June

June

டுவென்டி-20 உலக கோப்பை : அரையிறுதிக்கு தகுதிபெற்றது பாகிஸ்தான்

t20-world-cup.jpgஇங்கி லாந்தில் நடக்கும் இருபதுக்கு 20  உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் ’எப்’ பிரிவில் அயர்லாந்து பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.. பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 9விக்கெட்டுகளை இழந்து 120ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி 35 ஓட்டங்களால் அயர்லாந்தை வெற்றி கொண்டதால் அரையிறுதிக்கு தகுதிபெற்றது 

உலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டித் தொடரின் மிக முக்கியமான சுப்பர் எட்டு 2வது ஆட்டத்தில் ’இ’ பிரிவில் இங்கிலாந்து வெஸ்ட்இண்டீஸ் அணிகளும் மோதுகின்றன.

நிவாரணக் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு விசேட வகுப்புகள் இன்று ஆரம்பம்

rizad_baduradeen1.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கென விசேட வகுப்புக்களை நடாத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.வவுனியாவில் உள்ள ஐந்து நிவாரணக் கிராமங்களிலும் உள்ள மாணவர்களுக்கான விசேட வகுப்புகள் மீள்குடியேற்றம் மற்றம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் வவுனியா கதிர்காமர் நிவாரண கிராமத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உடபட மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய இடங்களிலிருந்து விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அழைத்து வந்து இந்த விசேட வகுப்புகளை தெடர்ந்து நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் முடிவுக்காக காத்திருந்த பிரபாகரன்

Pirabakaran V LTTEஇலங் கையில் 30 வருடகால உள்நாட்டு யுத்தத்தில் தமது அடுத்தகட்ட தந்திரோபாயத்தை வகுப்பதற்காக இந்தியத் தேர்தல் முடிவுகளுக்காக பிரபாகரன் காத்திருந்ததாகவும் தேசிய ஜனநாயக முன்னணி அல்லது மூன்றாவது அணி புதுடில்லியில் ஆட்சிக்கு வருமென எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால், இலங்கை இராணுவம் வேறுபட்ட திட்டங்களை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பாராளுமன்றத்தின் தேர்தல் முடிவுகள் மே 16 இல் வெளிவரும் வரை பிரபாகரன் காத்திருந்ததாகவும் தம்முடையதும் தமது இயக்கத்தினுடையதும் எதிர்காலத்தை முடிவு செய்வதற்காக அவர் இந்தியத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால், அது மிகவும் காலம் பிந்திய ஒன்றாகவும் ஏனெனில் தப்பிச் செல்லும் சகல வழிகளையும் அச்சமயம் இலங்கை இராணுவம் துண்டித்துவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“அவர் (பிரபாகரன்) எவராவது தலையிட்டு இராணுவம் மோதல் சூனியப் பகுதிக்குள் பிரவேசிப்பதை நிறுத்துவார்கள் என எதிர்பார்த்திருந்ததாக இலங்கை இராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக பி.ரி.ஐ. செய்திச்சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. மே 16 பிற்பகல் அகப்பட்டிருந்த சகல பொது மக்களையும் விடுவிப்பதாக விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தனர். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரப்போகின்றதென்பதை அறிந்த பின் அவர்கள் பொதுமக்களை வெளியேற அனுமதிப்பதாக தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் கட்சியானது பிரபாகரனுடனும் புலிகள் அமைப்புடனும் பகையுணர்வு கொண்டிருந்தது என்பதால் அவர்கள் பொதுமக்களை வெளியேற அனுமதிப்பதாக அறிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் பிரபாகரனுக்கும், இயக்கத்தின் தலைவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஆனால், எதனையும் சிந்திப்பதற்கோ, திட்டமிடுவதற்கோ அவர்களுக்கு நேரம் இருந்திருக்கவில்லை. அந்தத் தருணத்தில் அவர்கள் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர் என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

காங்கிரஸ் கட்சி போன்று தேசிய ஜனநாயக முன்னணியோ அல்லது மூன்றாவது அணியோ எதிர்ப்புணர்வு கொண்டவையாக இருக்காது என்று புலிகள் நினைத்திருந்தனர். மக்கள் யுத்த வலயத்தை விட்டு வெளியேற ஆரம்பித்ததும் இராணுவம் அவர்களை மீட்டு பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டு சென்றது என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. அ.தி.மு.க. வானது மூன்றாவது அணியும் அங்கமாக இருந்தது. அதன் தலைவி ஜெயலலிதா இலங்கைத் தமிழரின் நோக்கத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். புதுடில்லியில் தனது தேர்வுக்குரிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழீழத்தை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.

மே 16 பிற்பகல் விடுதலைப்புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான தலைவர் செல்வராஜா பத்மநாதன் ஒரு அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதில் புலிகள் அமைப்பு தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவும் சர்வதேச சமூகம் வன்னியிலுள்ள மக்களை பாதுகாக்க வேண்டுமென்றும் அவர் கேட்டிருந்தார். இலங்கைப் படையினர் தம்மையும் தமது உதவியாளர்களையும் மிக விரைவில் சுற்றிவளைக்கும் என்று பிரபாகரன் எதிர்பார்த்திருக்கவில்லை என அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.

கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவியிடமிருந்து இராணுவம் தகவல்களை பெற்றிருந்தது. நாட்டைவிட்டு வெளியேற சூசையின் மனைவி முயன்றபோது, அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அச்சமயம், பிரபாகரனும் உயர்மட்டத் தலைவர்களும் யுத்த வலயத்திற்கு உள்ளேயே இருந்தனர்.

மே 16 இல் இராணுவம் 2 சதுர கிலோமீற்றர் பரப்பளவை முழுமையாக சுற்றிவளைத்திருந்தது. புலிகளின் தலைவர்கள் தப்பிச் செல்வதற்கு அதனால் எந்தவொரு சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

மே 16 /17 இரவு அந்தப் பகுதியில் எந்தவொரு பொதுமக்களும் இல்லை என்று இராணுவம் நிச்சயப்படுத்திக்கொண்டது. அதனை அடுத்து, நம்பிக்கையுடன் புலிகளின் தலைமைத்துவத்துக்கு எதிராக இறுதிக்கட்ட நடவடிக்கையை இராணுவம் ஆரம்பித்தது.

பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையானது விடுதலைப்புலிகளின் எஞ்சியிருந்தவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழியமைத்து கொடுத்தது. இராணுவத்தின் 3 பிரிவுகள், புலிகள் கடைசியாக இருந்த பகுதி மீது நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர் என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இறுதிக்கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னரே புலிகள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். அச்சமயமே, தமது துப்பாக்கிகளை மௌனமடையச் செய்ய தாங்கள் முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளனர். இந்த யுத்தம் கசப்பான முடிவுக்கு கொண்டுசென்றது. எமது மக்கள் குண்டுகள், செல்கள், நோய், பட்டினியால் இறந்துகொண்டிருக்கின்றனர். மேலும், அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட நாங்கள் அனுமதிக்க முடியாது. நாம் ஒரேயொரு தெரிவுடன் இருக்கின்றோம். எமது துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுப்பதென நாம் தீர்மானித்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மே 18 இல் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட 3 தசாப்தகால மோதல் முடிவிற்கு வந்தது. பிரபாகரன், அவரின் மகன் சாள்ஸ் அன்ரனி, சூசை, பொட்டு அம்மான் மற்றும் ஏனைய தலைவர்கள் உட்பட சுமார் 600 விடுதலைப்புலிகளின் மரணத்துடன் இந்த மோதல் முடிவிற்கு வந்தது.

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள முதலாவது இராணுவ முகாம்

08lorry-good.jpgயுத்தம் முடிவுக்கு வந்த பின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு – வாழைச்சேனை (ஏ-15) பிரதான வீதியில் அமைந்திருந்த கும்புறுமுலை இராணுவ முகாம் மற்றும் சோதனைச்சாவடி ஆகியன இன்று திங்கட்கிழமை முதல் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. பல வருடங்களாக கும்புறுமுலை முச்சந்தியில் அமைந்திருந்த இவ் இராணுவ முகாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான முகாம்களில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது

இடம்பெயர்ந்தோருக்கு புனர்வாழ்வளிப்பதே அரசின் முதல் பணி – மியன்மார் தலைவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

meeting_with_chairman.jpgஇலங் கையின் வடக்கில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக  சின்னாபின்னமான இடங்களைப் புனரமைத்து அப்பகுதி மக்களுக்கு இயல்பான வாழ்வை மீளப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய பணியாகுமென மியன்மார் தலைவர் தான் ஷிவி நேபேதோரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மியன்மாருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அங்கு சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அந்நாட்டின் தலைவருக்குமிடையிலான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் பயங்கரவாதத்துக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கையை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய முடிந்தமைக்காக இச்சந்திப்பின்போது தனது திருப்தியை வெளியிட்ட ஜனாதிபதி,  நாடு வெற்றியடைந்ததன் பின்னர் மியன்மாருக்கே தாம் முதலாவது வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பௌத்த மதத்தின் போதனைகளின்படி எல்லா உயிர்களும் சமாதானத்துடனும் நல்லுறவுடனும் வாழ முடியும் என்றும் ஜனாதிபதி இச்சந்திப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சடலங்களின் தொகை அதிகரிப்பதால் ஒப்பந்த அடிப்படையில் அகற்ற நடவடிக்கை

வவுனியா பொது வைத்திய சாலை சவச்சாலைக்கு கொண்டுவரப்படும் சடலங்களின் தொகை நாளுக்கு நாள் அதிரித்து வருவதனால் அனைத்து சடலங்களையும் அரச செலவில் அப்புறப்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது.
இதனால் ஒப்பந்த அடிப்படையில் இந்தச் சடலங்களை அப்புறப்படுத்த தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகின்றது. கேள்விப் பத்திரம் கோரப்பட்டு அதன் அடிப்படையில் தெரிவு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வாரத்திற்கு குறைந்தது 50 சடலங்கள் சவச்சாலைக்கு வந்து குவிகின்றன. செட்டிகுளம் நலன்புரி நிவாரணக் கிராமங்களில் நோயாலும் இயற்கையாலும் இறக்கும் வயோதிபர்களது சடலங்களே அதிகமாகுமென அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சவச்சாலையில் அதிகளவான சடலங்களை வைத்திருக்க போதிய இடவசதியின்மையால் ஆஸ்பத்திரி நிர்வாகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறது.

முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களின் விபரங்களை திரட்ட ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரங்களைத் திரட்டுவதற்கு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்டக்கிளை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்டக் கிளையின் தலைவர் மௌலவி எம்.எச்.எம்.இப்றாஹிம் விடுத்துள்ள அறிக்கையில்;

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலில் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதியுடனும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனும் கலந்துரையாடவுள்ளார். அதனால் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் சரியான விபரங்கள் தேவைப்படுவதனால் அதன் விபரங்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம், குருநாகல், அநுராதபுரம், கண்டி, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் குடும்பத் தலைவர்கள், அரச ஊழியர்கள், உலமாக்கல் அதற்குரிய விண்ணப்பங்களைப் பெற்று நிரப்பி அனுப்புமாறும் இது தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு 0718232462, 0714494040, 0312226710 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர் மௌலவி எம்.ஐ.கைசர்கான் ஹிஜ்ராமாவத்த, கரிக்கட்டை, மதுரங்குளி என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

myanmar_.jpgஇலங் கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்மபடுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு உடன்படிக்கையும் இரு நாடுகளுக்கும் இடையில் விசாத் தளர்வு உடன்படிக்கையுமே இன்று  கைச்சாத்திடப்பட்டன.

மியன்மார் நாட்டுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும்,  மியன்மார் நாட்டு தலைவரும் அமைதிக்கும் அபிவிருத்திக்குமாக கவுன்ஸிலின் தலைவருமான தான் ஷிவிவுக்குமிடையில் நேற்று நண்பகல் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையிலான சமய, கலாசார, வர்த்தகம் மற்றும் உல்லாசப் பயணத்துறை என்பவற்றை மேலும் மேம்படுத்துவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.  உணவு உற்பத்தியில் உலகில் தன்னிறைவு அடைந்துள்ள இரண்டாவது நாடாகக் கருதப்படும் மியன்மாரின் ஒத்துழைப்பை இலங்கையின் அபிவிருத்திக்காகப் பெற்றுக்கொள்வது குறித்தும் இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நேற்று காலை மியன்மாரைச் சென்றடைந்தனர். ஜனாதிபதியையும்,  ஜனாதிபதி தலைமையிலான குழுவினரையும் மியன்மார் நாட்டுத் தலைவரான தான் ஷிவி நேபேதோ விமான நிலையத்தில் பெருவரவேற்பளித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு செங்கம்பள வரவேற்பும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் விஜயத்தின் நிமித்தம் விமான நிலையத்திலும் அதனைச் சு10ழவுள்ள பிரதேசங்களிலும் இலங்கை, மியன்மார் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன
இலங்கையில் பயங்கரவாதம் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்ட பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டிருக்கும் முதலாவது இராஜதந்திர விஜயம் இதுவாகும்.

அதேநேரம் இலங்கைக்கும்,  மியன்மாருக்குமிடையிலான இருபக்க இராஜதந்திர உறவுக்கு இவ்வருடத்துடன் அறுபது வருடங்கள் நிறைவடைகின்றன. அதனால் ஜனாதிபதியின் இவ்விஜயம் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவு மேலும் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள் ரோகித போகொல்லாகம,  டளஸ் அழகப்பெரும,  விமல் வீரசன்ச எம்.பி. ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் காமினி சேனரத் ஆகியோரும் மியன்மார் சென்றுள்ளனர

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவரிடையே மோதல் – இரு பிரிவுகள் இன்று மூடப்படுகின்றன

sabaragamuwa-university.jpgஇரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரு பிரிவுகள் இன்று பிற்பகல் 3.00 மணியுடன் முடப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி அமரசிங்க தெரிவித்தார். பிரயோக விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளே மறு அறிவித்தல் இன்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காத்தான்குடியில் மூவினத்தையும் சேர்ந்த 1500 பேருக்கு கண் சத்திரசிகிச்சை

கிழக்கில் 1500 பேருக்கு கண் சத்திரசிகிச்சை செய்யும் நிகழ்வு காத்தான்குடியில் கடந்த சனிக்கிழமை மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மாகாண சுகாதார அமைச்சர் எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் ஜம்இய்யதுல் ஸபாப் நிறுவனத்தினரால் சவூதி அரேபியாவிலுள்ள அல்பஸர் நிறுவனத்தின் அனுசரணையுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் 40 பேர் கலந்துகொண்டு இந்த சந்திரசிகிச்சையினை ஆரம்பித்துவைத்தனர்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இது தொடர்பான வைபவம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் ஆரம்பமானபோது பிரதம அதிதியாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் ஜம்இய்யதுல் ஸபாப் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாசீம், உதவி முகாமையாளர் ஸபர் ஸாலீ, பாகிஸ்தான் சத்திரசிகிச்சைக்குப் பொறுப்பான டாக்டர் எம்.பகுர்தீன், நகரசபை தலைவர் யூ.எல்.எம்.முபீன், பிரதேச செயலாளர் ஏ.எம்.முஸம்மில் , பிரதிநகர முதல்வர் மர்சூக் அஹமட் லெவ்வை, பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அல் மனார் அறிவியற் கல்லூரி பிரதிநிதிகள்,ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் என பல தரப்பட்டோர் கலந்துகொண்டனர்.

கண் வெண்படலம் படந்துள்ளோர் பரிசோதனையின் போது தெரிவாகி அவர்களுக்கே சத்திரசிகிச்சை செய்யும் பணி கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த சத்திரசிகிச்சை தொடர்ந்து எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும். காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள பொதுவாசிகசாலை மேல் மாடியில் சத்திரசிகிச்சை இடம்பெறுகின்றது.

பொத்துவில், அக்கரைப்பற்று, கல்முனை, அம்பாறை, நிந்தவூர், சம்மாந்துறை, படுவான்கரை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் , சிங்கள மூவின மக்களும் சத்திரசிகிச்சையினை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையினை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானிய வைத்தியர்களுடன் சுகாதார அமைச்சரின் தொண்டு பணியாளர்களும் பிரதேச செஞ்சிலுவைச்சங்க ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாசல் சம்மேளனம் , தாருல் அதர் அதவிய்யா பணியார்கள் எனப் பலதரப்பட்டோர் தொண்டு பணியாளர்களாக கடமையாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.