வவுனியா பொது வைத்திய சாலை சவச்சாலைக்கு கொண்டுவரப்படும் சடலங்களின் தொகை நாளுக்கு நாள் அதிரித்து வருவதனால் அனைத்து சடலங்களையும் அரச செலவில் அப்புறப்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது.
இதனால் ஒப்பந்த அடிப்படையில் இந்தச் சடலங்களை அப்புறப்படுத்த தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகின்றது. கேள்விப் பத்திரம் கோரப்பட்டு அதன் அடிப்படையில் தெரிவு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு வாரத்திற்கு குறைந்தது 50 சடலங்கள் சவச்சாலைக்கு வந்து குவிகின்றன. செட்டிகுளம் நலன்புரி நிவாரணக் கிராமங்களில் நோயாலும் இயற்கையாலும் இறக்கும் வயோதிபர்களது சடலங்களே அதிகமாகுமென அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சவச்சாலையில் அதிகளவான சடலங்களை வைத்திருக்க போதிய இடவசதியின்மையால் ஆஸ்பத்திரி நிர்வாகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறது.