2009

2009

புலிகளுக்கு சார்பான சில சர்வதேச அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராக சதி: ஜீ.எல்.பீரிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில சர்வதேச அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிரான சதித் திட்டங்களை தீட்டி வருவதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பு அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடிய சதி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
லண்டன் ஆர்ஜன் மாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச ரீதியாக வழிநடத்திய சில முக்கியஸ்தர்களை கைது செய்ததன் மூலம் இந்த நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்திற்கு எதிராக போலியான பிரசாரங்களை சில அமைப்புக்கள் முன்னெடுத்து வருவதாகவும், இதனை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்க்கமான போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியது

110909-india.jpgகொம்பெக் கிண்ண முக்கோண தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய – நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் இன்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி 2.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இப்போட்டியில் முக்கிய நிகழ்வுகளை இதே பக்கத்தில் பின்னூட்டமாக இணைக்க தேசம் நெட் விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

முதல் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்த நியூஸிலாந்து அணி தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பு தக்கவைத்துக்கொள்ள இன்றைய தினம் கட்டாயம் வெற்றிபெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நியூஸிலாந்து இன்றைய தினம் தோல்வி அடைந்தால் இலங்கை இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இந்திய அணி தனது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமல் இன்று களமிறங்குகிறது. இதனால் நியூஸிலாந்துடனான போட்டியில் சச்சின் டென்டுல்கர் மற்றும் டினேஷ் கார்த்திக் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

அத்துடன் முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ஒருநாள் அணிக்காக விளையாட இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

New Zealand 155 (46.3 ov)
Compaq Cup – 2nd Match

  New Zealand innings (50 overs maximum)
 BB McCullum†  lbw b Nehra  3 
 JD Ryder  lbw b Nehra  0 
 MJ Guptill  c Dravid b Yuvraj Singh  22
 LRPL Taylor  c †Dhoni b Singh  11 
 GD Elliott  c †Dhoni b Yuvraj Singh  22 
 JDP Oram  c & b Sharma  24 
 NT Broom  c Raina b Yuvraj Singh  21
 DL Vettori*  b Sharma  25
 KD Mills  b Singh  6 
 IG Butler  c Harbhajan Singh b Nehra  6 
 SE Bond  not out  10 
 
 Extras (lb 4, w 1) 5     
      
Total (all out; 46.3 overs) 155 (3.33 runs per over)
Fall of wickets1-1 (Ryder, 0.3 ov), 2-4 (McCullum, 2.2 ov), 3-19 (Taylor, 5.5 ov), 4-51 (Guptill, 14.6 ov), 5-66 (Elliott, 20.3 ov), 6-101 (Oram, 28.1 ov), 7-116 (Broom, 32.1 ov), 8-134 (Mills, 37.6 ov), 9-142 (Vettori, 42.3 ov), 10-155 (Butler, 46.3 ov) 
        
 Bowling
 A Nehra 8.3 0 24 3
 RP Singh 8 2 22 2 (1w) 
 I Sharma 10 2 26 2
 Yuvraj Singh 10 0 31 3
 Harbhajan Singh 8 0 39 0
 SK Raina 1 0 4 0
 YK Pathan 1 0 5 0

கொம்பெக் கிண்ண முக்கோண தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி- நியூஸிலாந்து அணியை 6 விக்கட்டுகளினால் வெற்றியீட்டியது

முதல் போட்டியிலும் இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடைந்த நியூஸிலாந்து அணி தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பு இழக்கிறது.

இலங்கை இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டன

India innings (target: 156 runs from 50 overs)
 
 KD Karthik  lbw b Mills  4
 SR Tendulkar  c Guptill b Vettori  46
 R Dravid  lbw b Oram  14 
 Yuvraj Singh  c Guptill b Vettori  8
 MS Dhoni*†  not out  35
 SK Raina  not out  45 
 
 Extras (lb 3, w 1) 4     
      
Total (4 wickets; 40.3 overs) 156 (3.85 runs per over)

To bat YK Pathan, Harbhajan Singh, RP Singh, A Nehra, I Sharma 
Fall of wickets1-7 (Karthik, 2.3 ov), 2-67 (Dravid, 18.1 ov), 3-71 (Tendulkar, 19.2 ov), 4-84 (Yuvraj Singh, 23.6 ov) 
        
 Bowling
 KD Mills 5.3 1 25  
 SE Bond 10 3 30 0  
 IG Butler 4 0 25 0  
 DL Vettori 10 0 33 2
 JDP Oram 7 1 19 1
 GD Elliott 2 0 9 0
 MJ Guptill 2 0 12 0

India won by 6 wickets (with 57 balls remaining)

பிக் பிரதர் நிகழ்ச்சி என மோசடி – துருக்கியில் 9 இளம் பெண்கள் மீட்பு

11-big-brother-girls.jpgபிக் பிரதர் ரியாலிட்டி ஷோவைப் போல நடத்துவதாக கூறி 9 இளம் பெண்களை மோசடியாக வரவழைத்து ஒரு வீட்டில் தங்க வைத்து அவர்களை கேமரா மூலம் ரகசியமாக ஆபாச படம் பிடித்து வந்துள்ளது துருக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 மாத வீட்டுச் சிறைக்குப் பின்னர் அந்தப் பெண்களை போலீஸார் மீட்டுள்ளனர்.

இஸ்தான்புல் அருகே உள்ள ஒரு வீட்டில்தான் இந்தப் பெண்களை அடைத்து வைத்திருந்தனர். பிக் பிரதர் நிகழ்ச்சி போல என்று கூறி இவர்களை வரவழைத்து வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டனர். பின்னர் ரகசியக் கேமரா ஒன்றின் மூலம் இவர்களது செயல்பாடுகளை ரகசியமாக படம்  பிடித்து அவற்றை இன்டர்நெட் மூலம் நேரடி ஒளிபரப்பாக காட்டி பணம் பார்த்துள்ளனர். இதில் அவர்களது பாத்ரூம் ஆபாச காட்சிகளும் படுக்கை காட்சிகளும் அடக்கம். அதை இன்டர்நெட்டில் வி்ற்றுள்ளது அந்தக் கும்பல்.

முதலில் பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெண்கள் தேவை என்று இந்த கும்பல் விளம்பரம் கொடுத்துள்ளது. அதைப் பார்த்து நிறையப் பெண்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு குரல் தேர்வு, முக அழகுத் தேர்வு என நிறைய நடத்தி பின்னர் 9 பேரை தேர்வு செய்து வீட்டுக்குள் அனுப்பி விட்டனர். இந்த நிலையில், இந்தப் பெண்களின் பெற்றோர்கள், தங்களது பெண்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் பெரும் குழப்பமடைந்து போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸ்  விசாரணையில், பிக் பிரதர் நிகழ்ச்சி என்ற பெயரில் 9 பெண்களும் சிக்கிய விவரம் தெரிய வந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்று அடைபட்டிருந்த 9 பெண்களையும் மீட்டனர்.

இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு

110909rahul_gandhi.jpgஅகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்தியாவின் தேசிய நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது நாட்டிலுள்ள நதிகளை இணைப்பதென்பது ஆபத்தான யோசனை என்றார்.

அத்தகைய திட்டங்களின் பாரதூர விளைவுகள் பற்றி சிந்திக்கப்பட்டதாக தனக்குத் தெரியவில்லை என்ற அவர் இயற்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடவேண்டும் என்றும் அதனுடன் விளையாடுவது பேரழிவினை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார்.

தமிழக முதல்வர் கருணாநிதி நதிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக அனைத்து நதிகளையும் இணைக்கலாம் என்கிறாரே என்று கேட்டபோது, அத்தகைய இணைப்பு ஆபத்தானது என்பது தனது சொந்தக் கருத்து என்றும், மேலும் மாநிலங்கள் நதி நீர் பங்கீடு குறித்த பிரச்சினைகளை வேறு வழிகளிலே தீர்த்துக்கொள்ள முயலலாம் என்றும் ராகுல் காந்தி பதிலளித்தார்.

சரணடைந்த புலி உறுப்பினர்களைப் புனர்வாழ்வு முகாமில் சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவு

999.jpgஇராணு வத்தினரிடம் சரணடைந்திருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களைப் புனர்வாழ்வு முகாமில் சேர்க்குமாறு கொழும்பு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி வன்னியில் விடுதலைப் புலிகளிடம் இராணுவப் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் 49 புலி உறுப்பினர்களை வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் சேர்க்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை இராணுவம் தனது கட்டுபாட்டின்கீழ் கொண்டுவந்த போது, கடந்த மே மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்தததாகக் கூறப்படும் 49 விடுதலை புலிகள் உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்

ஸ்வைன்: இந்தியாவில் 154 பலி

swine.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மகாராஷ்டிராவில் 5, கர்நாடகாவில் 4 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் சுமார் 176 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகபட்சமாக 68 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 32, மகாராஷ்டிராவில் 26, தமிழகத்தில் 19 மற்றும் ஹரியானாவில் 14 பேருக்கு பரவியுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,611 ஆக அதிகரித்துள்ளது.

கேமராமேனை அடிக்கவில்லை: ஹர்பஜன் சிங் விளக்கம்

கேமராமேனை நான் அடிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறினார். ஹர்பஜன் சிங், புதன்கிழமை பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்தபோது கேமராமேனை அடித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் கூறியதாவது: நான் கேரமாமேனை அடிக்கவில்லை. விமானநிலையத்துக்கு நான் வந்து காரிலிருந்து இறங்கியபோது எனது தலையில் வேகமாக ஏதோ பட்டது. அது கேமரா என்று அறியாமலேயே அதை நான் தள்ளிவிட்டேன். நான் அவரை அடிக்கவில்லை என்றார் அவர்.

மக்கள் விடுதலை முன்னணி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. – அவசர காலச் சட்டம் 87 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்!

26parliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 87 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் செலுத்தப்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததுடன் மக்கள் விடுதலை முன்னணி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஓமந்தையில் 27 கி.மீற்றரில் கண்ணி அகற்றல் பூர்த்தி – 26,734 மிதிவெடிகள், பெருமளவு ஆயுதங்கள் ஓமந்தையில் மீட்பு

100909kanni.jpgபுலிகளின் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்றை வவுனியா, ஓமந்தை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்றுக் காலை கண்டுப்பிடித்துள்ளனர். இந்தப் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போது புலிகளால் நிலத்திற்கு அடியில் புதைத்துவைக்கப்பட்டிருந்த 26 ஆயிரத்து 734 மிதிவெடிகள், 90 கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த கிளேமோர் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஓமந்தை பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அந்தப் பிரதேசத்தில் பாரிய தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன் போதே நிலத்துக்கடியில் புலிகளால் ஆயுதக் களஞ்சியம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததை கண்டுப் பிடித்துள்ளனர். இந்த களஞ்சிய சாலையில் 26,734 மிதிவெடிகளை புலிகள் மறைத்து வைத்துள்ளனர். இதேவேளை அந்தப் பிரதேசத்தின் மற்றுமொரு பகுதியிலிருந்து ரி.என்.ரி. ரக அதி சக்திவாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருந்த 90 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டு-01, 20 அடி உயரமும், 20 அடி சுற்றளவையும் கொண்ட சக்தி வாய்ந்த குண்டு- 01, ரி-56 ரக துப்பாக்கிகள்-46, எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகள்-05, ரி-81 ரக துப்பாக்கிகள் உட்பட பல வகையான பொருட்களை மீட்டெடுத்துள்ளனர்.

இந்த ஆயுதக் களஞ்சியத்தை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து மீட்டெடுத்ததன் மூலம் பாரிய அழிவுகளை தவிர்க்க முடிந்துள்ளது என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். எஞ்சிய பிரதேசங்களில் இதுபோன்ற ஆயுதங்கள் மற்றும் அதிசக்தி வாய்ந்த குண்டுகள் புதைத்து அல்லது மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுப்பிடிக்கும் பொருட்டு விசேட அதிரடிப் படையினர் அந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் தேடுதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் குறிப் பிட்டார்.

ஓமந்தை- மணலாறு (வெலிஓயா) வீதியில் 27 கி. மீ. தூரத்திற்கு கண்ணி வெடிகள் அக ற்றும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர்.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் கண்ணிகளை அகற்றும் பொறுப்பு விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. 27 கி. மீ. தூரத்தை கண்ணிகள் அற்ற பிர தேசமாகப் பிரகடனப்படுத்தியுள்ள விசேட அதிரடிப்படையினர் புளியங்குளம் நோக்கிய ஓமந்தை பணிக்கணை வீதியில் மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, ஆலங்குளம், நாவக்குளம் சந்தி, சின்னப்பிள்ளையார் குளம், கோவில் சந்தி, புளிந்தகுளம், நெடுங்குளம் பகுதிகள் பாதுகாப்பான பிரதேசங்களென விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர். இதேவேளை விமானங்களுக்கு பயன் படுத்தப்படும் ஐந்து கலன் எரிபொருள்கள் மற்றும் எம். ரி. ரக 189 காஸ் சிலிண்டர்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட ஒவ்வொரு கலன்களிலும் 18.9 லீட்டர் எரிபொருள் வீதம் 100 லீட்டர் எரிபொருட்களை இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குப்பிளான் பிரதேசத்திலிருந்து எரிபொருள் கலன்களையும் சுதந்திரபுரம் பிரதேசத்திலிருந்து காஸ் சிலிண்டர்களையும் படையினர் மீட்டெ டுத்துள்ளனர். 29.5 கிலோ கொள்ளளவைக் கொண்ட சிலிண்டர்கள் – 34, 13.5 கிலோ கொள்ளளவைக் கொண்ட காஸ் சிலிண்டர்கள்– 150 மற்றும் 2.5 கிலோ கொள்ளளவைக் கொண்ட 5 சிலிண்டர்களையுமே படையினர் மீட்டெடுத்துள்ளனர் என்று பிரிகேடியர் குறிப்பிட்டார்.

தயவுசெய்து கவனியுங்கள்…

070909.jpgஅனர்த்த நேரகால முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நேற்றுக்காலை பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களில் இருந்து நேற்றுக்காலை சரியாக 10 மணிக்கு இப்பரீட்சாத்த ஒலியும், அறிவிப்பும் இடம்பெற்றன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கொழும்பு தலைமையகத்திலிருந்து இப்பரீட்சாத்த நடவடிக்கை இடம்பெற்றது.

அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களில் இருந்து எட்டு வகையான அறிவித்தல் களும், அதேபோன்று எட்டுத்தடவைகள் ஒலிகளும் இப்பரீட்சாத்த நடவடிக்கையின் போது எழுப்பப்பட்டன.

முதலாவதாக தயவு செய்து கவனியுங்கள் சூறாவளி அபாயம் உள்ளது என்றும், மேலதிக கட்டளைகளுக்கு காத்திருங்கள் எனவும், சூறாவளி அபாயம் நீங்கிவிட்டது எனவும், கரையோர சமூகங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர அறிவுறு த்தப்பட்டுள்ளன என்றும், சூறாவளி அபாயம் நீங்கி விட்டது என்ற அறிவித்தலும் மற்றும் பலத்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது, சுனாமிக்கான வாய்ப்பும் உள்ளது மேலதிக கட்டளைகளுக்கு காத்திருங்கள் எனவும், சுனாமி எச்சரிக்கை இரத்துச் செய் யப்பட்டுள்ளது சுனாமி அச்சம் எதுவுமில்லை, சுனாமி ஏற்படலாம் கரையோர சமூகங்கள் பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர அறிவுறுத்தப்பட்டுள்ளன, சுனாமி ஆபத்து அகன்று விட்டது எனும் எட்டு வகையான அறிவித்தல்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அறிவிக்கப்பட்டன.

இக்கோபுரங்களிலிருந்து பரீட்சாத்து நடவடிக்கை இடம்பெறுவதை அவதானிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே. விமல்ராஜின் தலைமையிலான குழுவினரும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனர்த்த நேரகால எச்சரிக்கைப் பிரிவினரும், கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் அவதானத்தில் ஈடுபட்டனர்.

கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அதி காரிகளும் உரிய இடங்களில் நின்றனர். மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனர்த்த நேரகால எச்சரிக்கை பிரிவுத் தொண்டர்கள் தமது முழுமையான தொண்டர் சேவையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இப்பரீட்சாத்த நடவடிக்கையை பார்வையிடுவதற்காக பெருந்தொகையான பொது மக்கள் இக்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் நின்றுகொண்டிருந்ததையும் காணமுடிந்தது.