காசாவுக்கு ஆதரவாக உஸ்மான் கவாஜாவின் விழிப்புணர்வுக்கான கோரிக்கை – நிராகரித்தது ICC !

காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றைய போட்டியில் தனது கிரிக்கெட் மட்டை மற்றும் காலணிகளில் ஆலிவ் கிளை மற்றும் புறாவை காட்சிப்படுத்த வேண்டும் என்ற உஸ்மான் கவாஜாவின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

 

அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது, காசா மக்களுக்கு ஆதரவாக அவர் கையில் கருப்பு பட்டியை அணிந்திருந்தார்.

 

மேலும் பயிற்சியின் போது அவர் தனது காலணிகளில், ‘எல்லா உயிர்களும் சமம்’ மற்றும் ‘சுதந்திரம் ஒரு மனித உரிமை’ போன்ற என்ற வாசகத்தை வைத்திருந்தார்.

 

இந்த நடவடிக்கைக்காக கவாஜா ஐசிசி.யால் எச்சரிக்கப்பட்டிருந்தார்.

 

மேலும் அவர் கருப்புக் பட்டி அணிந்தமை மற்றும் உபகரணங்களில் வைத்திருந்த வாசகங்கள் ஐசிசி விதிமுறைகளை மீறுவதாகக் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *