2009

2009

இஸ்ரேலின் நிலைப்பாட்டை மாற்ற அமெரிக்கா பகிரங்க அழுத்தம்

பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென்று இஸ்ரேல் மீது அமெரிக்கா மீண்டும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசியபோது ஒபாமா இந்த அழுத்தத்தைக் கொடுத்தார்.

மேற்குக் கரையிலுள்ள யூதக் குடியேற்றங்களை அகற்றல் பலஸ்தீனை தனிநாடாக ஏற்றல் போன்ற விடயங்களை இஸ்ரேல் அவசரமாகச் செய்ய வேண்டும். இவ்விடயத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கத் தயார். சவூதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ள விஜயத்தின்போது இது பற்றி அந்நாட்டுத் தலைவர்களுடன் பேசப்படும் என்று ஒபாமா கூறியதாக அப்பாஸின் நெருங்கிய அதிகாரியொருவர் சொன்னார்.

இச்சந்திப்பில் பலஸ்தீன ஜனாதிபதி தனது நிலைப்பாட்டையும் விளக்கினார். இது பேச்சு வார்த்தைக்குரிய முக்கியமான நேரம் இரண்டும் இரண்டு நாடுகள் என்ற அந்தஸ்த்தில் பேசப்பட வேண்டும். இதற்கான ஆவணங்களையும் வரை படங்களையும் நாங்கள் சமர்ப்பிக்கின்றோம் என அப்பாஸ் கூறினார். பின்னர் வீதிகளின் வரைபடம்.  அரபு மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மாண நகல்கள் என்பன புஷ்ஷிடம் கையளிக்கப்பட்டன. அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுயோசனைகளை இத்திட்டம் கொண்டுள் ளதாக அப்பாஸ் நம்பிக்கையும் வெளியிட்டார்.

இஸ்ரேல் தனது நிலைப்பாட்டிலிருந்து விலக மறுத்தால் நீங்கள் ஆயுதம் ஏந்த வேண்டிவருமா என்று ஊடகவியலாளர் கேட்டகேள்விக்கு அப்பாஸ் பதிலளித்தார். அப்பதிலில் அப்பாஸ் கூறியதாவது,

இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவமானது உறதி மொழிகளை வழங்குமளவிலில்லை. ஆனால் உறுதி மொழிகள் சிறப்பானவை. நாம் இணைந்து செயற்பட்டு இவ்விடயத்தில் சாதனை புரிய வேண்டுமென்பதையே தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

முஸ்லிம் உலகுடன் நட்பை வளர்க்க விரும்பும் அமெரிக்கா இஸ்ரேல் அரபு பிணக்கு களுக்கு சமாதானத்தைக் காண விழைகின்றது.

மத்திய கிழக்கில் சமாதானம் வந்துவிட்டால் முஸ்லிம் உலகில் அமெரிக்காவின் ஸ்தானம் உயர்ந்துவிடும் ஆனால் இஸ்ரேலின் புதிய நிலைப்பாடுகள் பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினைக்கு முடிவுகாணத் தடையாகவுள்ளது. அமெரிக்கா இதனால் கவலையடைந்துள்ளது.

தயா மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்

dayamaster000.gif இலங்கையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயல்பட்ட தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி வெள்ளியன்று முதல் தடவையாக கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட தயா மாஸ்டர் நீதவானின் அறைக்குள் ரகசியமான முறையில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி தயா மாஸ்டர் மற்றும்விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்ட ஜோர்ஜ் மாஸ்டர் எனப்படும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்னம் ஆகியோர் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்களவை காங். தலைவராக பிரணாப் முகர்ஜி மீண்டும் நியமனம்

india-f-m.jpgமக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். முந்தைய மக்களவையிலும் இவர் இதே பொறுப்பை வகித்தார். பிரதமர் மன்மோகன் சிங் இதற்கான நியமனத்தை செய்திருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் கே. பன்சால் இன்று தமது துறை பொறுப்பை ஏற்றபின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

73 வயதான பிரணாப் முகர்ஜி மேற்கு வங்க மாநிலம் ஜாங்கிபூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இறுதிக் கட்டயுத்தத்தில் இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையின் குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின் இறுதி மூன்று வார காலத்தில், யுத்தப் பகுதியில் சிக்குண்டிருந்த பொதுமக்கள் இருபதாயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள முன்னணி பிரிட்டிஷ் நாளேடு ஒன்றை இலங்கை அரசாங்கம் வன்மையாகச் சாடியுள்ளது.

உறுதிசெய்யப்படாத தகவல்கள் மற்றும் நிரூபிக்கப்படாத கூற்றுக்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மோசமான பிரச்சாரத்தை டைம்ஸ் நாளேடு நடத்திவருவதாக இலங்கையின் வெளியுறவுத்துறைச் செயலரான பாலித கோஹொன தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

mahinda-rajapaksha.jpgநேபாளத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்ற மாதவ் குமார் நேபாளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் பொதுவுடைமைவாதக் கட்சித் தலைவரான மாதவ் குமார் கடந்த 25ஆம் திகதி அந்நாட்டின் புதிய பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்தார். நேபாளப் பிரதமருக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ள ஜனாதிபதி,  இலங்கைக்கும் நேபாளத்துக்குமிடையிலான சரித்திர முக்கியத்துவமிக்க நெருக்கத்தையும் நட்புறவையும் ஞாபகப்படுத்தினார்.

உங்களது தலைமைத்துவத்தின் கீழ் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் வலுப்பெரும் என தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தங்களது நியமனம் நேபாளத்துக்கு ஒரு முக்கிய திருப்பம் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி,  நேபாளத்தில் ஜனநாயக ரீதியான புதிய அரசியல் வழமுறைகள் உருவாக வேண்டும் என்றும் இச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உறவினர்கள் பாதுகாப்பின் கீழ் வெளியேற அரசாங்கம் அனுமதி

வவுனியா நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள வயோதிபர்கள், காயமடைந்தவர்கள், அங்கவீனமானவர்களை அவர்களது உறவினர்களின் பாதுகாப்பின் கீழ் முகாமைவிட்டு வெளியேறுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

இதன்படி சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி வீ. ஜெகராஜசிங்கம் அல்லது பிரதி பொலிஸ் மா அதிபர் (வடக்கு) நிமால் லிவ்கேயுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் கூடிய விசேட கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்க ப்பட்டுள்ளது.

வயோதிபர்களை அவர்களது உறவினர்களுடன் அனுப்புவதற்கான தீர்மானம் முன்னமே எடுக்கப்பட்ட போதும் காயமடைந்தவர்கள், அங்கவீனமானவர்களையும் அனுப்புவதற்கும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராய்வதற்காக பசில் ராஜபக்ஷ தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதானமாக மேற்படி விடயமே ஆராயப்பட்டது. முகாமுக்குள் உள்ள வயோதிபர், காயமடைந்தவர், அங்கவீனமானோர் தனது உறவினர் என்பதை உறுதி செய்யும் விதத்தில் கிராம சேவகர், பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தலுடன் தான் குறிப்பிட்ட நபரை பராமரிக்க தகுதியுடையவர் என்பதையும் உறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலதிக விபரங்களை சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி வீ. ஜெகராஜசிங்கத்துக்கோ (001- 2883525) பிரதி பொலிஸ் மா அதிபர் (வடக்கு பிராந்தியம்) நிமால் லிவ்கேயுடனோ (024-2222227) தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

வவுனியா அரச அதிபரூடாக செயற்படுத்தப்படும் இவ்வேலைத் திட்டத்திற்கு சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இணைப்பாளராக செயற்படுவார்.

சானியா மிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம்

27-saniamirza.jpgடென்னிஸ் உலகின் இளம் புயல் சானியாமிர்சா. தனது மின்னல் வேக ஆட்டத்தால் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் மகேஷ்பூபதியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ் சிலாம் வென்று சாதனை படைத்தார்.
 
டென்னிஸ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சானியாமிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது. அவர் சிறு வயது முதலே தன்னுடன் படித்த சோரப்மிர்சா என்பவரை மணக்கிறார். இருவரும் நெருங்கிய உறவினர்கள்.  சோரப்மிர்சா ஐதராபாத்தில் பேக்கரி, ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது தந்தை கம்ரான் மிர்சா ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
 
சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சாவும், கம்ரான் மிர்சாவும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சானியா மிர்சா  சோரப் மிர்சா திருமண நிச்சயதார்த்தத்தை ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது.
 
நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று சோரப் மிர்சாவின் உறவினர்கள் தெரிவித்தனர். சானியா மிர்சாவின் திருமணம் பற்றி அறிந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறும்போது, சானியா மிர்சா திருமணத்திற்கு பிறகும் டென்னிஸ் ஆடவேண்டும் என்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் மறைந்திருக்கும் புலிகளை தேடி அழிக்கும் பணி ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் மறைந்திருக்கும் புலி உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பிரதேசத்தில் புலிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி முன்னேறிய நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை கல்முனை, நற்பிட்டிமுனை, சொறிக்கல்முனை, வீரமுனை, சம்மாந்துறை, காரைதீவு சுற்று வட்டாரத்தின் மத்தியில் அமைந்துள்ள வயல் வெளியில் காணப்படும் நாணல்காடு இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு அப்பிரதேசம் நோக்கி நாலா புறத்திலிருந்தும் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று காலை ஆறு மணி தொடக்கம் குண்டுத் தாக்கதல் நடத்திய விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் குறித்த பிரதேசத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரதேசம் ஆழம் கூடிய சகதியான சூழலைக் கொண்டுள்ளதால், தேடுதல் நடவடிக்கை முடிவடைய காலதாமதம் ஏற்படும் என அறிய முடிகிறது.

கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படும்போது கடந்த காலத்தில் இந்த நாணல்காட்டில் புலிகள் தங்கியிருந்து தாக்குதல்கள் மேற்கொண்டதாகவும், அதே பாணியில் இந்த நாணல் காட்டை தற்போது எஞ்சியுள்ள புலிகள் பயன்படுத்த எத்தனித்து வருவதாகவும், அதற்காகவே இப்பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு தேடுதல் நடத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய ரக ராடர் விமானம் இந்திய விமானப்படையில் இணைப்பு

iair-force.jpgபுதிய ரக ராடர் விமானம் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டது. இஸ்ரேலில் வடிவமைக்கப்பட்ட இந்த ரேடர் விமானம், ரஷ்யாவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தை கொண்டு 500 கி.மீ., தூரம் வரையில் கண்காணிப்பில் ஈடுபட முடியும் என்று தெரிகிறது. இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி முறைப்படி விமானப் படைக்கு அர்ப்பணித்தார். 

வாகரை இராணுவ முகாமில் மூன்று புலிகள் சரண்

மட்டக்களப்பு வாகரை இராணுவ முகாமில் எல். ரீ. ரீ. ஈ. இயக்க உறுப்பினர்கள் மூன்று பேர் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர். வாழைச்சேனை கொண்டையங்கேணி யைச் சேர்ந்த புகழேந்தி என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை அமரசிங்கம், வாகனேரியைச் சேர்ந்த ஹரன் என்றழைக்கப் படும் பரமக்குட்டி சாமுவேல், முள்ளிவட்டவானைச் சேர்ந்த ராகுலன் என்றழைக்கப்படும் செல்லப்பா சிவாநந்தன் ஆகியோரே சரணடைந்துள்ளவர்களாவர்.

இவர்கள் ரீ-56 ரக துப்பாக்கிகள்- 3, கைக்குண்டுகள் -03, கிளேமோர் குண்டு-1, டெட்டனேட்டர்கள்-3 ஆகிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் பாதுகாப்புப் படையினரிடம் கையளித்துள்ளனர். வாகரை- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் இவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக தெரிவிக்கப் படுகிறது.