வசந்தம் போதும் எமக்கு! : தானிஸ் அஷ்ரப்

வசந்தம் போதும் எமக்கு

வடக்கு வெழுத்தது
வசந்தம் கிடைத்தது
வழக்கு ஜெயித்தது
கணக்கும் முடிந்தது
நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் வலிக்கிறது…
உனக்கேன் வீண் பாட்டு
உடனே நிப்பாட்டு.

சுணங்கும் வேளையில்
இனங்கள், சனங்கள்
சுகங்கள் இன்றி
சுருளும் மடியும்
உனக்கேன் வீண் பாட்டு?
மனங்களை மாற்று
மறுவாழ்வு காட்டு!

புலர மறுக்கும் பொழுதெல்லாம்
தருமா வசந்தம்?
கதறும் குழந்தைக்கும்
பதறும் அன்னைக்கும்
அறுந்த உறவுக்கும்
பிரிந்த உயிருக்கும்
தெரிந்தால் கூறும்
தெவிட்டாத வசந்தம்?

இனியும் ஒரு யுத்தம்
இம்மண்ணில் வேண்டாம்
கனியும் ஒரு காலம்
காலடிக்கே வந்தது
தயவு செய்து
தரும போதனைகளை
மர்ம சாதனைகளாக்க வேண்டாம்
கர்ம வீரர்கள் மட்டும்
புறப்படட்டும்
காரியம் நடக்கட்டும்.

மானம் வேண்டுவோரின்
ஞாயங்களை
வாழவிடனும்
அப்போ
வானம் எங்கும்
வெள்ளி பொங்கி
கானம் பாடும்
காரிருள் தேயும்
காற்றுத் தழுவும்
வசந்தம் போதும் எமக்கு!

ஆக்கியோன்
தானிஸ் அஷ்ரப்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *