பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை தெளிவாக அறிய அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். இதனால் சுயேச்சையான ஒரு பிரேதப் பரிசோதனையை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று ஜாக்சன் குடும்பத்தினருக்கு நெருக்கமானவரான ஜெஸி ஜாக்சன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெஸி கூறுகையில், ஜாக்சனின் மறைவு குறித்து பல பதில்களே இல்லாத கேள்விகள் நம்மிடையே உலவுகின்றன. ஜாக்சனின் தனிப்பட்ட டாக்டர் குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
எனவே இதுதொடர்பாக இன்னொரு அட்டாப்சியை நடத்த அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். இருப்பினும் இதை தனிப்பட்ட முறையில் நடத்த அவர்கள் விரும்புகின்றனர். முடிவு மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான ஏற்பாடுகள் இதுவரை செய்யப்படவில்லை என்றார் அவர்.