31

31

டிசம்பர் மாதத்தில் இலங்கை வந்த 2 லட்சம் சுற்றுலா பயணிகள் !

இலங்கையில் இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் சுமார் 200,000 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு மாதத்தில் வந்த வருகையை விட அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான மொத்த வருகைகள் கிட்டத்தட்ட 1.5 மில்லியனை நெருங்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார், இது ஜனவரி 2023 இல் நிர்ணயிக்கப்பட்ட அசல் இலக்காகும்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தற்போது இலங்கையின் சுற்றுலாத் துறை மீட்சியடைந்துள்ளது.

 

சுற்றுலாத் துறையின் மீட்சியானது 2022 இல் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்த இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்களை உறுதிப்படுத்த உதவியுள்ளது.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எப்போது..? – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

அரசியலமைப்பின் பிரகாரம், 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க நாளை முதல் தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

 

அரசியலமைப்பின் அடிப்படையில் ஒக்டோபர் 16ஆம் திகதி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

 

அதற்கான பிரதான பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக தற்போது, முன் ஆயத்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஊடகங்கள் ஊடான விளம்பரங்கள் நாளை முதல் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

 

வழக்கமாக ஆண்டு தோறும் தேருநர் இடாப்பு மீளாய்வுப் பணிகள் பெப்வரி முதலாம் திகதியிலிருந்தே ஆரம்பிக்கப்படுகிறது.

 

எனினும், இந்த ஆண்டு தேர்தல் காலமாக இருப்பதனால் ஆணைக்குழுவானது அப்பணியை முற்கூட்டியே ஆரம்பித்துள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

விஷம் குடித்து மூன்று பிள்ளைகளுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தாய் !

மாலம்பே, கஹந்தோட்டை பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

உயிரிழந்த பெண் 35 வயதுடையவர் எனவும், உயிரிழந்த மூன்று பிள்ளைகளில் இரண்டு சிறுவர்களும் ஒரு சிறுமியும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

உயிரிழந்த சிறுவர்களில் இருவர் 09 மற்றும் 10 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

யுக்திய விசேட நடவடிக்கை – கைப்பற்றப்பட்ட 85கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

யுக்திய விசேட நடவடிக்கையின்போது 11 நாட்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 85 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் 55 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று (31) தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொதுமக்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு 10,798 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.