28

28

வசந்தம் போதும் எமக்கு! : தானிஸ் அஷ்ரப்

வசந்தம் போதும் எமக்கு

வடக்கு வெழுத்தது
வசந்தம் கிடைத்தது
வழக்கு ஜெயித்தது
கணக்கும் முடிந்தது
நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் வலிக்கிறது…
உனக்கேன் வீண் பாட்டு
உடனே நிப்பாட்டு.

சுணங்கும் வேளையில்
இனங்கள், சனங்கள்
சுகங்கள் இன்றி
சுருளும் மடியும்
உனக்கேன் வீண் பாட்டு?
மனங்களை மாற்று
மறுவாழ்வு காட்டு!

புலர மறுக்கும் பொழுதெல்லாம்
தருமா வசந்தம்?
கதறும் குழந்தைக்கும்
பதறும் அன்னைக்கும்
அறுந்த உறவுக்கும்
பிரிந்த உயிருக்கும்
தெரிந்தால் கூறும்
தெவிட்டாத வசந்தம்?

இனியும் ஒரு யுத்தம்
இம்மண்ணில் வேண்டாம்
கனியும் ஒரு காலம்
காலடிக்கே வந்தது
தயவு செய்து
தரும போதனைகளை
மர்ம சாதனைகளாக்க வேண்டாம்
கர்ம வீரர்கள் மட்டும்
புறப்படட்டும்
காரியம் நடக்கட்டும்.

மானம் வேண்டுவோரின்
ஞாயங்களை
வாழவிடனும்
அப்போ
வானம் எங்கும்
வெள்ளி பொங்கி
கானம் பாடும்
காரிருள் தேயும்
காற்றுத் தழுவும்
வசந்தம் போதும் எமக்கு!

ஆக்கியோன்
தானிஸ் அஷ்ரப்

“கப்டன் அலி’ தொடர்பாக ஐ.நா. எதுவும் செய்யாது – ஜோன் ஹோம்ஸ்

ships000.jpgஐ.நா. இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கென ஐரோப்பாவில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் வந்த “எம்.வி.கப்டன் அலி’ கப்பல் தற்போது சென்னைத் துறைமுகத்துக்கு அப்பால் 5 கடல்மைல் தொலைவில் நங்கூரமிட்டிருக்கும் நிலையில் அக்கப்பல் விவகாரம் தொடர்பாக ஐ.நா. வோ அல்லது ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரத்திற்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகமான தானோ எதுவும் செய்வதற்கு இல்லை என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. வின் தலைமையகத்தில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியே வந்த ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல்லீ தனது செய்தி ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்.

சுயேச்சையான ஒரு பிரேதப் பரிசோதனையை நடத்த ஜாக்சனின் குடும்பத்தினர் விருப்பம்.

25michael_jackson.jpgபாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை தெளிவாக அறிய அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். இதனால் சுயேச்சையான ஒரு பிரேதப் பரிசோதனையை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று ஜாக்சன் குடும்பத்தினருக்கு நெருக்கமானவரான ஜெஸி ஜாக்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெஸி கூறுகையில், ஜாக்சனின் மறைவு குறித்து பல பதில்களே இல்லாத கேள்விகள் நம்மிடையே உலவுகின்றன. ஜாக்சனின் தனிப்பட்ட டாக்டர் குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

எனவே இதுதொடர்பாக இன்னொரு அட்டாப்சியை நடத்த அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். இருப்பினும் இதை தனிப்பட்ட முறையில் நடத்த அவர்கள் விரும்புகின்றனர். முடிவு மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான ஏற்பாடுகள் இதுவரை செய்யப்படவில்லை என்றார் அவர்.

உடல்களைத் தேடும் பணியை முடித்துக் கொள்வதாக பிரேசில் ராணுவம் தெரிவித்துள்ளது.

airfrancetail.jpgஅட்லான்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணித்தவர்களின் உடல்களைத் தேடும் பணியை முடித்துக் கொள்வதாக பிரேசில் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1ம் தேதி விமான விபத்து நடந்துத. அதன் பின்னர் கடந்த ஒரு மாத காலமாக உடல்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடந்து வந்தது. மொத்தம் 228 பேர் விபத்தில் இறந்தனர். இருப்பினும் 51 உடல்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது. அவற்றிலும் 11 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரேசில் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹென்றி முனோஸ் கூறுகையில், இனியும் உடல்கள் கிடைக்கும் என்பது சந்தேகம்தான். எனவே இதைத் தொடருவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

இருப்பினும் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஜூலை 1ம் தேதி வரைதான் கருப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞைகள் வெளி வரும். அதற்குள் கருப்பு்ப பெட்டியை மீட்க பிரான்ஸ் குழுவினர் முயன்று வருகின்றனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏராளமான கப்பல்கள், அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை கருப்புப் பெட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அரசியலமைப்புக்கு உட்பட்டதாக சகல செயற்பாடுகளும் அமையும் – ஜனாதிபதி

he_president.jpgஅரசிய லமைப்புக்கமையவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையும் அத்துடன் எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியலமைப்பில் மாற்றம் செய்யப் போவதாகப் பலரும் அஞ்சுகின்றனர். அவ்வாறு எதுவும் இடம்பெறாது. அரசியலமைப்புக் குட்பட்டதாகவே சகல செயற்பாடுகளும் அமையுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது.  இனி பாதாள உலகத்தை ஒழிக்க வேண்டியுள்ளது. அத்துடன் போதையற்ற இலங்கையை உருவாக்கும் நடவடிக்கை தொடருமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தெற்கில் வலஸ்முல்ல பிரதேச செயலாளர் பிரிவில் ஹந்துகல தேயிலைத் தொழிற்சாலையை உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தேச நிர்மாண அமைச்சின் கீழ் தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபையினால் 45 மில்லியன் ரூபா செலவில் மேற்படி தேயிலைத் தொழிற்சாலை நிர்மாணிக்கப் பட்டுள்ளதுடன் நேற்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் அமை ச்சர்கள் டி. எம். ஜயரட்ன, சமல் ராஜ பக்ஷ, குணரட்ன வீரக்கோன், மஹிந்த அமர வீர உட்பட அமைச்சர்கள் மாகாண அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது: முப்பது வருடங்களின் பின் நாடு ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பயத்துடனும் அச்சத்துடனும் வாழ்ந்த யுகத்துக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்ததன் பின்னர் இன்று நான் எனது ஊரில் முதல் தடவையாக உரையாற்றுகின்றேன்.

நாட்டை ஆண்ட தலைவர்கள் நாடு பற்றி சிந்திக்காமல் தம்மைப்பற்றியே சிந்தித்தனர். இதில் நாட்டை எழுதிக் கொடுத்தவர்களும் உள்ளனர்.  இன்று அதற்கு மாறாக வடக்கு, கிழக்கு, தெற்கு என சகலதும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. சகல இனமத மக்களும் சமத்துவமாகவும் அச்ச மின்றியும் வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்கு, பலம், புள்ளடி என நாம் இனி சிந்திக்கத் தேவையில்லை. அதற்கு மாறாக நாடு பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. யுத்தசங்காரத்தை முடித்த நாம் நாட்டைக்கட்டியெழுப்பும் சங்காரத்தையும் வெற்றிகொள்ள வேண்டியுள்ளது.

எமது காலத்தில் நாம் யுத்தத்திற்கு மட்டுமே கவனம் செலுத்தவில்லை. நாட்டின் எந்த அபிவிருத்திப் பணிகளையும் நாம் நிறுத்தவில்லை. சகலதையும் செயற்படுத்தினோம். கிராமங்கள் தோறும் அபிவிருத்தி யையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு செல்ல எம்மால் முடிந்துள்ளது.

நான் மூன்று பிள்ளைகளின் தந்தை என்ற வகையிலும் நாட்டின் சகல பிள்ளைகளின தும் தந்தை என்ற ரீதியிலும் இளைய சமு தாயத்தை, ஒழுக்கமுள்ள பண்பாடு, கலா சாரம் உள்ளிட்ட உயர் மதிப்பீடுகளை மதிக்கின்ற சமுதாயமாக உருவாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

பிள்ளைகளை வளர்ப்பதில் தந்தைக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன. போதையற்ற கெளரவமான சமூகத்தைக் கட்டியெழுப்ப நாம் அர்ப்பணிப்புடன் செயற்படும்போது சகல பெற்றோர்களும் இதில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனியும் நாம் காலத்தை வீணடிக்க முடி யாது. அபிவிருத்தியிலும் நல் ஒழுக்கத்திலும் நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும். அரசியல் தலைவர்கள் குறிப்பாக பிரதேச அரசியல் வாதிகள் தம்மைப் பற்றி சிந்திப்பதை விடுத்து நாட்டைப் பற்றியும், பிரதேச அபிவிருத்தி பற்றியும் சிந்தித்துச் செயற்படுவது அவசியம், ஊழல் மோசடியில் லாத திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இன்று நாட்டில் நீலக்கொடியல்ல சிங் கக்கொடியே எங்கும் பறக்கிறது. இன, மத, குல, பிரதேச பேதமற்ற நாட்டின் மக்களாக சகலரும் வாழும் சூழ்நிலையை உருவாக் குவதே எமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

இந்தியா சென்று முறையிடும் வேலையை இனியாவது தமிழ்க் கூட்டமைப்பு நிறுத்த வேண்டும் – விமல் வீரவன்ச

26parliament.jpgநாடு முழுவதும் படை முகாம்கள் இருக்கும் நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியா சென்று கோரியது போல் வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் விசேட சலுகை வழங்கி அங்கு படை முகாம்களை அமைக்காமல் இருக்க முடியாதென்றும், இவ் விடயத்தில் எவரும் தலையிட முடியாதென்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி.தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சட்ட மூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; “எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு துறைகளிலும் உரிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அதேபோல் பாதுகாப்பு தரப்பிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அதன் பொருட்டே இதுவரை காலமும் சம்பிரதாய பூர்வமாக இருந்து வந்த கூட்டுப் படைகளின் தளபதி பதவியை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகள் இந்த சட்டமூலத்தின் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

கடந்த காலங்களில் கூட்டுப் படைத் தளபதி பதவிக்குரிய சட்டபூர்வமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளைப் பாதுகாப்புச் செயலாளரே திறம்பட மேற்கொண்டு வந்தார். எதிர்வரும் காலங்களில் வரவிருக்கும் பாதுகாப்புச் செயலாளர்கள் கோதாபய ராஜபக்ஷவைப் போன்று ஒருங்கிணைப்பு கூட்டு நடவடிக்கையில் திறம்பட செயற்படுவார்களா என்பதைக் கூற முடியாது.

இதேநேரம், வடக்கு, கிழக்கில் படை முகாம்களை அமைக்க இடமளிக்க வேண்டாமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிடம் சென்று கேட்கின்றனர். படை முகாம்களை எங்கு அமைக்க வேண்டுமென்பது குறித்து இந்த நாடே தீர்மானிக்க வேண்டும். நாட்டின் ஏனைய பகுதிகளில் படை முகாம்கள் இருக்கும் போது இதில் வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் விசேட சலுகை வழங்க முடியாது. இந்த விடயத்தில் வேறு எவரும் தலையிட்டு செயற்படவும் முடியாது. எனவே, இனியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம் மாதிரியான செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தை யுத்தத்தின் மூலம் தோற்கடித்த நாடு என்ற வகையில் நாம் இனியும் அவ்வாறானதொரு ஆபத்துக்கு இடமளிக்க முடியாது. இனியும் பயங்கரவாதம் தலை தூக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளுக்கே கூட்டுப் படைகளின் தளபதி பதவிக்கான அதிகார அதிரிப்புகள் தேவைப்படுகின்றன’ என்றார்.

‘கேப்டன் அலி’ பொருட்கள் திங்கள் அல்லது செவ்வாய்கிழமையன்று இறக்கப்படும்?

ships000.jpgஇலங் கையில் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பட்டதாக கூறப்பட்ட பொருட்கள் அடங்கிய கப்பலான கேப்டன் அலி சென்னை துறைமுக எல்லைக்கு அப்பால் நங்கூரமிட்டுள்ளது.

இந்தக் கப்பலில் உள்ள பொருட்கள் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலமாக இலங்கையில் விநியோகிக்க இலங்கை அரசு ஒப்புகொண்டிருப்பதாக இந்த கப்பலில் உள்ள ஒருங்கிணைப்பாளரான உதயணன் தவராஜசிங்கம் B.B.C தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்

கப்பலில் உள்ள பொருட்களை இறக்குவதற்கான ஆவணங்கள் தயாரிப்பில் செஞ்சிலுவை குழுவினர் ஈடுப்பட்டுள்ளதாகவும் வரும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமையன்று பொருட்கள் இறக்கப்படும் என்று தாங்கள் நம்புவதாகவும், அதன் பின்னர் கப்பலில் உள்ள தாங்கள் நாடு திரும்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்

இலங்கைக்கு எதிராக செயற்பட்ட நாடுகள் இன்று நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளன – ரோஹித போகொல்லாகம

rohitabogallaagama.jpgஇலங் கையின் வெளிநாட்டு இராஜதந்திர உறவுகள் கடந்த 20 மாத காலப் பகுதியில் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்;

குறிப்பாக இந்திய மற்றும் பசுபிக் வலய நாடுகளுடன் இலங்கை நல்லுறவுகளை வளர்த்துக்கொண்டுள்ளது. பிராந்தியத்தின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் முக்கிய பணிகளை ஆற்றியுள்ள நாடு என்ற வகையில் இன்று இலங்கை தலைநிமிர்ந்து நிற்கிறது.

இலங்கைக்கு எதிராக செயற்பட்ட நாடுகள் கூட தற்போது இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. ஐ.நா. செயலாளர் நாயகம் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் இலங்கை தொடர்பான ஐ.நா. கொள்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளுக்கு இது பெரும் உதவியாக அமைந்துள்ளது.

இலங்கையில் பொருளாதார மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்வதில் வெளிவிவகார அமைச்சு பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறது. ஆபிரிக்க நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளைக் கட்டியெழுப்ப அமைச்சு எதிர்பார்த்துள்ளது. அந்நாடுகளில் இலங்கைத் தூதரகங்களை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இலங்கைக்கும் பிரேஸிலுக்குமிடையில் நேரடி தூதரக தொடர்புகள் காணப்படுகின்றன.

நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொள்ளும்போது இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாத வகையில் செயற்படவுள்ளோம். ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் உள்நாட்டு நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போர் நிறுத்த உடன்படிக்கை காரணமாக சர்வதேச ரீதியில் புலிகளுக்குக் கிடைத்திருந்த அந்தஸ்தை இலங்கை இல்லாமல் செய்துவிட்டது என்றார்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் அறிவையும் வளங்களையும் வன்னி மக்களுக்கு வழங்க முன் வரவேண்டும்

karuna-20.jpg“கள நிலையைப் புரியாத நிலையிலேயே புலம்பெயர் நாடுகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். சில சக்திகள் அவர்களைத் தூண்டி விட்டன என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து அளித்த பதிலில் அவர் மேலும் கூறியதாவது

காரணம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது தளபதிகளும் முற்றுகைக்குள்ளான விடயம் சகலரும் அறிந்ததே. அவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தான் இப்படியான ஆர்ப்பாட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர். சர்வதேச சக்திகளும் இதற்குத் துணை போயின. அது வெற்றியளிக்கவில்லை .எமது அரசாங்கமும் அதற்கு இடமளிக்கவில்லை.

வன்னிப் பிரதேசம் தற்போது முற்று முழுதாக அழிந்து போயுள்ளது. அந்தப் பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்கு புலம் பெயர் நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் அறிவையும் வளங்களையும் வன்னி மக்களுக்கு வழங்க முன் வரவேண்டும்” எனக் குறிப்பிட்டார்

வன்னி பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக இராணுவத் தளபதி ஆராய்வு

வன்னியின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறியும் பொருட்டு இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா வன்னிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது வன்னிப் பிராந்தியத்திற்கான சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பொன்றையும் இராணுவத் தளபதி மேற்கொண்டுள்ளார்.

இச்சந்திப்பின் போது வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பாகவும் அவர்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வடபகுதியில் இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் பங்கு தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

வன்னியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக பூரண விபரங்கள் இராணுவத் தளபதிக்கு வன்னிப் பிராந்திய உயரதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டது. வன்னிப் பிராந்திய கட்டளைத் தளபதிகள், பிரிகேடியர்கள் மற்றும் அதிரடிப் படையின் உயரதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.