பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென்று இஸ்ரேல் மீது அமெரிக்கா மீண்டும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசியபோது ஒபாமா இந்த அழுத்தத்தைக் கொடுத்தார்.
மேற்குக் கரையிலுள்ள யூதக் குடியேற்றங்களை அகற்றல் பலஸ்தீனை தனிநாடாக ஏற்றல் போன்ற விடயங்களை இஸ்ரேல் அவசரமாகச் செய்ய வேண்டும். இவ்விடயத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கத் தயார். சவூதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ள விஜயத்தின்போது இது பற்றி அந்நாட்டுத் தலைவர்களுடன் பேசப்படும் என்று ஒபாமா கூறியதாக அப்பாஸின் நெருங்கிய அதிகாரியொருவர் சொன்னார்.
இச்சந்திப்பில் பலஸ்தீன ஜனாதிபதி தனது நிலைப்பாட்டையும் விளக்கினார். இது பேச்சு வார்த்தைக்குரிய முக்கியமான நேரம் இரண்டும் இரண்டு நாடுகள் என்ற அந்தஸ்த்தில் பேசப்பட வேண்டும். இதற்கான ஆவணங்களையும் வரை படங்களையும் நாங்கள் சமர்ப்பிக்கின்றோம் என அப்பாஸ் கூறினார். பின்னர் வீதிகளின் வரைபடம். அரபு மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மாண நகல்கள் என்பன புஷ்ஷிடம் கையளிக்கப்பட்டன. அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுயோசனைகளை இத்திட்டம் கொண்டுள் ளதாக அப்பாஸ் நம்பிக்கையும் வெளியிட்டார்.
இஸ்ரேல் தனது நிலைப்பாட்டிலிருந்து விலக மறுத்தால் நீங்கள் ஆயுதம் ஏந்த வேண்டிவருமா என்று ஊடகவியலாளர் கேட்டகேள்விக்கு அப்பாஸ் பதிலளித்தார். அப்பதிலில் அப்பாஸ் கூறியதாவது,
இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவமானது உறதி மொழிகளை வழங்குமளவிலில்லை. ஆனால் உறுதி மொழிகள் சிறப்பானவை. நாம் இணைந்து செயற்பட்டு இவ்விடயத்தில் சாதனை புரிய வேண்டுமென்பதையே தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
முஸ்லிம் உலகுடன் நட்பை வளர்க்க விரும்பும் அமெரிக்கா இஸ்ரேல் அரபு பிணக்கு களுக்கு சமாதானத்தைக் காண விழைகின்றது.
மத்திய கிழக்கில் சமாதானம் வந்துவிட்டால் முஸ்லிம் உலகில் அமெரிக்காவின் ஸ்தானம் உயர்ந்துவிடும் ஆனால் இஸ்ரேலின் புதிய நிலைப்பாடுகள் பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினைக்கு முடிவுகாணத் தடையாகவுள்ளது. அமெரிக்கா இதனால் கவலையடைந்துள்ளது.