமர்த்தி வாக்குறுதியை நிறைவேற்றினோம். முழு உலகிலிருந்தும் அழுத்தம் வந்த போதும் நாம் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினோம். சிறுபான்மை என்பதை வரலாற்றில் மட்டுமன்றி அனைத்திலிருந்தும் அகற்றுவது அவசியம். இன்று எமது அரசாங்கத்தில் பல தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் எம்மை நம்புகின்றனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளை நம்புகின்றனர். இந்த அரசு சகல மக்களுக்குமான நம்பிக்கையான அரசு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நாம் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் எந்த இனம், நிலம், பிரதேசம் பேதமும் காட்டுவதில்லை. இந்த நாட்டைப் பாதுகாக்கவும் கட்டியெழுப்பவும் அனைவருக்கும் பொறுப்பு உண்டு.

இது நாம் பிறந்த நாடு. நம் அனைவரதும் தாய் நாடு. இந்த நாட்டை சகலரும் அன்பு செய்ய வேண்டும். இதை பாதுகாக்க சகலரதும் ஒத்துழைப்பு மிகவும்அவசியமானது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபடுவோமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தபாலில் அனுப்பப்படும் தந்திச் செய்திகள்

தம்புள்ள அஞ்சல் அலுவலகத்தில் பொது மக்களால் கையளிக்கப்படும் தந்திச் செய்திகள் யாவும் சாதாரண தபாலிலேயே அனுப்பப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக மாத்தளை மாவட்ட தபால் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவிக்கையில்;

அஞ்சல் அலுவலக தந்திச் சேவகர்களாகக் கடமையிலீடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் வேறு அலுவல்களில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாலும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனை பிரதேசத்தில் அதிகரித்திருப்பதாலும் தந்திச் சேவைகள் நட்டத்தில் இயங்குவதால் இத்தகைய தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

தந்திச் செய்திகள் தபாலில் அனுப்பப்படுவதால் கிராமப்புற மக்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். சீரான தந்திச் சேவையைப் பெற்றுத் தருமாறும் மக்கள் உரியவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்

‘மூன்றரை லட்சம் ஸ்வாத் மக்கள் இருப்பிடம் திரும்பினர்’

200709.jpgபாகிஸ் தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கை சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களில் குறைந்தது மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் தமது இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டதாக அரசாஙங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிராந்தியத்துக்கு அருகில் உள்ள இரண்டு பெரிய முகாம்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் ஏனைய முகாம்களில் இருப்பதாகவும், தொடரும் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் காரணமாக அவர்கள் தமது இருப்பிடம் திரும்ப மறுத்து வருவதாகவும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்வாத் பிராந்தியத்தில் அண்மையில் அரசாங்கப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையில் நடந்த மோதல்கள் காரணமாக இருபது லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.

“ஏ9′ வீதியிலுள்ள கோயில்களைத் திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கை

ஏ9 வீதியிலுள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து நாளாந்த பூஜைகளை நடத்த அனுமதி வழங்குமாறு சர்வதேச இந்து மதபீடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  இந்து மத பீடத்தின் செயலாளர் ஆர்.பாபு சர்மா இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

நீண்டகாலமாக மூடப்பட்டிருக்கும் ஏ9 வீதியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து நாளாந்தம் ஒருவேளை பூஜையையாவது நடத்த அனுமதி வழங்க வேண்டும். இந்தப் பூஜையை நடத்துவதற்கான ஏற்பாட்டை எமது மதபீடம் மேற்கொள்ளும்.

முறிகண்டிப் பிள்ளையார் கோவில் உட்பட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து பூஜை, வழிபாடுகளை நடத்த அனுமதிக்குமாறு வேண்டுகிறோம். வவுனியா முகாம்களிலுள்ள இந்து குருமாரை பூஜைகளில் ஈடுபடுத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.