17

17

வெள்ளைக்கொடியுடன் வந்த பணயக்கைதிகளை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் – எதிர்ப்புப்போராட்டத்தில் மக்கள் !

வெள்ளை கொடியுடன் காணப்பட்ட பணயக்கைதிகளையே இஸ்ரேலிய படையினர் சுட்டுக்கொன்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

காசாவில் மேற்கொண்ட இராணுவநடவடிக்கையின் போது ஹமாசிடம் பணயக்கைதிகளாகயிருந்த மூவரை தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

யொட்டாம் ஹைம் சமெர் தலக்கா அலோன் சர்மிஸ் என்ற மூன்று பணயக்கைதிகளையே தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவின் வடபகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலிய படையினரால் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய படையினரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூன்று பணயக்கைதிகளும் ஒரு கட்டடிடத்திலிருந்து சேர்ட் இல்லாமல் வெளியே வந்தனர் ஒருவரின் கையில் தடியுடன் வெள்ளை கொடி காணப்பட்டது என்ற விபரம் தெரியவந்துள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பத்து மீற்றர் இடைவெளியில் காணப்பட்டதால் படைவீரர் ஒருவர் அச்சமடைந்தார் அவர்கள் பயங்கரவாதிகள் என அறிவித்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் இருவர் உடனடியாக கொல்லப்பட்டனர் காயமடைந்த மற்றைய நபர் கட்டிடத்திற்குள் ஓடினார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்

கட்டிடத்தின் உள்ளேயிருந்து ஹ{ப்ருமொழியில் கூக்குரல் கேட்டது  அந்த பிரிவிற்கான தளபதி உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார் எனினும் காயமடைந்த மூன்றாவது நபர்வெளியே வந்ததும் உடனடியாக சுடப்பட்டார் என இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பணயக்கைதிகளை ஹமாஸ் கைவிட்டிருக்கவேண்டும் அல்லது ஹமாஸ் உறுப்பினர்கள் தப்பியோடியிருக்கவேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  இஸ்ரேலில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்

டெல்அவியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அவர்கள் தாயகம் கொண்டுவாருங்கள் என கோசமிட்டுள்ளனர்.

 

 

 

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதல் – இரண்டு பெண்கள் பலி!

காசாவில் சனிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் தஞ்சமடைந்திருந்த தாயும் மகளும்  கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்குகரை காசா இஸ்ரேல் ஜோர்தானில் கிறிஸ்தவ தேவலாயங்களை மேற்பார்வை செய்யும்  Latin Patriarchate of Jerusalem, என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

யுத்தம் ஆரம்பித்த பின்னர் காசாவில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள்இந்த தேவாலயத்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என  Latin Patriarchate of Jerusalem, தெரிவித்துள்ளது.

தேவாலயத்தின் கன்னியாஸ்திரிகள் பிரிவில் நடமாடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் சினைப்பர் தாக்குதலிற்குள்ளாகினர் காயமடைந்த ஒருவரைதூக்கிசெல்லப்பட்டவர் கொல்லப்பட்டார்என Latin Patriarchate of Jerusalem  தெரிவித்துள்ளது.

எந்த முன்னெச்சரிக்கையும் முன்னறிவித்தலும் இன்றி இந்த தாக்குதல் இடம்பெற்றது எந்த அத்துமீறல்களும் இடம்பெறாத தேவாலயவளாகத்திற்குள் அவர்கள் சுடப்பட்டனர் எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது.

54 மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த அன்னை தெரேசாவின் சகோதரிகள் என்ற கன்னியாஸ்திரிகள் மடமும் இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கிகளின் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது,இதன் போது அந்த கட்டிடத்திற்கு மின்சாரத்தை வழங்குவதற்கான ஒரேயொரு வழிமுறையாக காணப்பட்ட மின்பிறப்பாக்கி சேதமடைந்துள்ளது எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது.