2009

2009

ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரை:

parliament.jpgவட மாகாணம் விடுவிக்கப்பட்டிருப்பதைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனால் இன்று முதல் ஒரு வாரத்திற்கு அரசாங்க நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்றி வைப்பதற்குப் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றுகாலை 9.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அவ்வுரையை சகல அரசாங்க நிறுவனங்களினதும் அதிகாரிகளும் செவிமடுக்கவும், பார்க்கவும் ஏற்பாடு செய்யுமாறும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திஸாநாயக்க ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

இந்த அறிவுறுத்தலை அவர் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களுக்கும், சகல திணைக்களத் தலைவர்களுக்கும், சகல கூட்டுத்தாபன நியதிச் சபைத் தலைவர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும், அரசாங்க அதிபர்களுக்கும் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம் World Hepatitis Day – புன்னியாமீன்

hepatitis_a_virus_.jpgஇன்று மே மாதம் 19ஆம் திகதி உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினமாகும்.

பொதுவாக சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவது ஒரு குறிப்பிட்ட விடயத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக வேண்டியேயாகும். குறிப்பாக அத்தினத்தின் முக்கியத்துவத்தினை கருத்தரங்குகள். போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்,  பதாதைகளை வெளியிடுதல்,  கலைநிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பல்வேறுபட்ட கருத்திட்டங்கள் ஊடாக வெளிப்படுத்தப்படும். இந்த அடிப்படையில் இன்றைய தினம் உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

பொதுவாக ஹபடைடிஸ் நோய் விட்டமின் பி மற்றும் சி குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் பற்றி மக்களுக்கு அறிவூட்டல் அதிகமாகத் தேவைப்படுகின்றது. இந்நோய் பற்றியும்நோயின் அறிகுறிகள்,  தன்மைகள் பற்றியும்  தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் மக்களுக்கு உணர்த்துவதும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி அறிவுறுத்துவதும்,  ஊக்குவிப்பதும் இத்தினத்தின் நோக்கங்களாகும் உலகின் ஏறக்குறைய 10 மில்லியன் மக்கள் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். இந்நோய்க்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அல்லது கவனக்குறைவோடு இருப்பின் ஈரல் புற்றுநோய்,  ஈரல் செயலிழத்தல் மற்றும் ஆபத்தான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வருடா வருடம் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினத்தை   உலக ஹபடைடிஸ் நற்பணி கழகம் முன்னின்று ஏற்பாடு செய்கின்றது. இந்த நற்பணி கழகத்தில் 200 நோயாளர் தொகுதிகளும், ஹபடைடிஸ் சி – டிரஸ்ட் ஐரோப்பா ஈரல் நோயாளர் சங்கம் மற்றும் சீன ஹபடைடிஸ்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனம் என்பன அங்கம் வகிக்கின்றன. தற்போது உலகிலுள்ள HIV \ AIDS  நோயாளர்களைவிட 10 மடஙகு அதிகமான ஹபடைடிஸ் நோயாளர்கள் இருக்கின்றனர் என கூறப்படுகின்றது.

ஹபடைடிஸ் நோய் ஹபடைடிஸ் ஏ, ஹபடைடிஸ் பி என்று இரண்டு பிரதான வகைகளைக் கொண்டது. இந்நோய்கள் பற்றி சிறிய விளக்கமொன்றினைப் பெற்றுக் கொள்வோம்.

ஹபடைடிஸ் ஏ

ஹபடைடிஸ் ஏ எனப்படும் நோயானது கல்லீரலில் ஹபடைடிஸ் ஏ என்னும் வைரஸ் கிருமியினால் ஏற்படுவதாகும். இந்நோய் அசுத்தமான உணவுகளை உட்கொள்ளல், ஹபடைடிஸ் ஏ நோய் கண்ட நபருடன் நெருங்கிப் பழகுதல் போன்ற காரணங்களினால் பரவுகின்றது. இந்நோய் நீரினாலும் பரப்பப்படலாம். ஹபடைடிஸ் ஏ வைரஸ் நோய் தொற்றிய நபரில்,  நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 15 முதல் 45 நாட்கள் எடுக்கும். மேலும் பாதிப்புக்குட்பட்ட முதல் வாரகாலத்தில் மலத்தின் வழியாக இவ் வைரஸ் வெளியேற்றப்படுகிறது. இந்த வைரஸ் இரத்தம் மற்றும் பிற உடற்கூறு சுரப்பிகள் வழியாகவும் தொற்றக்கூடியது. இவ்வகை வைரஸ் நோய் குணமான பின் உடலில் தங்கியிருக்காது. மற்ற பொதுவான ஹபடைடிஸ் வைரஸ் நோய் தொற்றுகளாவன, ஹபடைடிஸ் பி மற்றும் சி.எனும் கிருமிகளினால் ஏற்படுகின்றது.

இந்நோயின் அறிகுறிகளக பின்வருவன ஏற்படும். வெளிர்ந்த அல்லது களிமண் நிற மலம் வெளியாதல், கருமை நிறத்தில் சிறுநீர் வெளியாதல்,  உடலில் அரிப்புத் தன்மைஏற்படல், மஞ்சள் காமாலை,  உடல் சோர்வு,  பசியின்மை,  குமட்டலுடன் வாந்தி,  மிதமான காய்ச்சல்.

இந்நோய் தொற்றாமல் இருப்பதற்கான தடுப்பு முறைகள் வருமாறு: ஹபடைடிஸ் நோயாளியின் இரத்தம், மலம் மற்றும் உடல்திரவம் போன்றவற்றை கையாண்ட பின்னர் கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்வது,  கழிவறையை பயன்படுத்திய பின்னும் கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்தல்,  உணவு உட்கொள்ளும்போதும் நீராகாரங்கள் பருகும்போதும் அவதானமாக இருத்தல்.

ஹபடைடிஸ் ஏ நோய்க்கான தடுப்பூசிகள் இருக்கின்றன. தடுப்பூசி ஏற்றிக்கொண்டு நான்காவது வாரத்திலிருந்து இம்மருந்தானது இந்நோய் ஏற்படுவதை தடுக்கிறது. நீண்ட நாள் பாதுகாப்பிற்கு, முதல் ஊசிபோட்டு ஆறிலிருந்து பன்னிரண்டு மாதத்திற்குள் பூஸ்டர் டோஸ் என்னும் கூடுதல் ஊசி எடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து மேலதிக ஆலோசனைகளை வைத்தியர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். 

இந்நிலையில் இந்த தடுப்பூசியை யார் ஏற்றிக் கொள்ள வேண்டும்? என்ற வினாவும் எழுகின்றது. குறிப்பாக ஹ‎படைடிஸ் ஏ நோய் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பரவியிருந்தால். அப்பிரதேசத்தில் வாழும் ஏனைய மக்கள் மற்றும் நீண்ட நாட்களாய் ஹ‎படைடிஸ் பி அல்லது சி நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களும்  இத்தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளல் வேண்டும்.

ஹபடைடிஸ் பி

ஹபடைடிஸ் பி வைரஸ் கண்ட பெரும்பாலான நபர்கள் 6 மாத காலத்திற்குள் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.  இந்த குறுகிய கால நோய் தொற்றினை அக்யூட் ஹபடைடிஸ் பி என்பர். ஹபடைடிஸ் தொற்று கண்ட சுமார் 10 சதவீத மக்களில் இவ்வகை நோய் நீண்ட நாட்களுக்கு பாதிப்பை உருவாக்குகின்றது என சில ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நோய்க்கான அறிகுறிகளை பின்வருமாறு நோக்கலாம். உடல் சோர்வும் உடல்நலம் குன்றுதலும்,  மூட்டுகளில் வலி ஏற்படுதலும் குறைந்த அளவு காய்ச்சல் ஏற்படுவதும். மேலும்,  குமட்டல், வாந்தி, பசியின்மை  வயிற்றுவலி,  மஞ்சள் காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியாதல் போன்றனவையும் இந்நோய்க்கான அறிகுறிகளாகக் கூறப்படுகின்றது. 

ஆனால் பலருக்கு இந்நோயின் அறிகுறிகள் தோன்றுவதே இல்லை. இந்த அடிப்படையில் அறிகுறிகள் இல்லாத நோயாளிகள், இந்நோயினை பிறருக்குப் பரவச் செய்ய வாய்ப்புகள் அதிகம். இவ்வகை நோய்கண்ட நபரில்,  கல்லீரலானது நிரந்தரமாக சேதம் அடையக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அவையாவன, சிர்ரோஸிஸ் (கல்லீரலில் ஏற்படும் தழும்புக்காயங்கள்) மற்றும் கல்லீரல் புற்று நோய் என்பனவும் நீண்ட நோயாளிகளுக்கு பின்பு ஏற்பட இடமுண்டு.

ஹபடைடிஸ் பி இரத்தத்தின் மூலமும் மற்றும் உடற்திரவங்கள் மூலமும் பரவுகிறது. கீழ்காணும் முறையிலும் நோய் தொற்ற  இடமுண்டு. வைத்தியசாலைகளில் நோய்கண்ட நபரின் இரத்தத்தை கையாள்வதின் மூலம் மருத்துவர்கள், தாதியர் இந்நோயின் பாதிப்புக்கு உட்பட இடமுண்டு. மேலும்,  நோய் கண்ட நபருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உடலுறவு கொள்ளல்,  நோய்வாய்ப்பட்ட நபரின் இரத்தத்தினை பிறர்க்கு செலுத்துதல்,  ஒரே ஊசியினை பலர் பகிர்ந்து கொள்ளுதல் போன்வற்றினூடாகவும் இந்நோய் பரவலாம். அதேநேரம்,  நோய் கண்ட தாய்க்கு பிறக்கும் நோய் காவப்படுகின்றது.

இந்நோய்க்கான தடுப்பு முறைகள்: விசேடமாக இரத்த தானம் செய்பவர்கள் இரத்தத்தை பரிசோதித்த பின்பே தானம் செய்தல்  தடுப்பு ஊசியினை முழுமையான நோய் எதிர்ப்பு தன்மையை அடைய ஒரு நபர் ஆறுமாத காலத்திற்குள் மூன்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும், குறைந்த நாள்பட்ட அல்லது நாள்பட்ட ஹபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் கொண்டவரோடு பாலுறவு கொள்வதினை தவிர்க்கலாம்

ஹபடைடிஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு முக்கியமான அறிகுறியாக காணப்படுவது மஞ்சள் காமாலையாகும். சில வகையான மருந்துகளை உட்கொண்டாலும் சிறுநீர் மஞ்சளாகப் போகும்.  குறிப்பாக வயிற்றோட்டத்திற்குத் தருகின்ற ·ப்ளுரோ ஸோஸிடோன் மருந்து,  அதிக உஷ்ணத்தாலும் சிறுநீர் மஞ்சளாகப் போகும்.  எனவே,  ஒருவருக்கு சிறுநீர் மஞ்சளாகப் போனால் அவரை பரிசோதனை செய்ய வேண்டும்.  அத்துடன் அவரது சிறுநீரிலும், இரத்தத்திலும் சில அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படல் வேண்டும்.  இதன் மூலம் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதா?  இல்லையா?  என்பதைக் கண்டறியலாம்.  பரிசோதனையினூடாகவே இந்நோயை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு சிகிச்சையினைத் தொடங்க முடியும்.

இந்தியா, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு மக்கள் மஞ்சள் காமாலையைப் பொறுத்த அளவில், இரு பெரும் தவறுகளைச் செய்து விடுகிறார்கள், முதலாவது, மஞ்சள் காமாலை வந்து விட்டதா?  இல்லையா?  என்பதை அறிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். இரண்டாவது, மஞ்சள் காமாலைக்குச் சிகிச்சை செய்யும் முன், அது எந்த வகை மஞ்சள் காமாலை எதனால் அது வந்தது?  என்று பார்க்காமல் நேரடியாகவே, சிகிச்சைக்குப் போய் விடுகிறார்கள்.

உண்மையிலேயே மஞ்சள் காமாலை பாராதூரமான நோயல்ல. நோயையறிந்து வைத்தியம் மேற்கொள்வோமாயின் இது சாதாரண நோய். இதை வேறு வகையில் கூறுவதாயின் ஒரு நோயின் அறிகுறியாகத்தான் இதனைக் கொள்ள வேண்டியுள்ளது. 

கிராமிய வைத்திய முறையில் மாதுளம் பழச்சாறு தயாரித்து அதை ஒரு இரும்புச் சட்டியில் நான்கு மணி நேரம் வைத்திருந்து பிறகு பருகி வரவேண்டும் என்று கூறுவார்கள். பத்து நாட்கள் இதே முறையில் தயாரித்து இரும்புச் சட்டியில் வைத்திருந்து பருகி வந்தால் மாதுளம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து, பொசுபரஸ், கல்சியம், விட்டமின் ஏ முதலியவற்றால் கல்லீரல் புதுப்பிக்கப்பட்டு பலம் பெறும் என்பார்கள். இல்லையெனில் காலை நேரத்தில் இரண்டு மாதுளம் பழங்கள் சாப்பிடலாம். இவற்றில் உள்ள உயர்தரமான ஆர்கானிக் அமிலம் உடலுக்கும் உள்ளத்துக்கும் உடனடியாக சக்தியை வழங்கிவிடும். எவ்வாறாயினும் நோய் தொற்றியவர்கள் வைத்தியரின் ஆலோசனைப் பெற்று சிகிச்சைப் பெறுவது இந்த நவீன காலத்தில் மிகவும் ஏற்புடையதாகும்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0519-world-hepatitis-day.html

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: செ. பத்மநாதன் செவ்வி

Selvarasa_Pathmanathan_LTTEவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனும் பாதுகாப்பாகவும் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக இராசரீக உறவுகளுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் நேற்று மாலை 7 மணியளவில் தொலைபேசி வாயிலாக அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.
 
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார். வவுனியா தடுப்பு முகாம் உண்மை நிலையை நேரடியாகச் சென்று அனைத்துலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டி சனல் 4  தொலைக்காட்சின் செய்தியாளர் நிக் பற்றன் வோஸிற்கு (Nick Patton Walsh) வழங்கிய செவ்வியிலேயே பத்மநாதன் இதனைக் கூறினார்.

ஆங் சான் சூசி மீது விசாரணை

shan-zuki.jpgபர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவியான ஆங் சான் சூ சி அவர்கள் ரங்கூனில் விசாரணை மன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கான விதிமுறைகளை மீறினார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அங்குள்ள வாவி ஒன்றை நீந்திக் கடந்து அவரது வீட்டுக்குச் சென்ற ஒரு அமெரிக்கருடன் இந்தக் குற்றச்சாட்டு தொடர்புடையதாகும்.அந்த மனிதர் அழைப்பு ஏதும் இல்லாமலேயே அங்கு வந்ததாக ஆங் சான் சூசியின் சட்டத்தரணி வாதாடினார். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.

பிரபாகரன் மறைவு எதிரொலி: மதிமுக தொண்டர் தீக்குளிப்பு

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தொலைக்காட்சி சொல்லிவருகிறது.  இதனால் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.

இதனால் மனம் கொதித்துப்போன மதிமுக தொண்டர் தீக்குளித்துள்ளார்.   அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்குளித்த மதிமுக தொண்டர் சிதம்பரம் அருகில் உள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர்.

பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதை இந்தியாவுக்கு உறுதி செய்தது இலங்கை அரசு.

Pirabakaran_Vராணுவ முற்றுகையின் போது, பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதை இந்தியாவுக்கு உறுதி செய்தது இலங்கை அரசு. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று போன் செய்துள்ளார். அப்போது, பிரபாகரன் கொல்லப்பட்ட விஷயத்தை உறுதி செய்ததாகவும்,  அதிகாரப்பரவல் குறித்த நடவடிக்கை எடுப்பது குறித்தும் இருவரும் தகவல் பரிமாறிக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி விஷ்ணு பிரசாத்,  ‘’இலங்கையில் பல ஆண்டாக நடந்து வந்த உள்நாட்டுப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே தெரிவித்தார். பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட விஷயத்தையும் அவர் உறுதி செய்தார். ‘இந்நிலையில், அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்து, தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் அதிகாரப்பரவலை நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரணாப் வலியுறுத்தினார்’ என்று தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்: பழ.நெடுமாறன் பேட்டி

Pirabakaran_Vஇன்று இரவு சென்னையில் உள்ள கொங்கு தமிழ் அறக்கட்டளையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்களான பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன் ஆகியோர் ஒன்று கூடி இலங்கையின் தற்போதுள்ள நிலைமை குறித்து  தீவிரமாக  ஆலோசித்து வருகிறார்கள். இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு முன்பாக பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.

பிரபாகரன் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையா? பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?

பிரபாகரன் நலமுடன் தான் இருக்கிறார்.

எப்படி இவ்வாறு உறுதியுடன் சொல்கிறீர்கள்.  நீங்கள் அவருடன் பேசினீர்களா?

நான் சொல்வதை வைத்தே புரிந்துகொள்ளுங்கள்.

இலங்கை பிரச்சனையில் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

மே-21ல் தமிழகம் முழுவதும் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

நாளை முதல் வெற்றி வாரம் பிரகடனம்

sri-lankan-government.jpgஇலங்கை யின் வட பிரதேசம் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் முகமாக நாளை 19 ஆம் திகதி முதல் ஒரு வார காலத்துக்கு அரசாங்கத்தினால் விடுதலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் சகல அரசாங்க நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றிவைக்குமாறும் நாளை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையை சகலரும் செவிமடுக்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் சகல அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அரச நிருவாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் வேண்டுகேள் விடுத்துள்ளார்.

யுத்தம் முழுமையாக நிறைவடைந்து விட்டது முப்படை தளபதிகளும் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

18052009.jpgபயங்கர வாதத்திற்கு எதிராக 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் முழுமையாக நிறைவடைந்து விட்டது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முப்படைத்தளபதியினால் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றி தங்களுடைய கடமைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் நாட்டின் முழு பாதுகாப்பும் படையினரின் வசமுள்ளதாகவும் முப்படைகளின் தளபதிகளும் படைத்தரப்பு முக்கியஸ்தர்களும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொட , விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க ,பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்

ஒரு வாரகாலத்திற்கு வகுப்புக்களை இடைநிறுத்துவதென யாழ் பல்கலைகழகழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது

jaffna_university.jpgவன்னியில் இடம்பெறும் அதிகரித்த மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளதால் யாழ்ப்பாண பல்கலைக்கழக வன்னி மாணவர்கள் கல்விகற்க முடியாத மனநிலை காரணமாக வரும் ஒரு வாரகாலத்திற்கு வகுப்புக்களை இடைநிறுத்துவதென யாழ் பல்கலைகழகழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

தமது பெற்றோர்கள் மற்றும் உறவுகளது மரணம் காரணமாக எமது பல்கலைகழக மாணவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். தமது உறவுகள் எங்கிருக்கின்றனர், எப்படி இருக்கின்றனர் என்று பெரும் கவலையுடன் இருப்பதனால் கல்வி கற்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இன்றுமுதல் வகுப்புக்களை இடைநிறுத்துவதென யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதன் காரணமக முன் காலாண்டு இடைப்பரீட்சைகளையும் பின்னர் நடத்தும்படி பீடங்களிடம் வலியுறுத்துகின்றோம். மாணவர்களது வகுப்புக்கள் தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்