முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களின் விபரங்களை திரட்ட ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரங்களைத் திரட்டுவதற்கு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்டக்கிளை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்டக் கிளையின் தலைவர் மௌலவி எம்.எச்.எம்.இப்றாஹிம் விடுத்துள்ள அறிக்கையில்;

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலில் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதியுடனும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனும் கலந்துரையாடவுள்ளார். அதனால் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் சரியான விபரங்கள் தேவைப்படுவதனால் அதன் விபரங்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம், குருநாகல், அநுராதபுரம், கண்டி, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் குடும்பத் தலைவர்கள், அரச ஊழியர்கள், உலமாக்கல் அதற்குரிய விண்ணப்பங்களைப் பெற்று நிரப்பி அனுப்புமாறும் இது தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு 0718232462, 0714494040, 0312226710 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர் மௌலவி எம்.ஐ.கைசர்கான் ஹிஜ்ராமாவத்த, கரிக்கட்டை, மதுரங்குளி என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *