14

14

அதிகாலையில் பற்றியெரிந்த 13 மாடி கட்டிடம் – 46 பேர் உடல் கருகி பலி !

தெற்கு தைவானில் உள்ள கயோசியுங் என்ற இடத்தில் ஏராளமான மக்கள் வசித்து வந்த 13 மாடி அப்பார்ட்மென்ட் கட்டிடத்தின் ஒரு பகுதியில்  இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல தீ கட்டிடம் முழுவதும் பரவியது.
13 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 46 பேர் உடல் கருகி துடிதுடித்து  உயிரிழந்த பரிதாபம்..! | southern Taiwan Kaohsiung city fire...46 people dead
அதிகாலை என்பதால் கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். தீ வேகமாக பரவ அவர்களால் எளிதாக தப்பிக்க முடியவில்லை. 100-க்கும் மேற்பட்டோர தீயில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 32 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.
55 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியாத நிலையில், அருகில் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மீட்புப்படையினர் சந்தேகிக்கின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சி – தமிழக அரசுக்கு பா.ஜ.க எச்சரிக்கை !

விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த சபேசன் என்ற நபர் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் அண்மையில், சென்னையில் கைது செய்யப்பட்டார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் சமீப காலமாக விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தீவிரமாகி வருவதாகவும் தி.மு.க அரசு கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சென்னை உட்பட 12 இடங்களில், மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி கூடங்கள் மற்றும் மறைவிடங்களில், தேசிய புலனாய்வு நிறுவனம் சோதனையிட்டு வருகிறது.  ஆகவே  தமிழக அரசும், காவல் துறையும் நிலைமையின் விபரீதம் உணர்ந்து, இந்த தீய சக்திகளை அடையாளம் கண்டு முற்றிலும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை அண்மையில் கைது செய்யப்பட்ட சபேசன் ஆயுதங்களை கடத்தி, அதன் வருவாயில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை இயக்க முயற்சி செய்ததாக தேசிய புலனாய்வு நிறுவனம் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது. சமீப காலமாக இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாகி வருகின்ற நிலையில், திமுக அரசு கவனத்துடன் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழ் தேசியம், தனி ஈழம் பேசும் பிரிவினைவாத அமைப்புகளும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் மாவோயிச தீவிரவாத இயக்கங்கள் பலவும் தி.மு.கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே எனவும் பதிவிட்டள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் இத்தகைய சட்ட விரோத செயல்கள் நடைபெறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.