இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரு பிரிவுகள் இன்று பிற்பகல் 3.00 மணியுடன் முடப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி அமரசிங்க தெரிவித்தார். பிரயோக விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளே மறு அறிவித்தல் இன்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.