26

26

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முதல் இந்துப்பெண்ணாக வரலாறு படைத்துள்ள சவீரா பர்காஷ் !

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

 

இதனூடாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ் பெற்றுள்ளார். பாகிஸ்தான் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

 

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

 

பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு சிக்குண்டு கிடக்கும் நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது.

 

அதேவேளை 2022ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கும் சவீரா, பனெரிலிருந்து பொதுத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காசாவுக்கு ஆதரவாக உஸ்மான் கவாஜாவின் விழிப்புணர்வுக்கான கோரிக்கை – நிராகரித்தது ICC !

காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றைய போட்டியில் தனது கிரிக்கெட் மட்டை மற்றும் காலணிகளில் ஆலிவ் கிளை மற்றும் புறாவை காட்சிப்படுத்த வேண்டும் என்ற உஸ்மான் கவாஜாவின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

 

அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது, காசா மக்களுக்கு ஆதரவாக அவர் கையில் கருப்பு பட்டியை அணிந்திருந்தார்.

 

மேலும் பயிற்சியின் போது அவர் தனது காலணிகளில், ‘எல்லா உயிர்களும் சமம்’ மற்றும் ‘சுதந்திரம் ஒரு மனித உரிமை’ போன்ற என்ற வாசகத்தை வைத்திருந்தார்.

 

இந்த நடவடிக்கைக்காக கவாஜா ஐசிசி.யால் எச்சரிக்கப்பட்டிருந்தார்.

 

மேலும் அவர் கருப்புக் பட்டி அணிந்தமை மற்றும் உபகரணங்களில் வைத்திருந்த வாசகங்கள் ஐசிசி விதிமுறைகளை மீறுவதாகக் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்பின் சுரங்கத்தில் இருந்து இஸ்ரேல் பணயக் கைதிகள் சடலமாக மீட்பு !

ஹமாஸ் அமைப்பினரால் காசா முனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்களில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களான இடன் சிஷெர்யா, சிவ் டடூ, எலியொ டுலிடனொ, நிக் பெய்சர், ரொன் ஷெர்மென் ஆகிய 5 பேரை இஸ்ரேல் படையினர் சடலமாக மீட்டுள்ளனர்.

காசாவில் ஹமாஸ் சுரங்கத்தில் இருந்து 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 5 பேரின் உடல்களை பாதுகாப்புப்படையினர் இஸ்ரேலுக்கு கொண்டு சென்றனர்.

காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.