31

31

பாலஸ்தீனப் பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் – விசாரணைகளை மேற்கொள்ள சர்வதேச நீதிமன்றத்துக்கு அழைப்பு!

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றியுள்ளது.

பொதுச் சபை தீர்மானத்தில் இஸ்லாமிய உலகில் கிட்டத்தட்ட ஒருமித்த ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 87 வாக்குகள் ஆதராக அளிக்கப்பட்டன. இதில் ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி உட்பட 24 நாடுகள் எதிராக வாக்களித்தன. அதே நேரத்தில் 53 நாடுகளில் பிரான்சும் வாக்களிக்கவில்லை.

உலக நீதிமன்றம் என்றும் அழைக்கப்படும் ஹேக் அடிப்படையிலான சர்வதேச நீதிமன்றம், மாநிலங்களுக்கிடையேயான தகராறுகளைக் கையாளும் உயர்மட்ட ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்துக்கு அவற்றைச் செயல்படுத்த எந்த அதிகாரமும் இல்லை என்றாலும், அதன் தீர்ப்புகள் பிணைக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமையன்று பாலஸ்தீனியத் தலைவர்கள் வாக்கெடுப்பை வரவேற்றனர், மூத்த அதிகாரி ஹூசைன் அல்-ஷேக் ‘இது பாலஸ்தீனிய இராஜதந்திரத்தின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது’ என்று கூறினார்.

‘இஸ்ரேல் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, மேலும் நமது மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று பாலஸ்தீனிய அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் நபில் அபு கூறினார்

காதல் தோல்வி – பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜெய்தீப் ராய் (27) என்பவர் இளம்பெண்ணொருவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்ய விரும்பினார்.

ஆனால் அப்பெண் திருமணத்திற்கு மறுத்ததால் மனம் உடைந்த ஜெய்தீப் பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னர் அவர் பேசுகையில், நான் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என அவளிடம் காதலை முன்மொழிந்தேன்.

ஆனால், அனைவரின் முன்னிலையிலும் அவள் மறுத்துவிட்டாள். அவளின் மாமா எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார், நான் இந்த உலகை விட்டு போகிறேன் என்னால் என் காதலி கஷ்டப்படக்கூடாது.

அம்மா, மாமா, அத்தை, சகோதரி, மூத்த சகோதரர், மருமகள் மற்றும் அண்ணியிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன், ஆனால் நான் என் காதலியை அதிகமாக நேசிக்கிறேன், அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என கூறியிருக்கிறார்.

ஜெய்தீப் சகோதரர் ரூபம் ராய் கூறுகையில்,

எங்கள் குடும்பம் ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்ளது.

எங்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதனால்தான் இதுவரை நாங்கள் காவல்நிலையத்தில் முறைப்பாடு கூட பதிவு செய்யவில்லை. என் சகோதரரை கொன்றுவிடுவதாக அவளின் மாமா மிரட்டினார்.

என் சகோதரர் ஒரு நல்ல மனிதர், நன்றாக சம்பாதித்தார், ஆனாலும் அவர்களுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை என்றார்.

இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், ஜெய்தீப் குடும்பத்திடம் இருந்து எங்களுக்கு இன்னும் முறையான புகார் எதுவும் வரவில்லை, ஆனால் நாங்கள் விசாரணையைத் தொடங்கி விட்டோம் என்றார்.

பனிப்புயலால் உறைந்து போன நயாகரா நீர்வீழ்ச்சி!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் குளிர், மின்தடை, போக்குவரத்து இடையூறு என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருந்த மக்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கியுள்ளது பனிப்புயல். அமெரிக்கா முழுவதும் பனிப்புயலுக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பனிப்புயல் காரணமாக உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போய் காணப்படுகிறது. நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் பனிக்கட்டிகள் மற்றும் பனி மூடிய பாறைகள் காணப்படுகின்றன.

இதனை பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து, அவுஸ்திரேலியாவில் ஆரம்பித்தது 2023 – கோலாகலமாக வரவேற்ற மக்கள் !

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. 2023 ஆம் ஆண்டு பிறந்ததை ஒட்டி கண்ணை கவரும் வகையில் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டிலும் புத்தாண்டு பிறந்தது. நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

கண்ணைக் கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஹேப்பி நியூ இயர் என சொல்லி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து புத்தாண்டை வரவேற்றனர்.