பாகிஸ் தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கை சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களில் குறைந்தது மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் தமது இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டதாக அரசாஙங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பிராந்தியத்துக்கு அருகில் உள்ள இரண்டு பெரிய முகாம்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் ஏனைய முகாம்களில் இருப்பதாகவும், தொடரும் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் காரணமாக அவர்கள் தமது இருப்பிடம் திரும்ப மறுத்து வருவதாகவும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்வாத் பிராந்தியத்தில் அண்மையில் அரசாங்கப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையில் நடந்த மோதல்கள் காரணமாக இருபது லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.