ICC

ICC

காசாவுக்கு ஆதரவாக உஸ்மான் கவாஜாவின் விழிப்புணர்வுக்கான கோரிக்கை – நிராகரித்தது ICC !

காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றைய போட்டியில் தனது கிரிக்கெட் மட்டை மற்றும் காலணிகளில் ஆலிவ் கிளை மற்றும் புறாவை காட்சிப்படுத்த வேண்டும் என்ற உஸ்மான் கவாஜாவின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

 

அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது, காசா மக்களுக்கு ஆதரவாக அவர் கையில் கருப்பு பட்டியை அணிந்திருந்தார்.

 

மேலும் பயிற்சியின் போது அவர் தனது காலணிகளில், ‘எல்லா உயிர்களும் சமம்’ மற்றும் ‘சுதந்திரம் ஒரு மனித உரிமை’ போன்ற என்ற வாசகத்தை வைத்திருந்தார்.

 

இந்த நடவடிக்கைக்காக கவாஜா ஐசிசி.யால் எச்சரிக்கப்பட்டிருந்தார்.

 

மேலும் அவர் கருப்புக் பட்டி அணிந்தமை மற்றும் உபகரணங்களில் வைத்திருந்த வாசகங்கள் ஐசிசி விதிமுறைகளை மீறுவதாகக் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்கியது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) !

இலங்கை அணி தொடர்ந்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்துள்ளது.

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று (21) அஹமதாபாத்தில் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கடந்த 10 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக சபை எடுத்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கோரிக்கையை செவிமடுத்ததன் பின்னர் இருதரப்பு கிரிக்கெட் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகளில் இலங்கை அணியால் பங்கேற்க முடியும் என இன்று தீர்மானிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கைக்கு வழங்கப்படும் பிரதான கொடுப்பனவு கட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வாவும் கலந்துகொண்டிருந்தார்.