26

26

”ராஜபக்ச அரசு கொடூர அரசு என்பது உலகறிந்த உண்மை . இந்த அரசு தமிழர்களை நாளுக்குநாள் வதைக்கின்றது” – சஜித் பிரேமதாஸ , அநுரகுமார திஸாநாயக்க காட்டம் !

“ஒவ்வொரு தினமும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர உரிமையுண்டு. அதை எவரும் பறிக்கவே முடியாது. அதேவேளை, ஓர் இனம் தமது உரிமைகளை வலியுறுத்தி அறவழியில் போராட இந்த நாட்டின் சட்டத்தில் இடம் உண்டு. அதையும் எவரும் தடுக்கவே முடியாது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ராஜபக்ச அரசு கொடூர அரசு என்பது உலகறிந்த உண்மை. இந்த அரசின் அடாவடிகள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. அதிலும் தமிழர்களை இந்த அரசு மேலும் வதைக்கின்றது.

தமிழ் மக்களின் ஆணையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ள தமிழ்த் தலைவர்கள் தங்கள் இனத்தின் உரிமை சார்ந்த விடயங்களை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். நாடாளுமன்றத்திலும் எமது கண்டனங்களை நேரில் தெரிவித்துள்ளோம்.

ஆயுதப் போரில், அறவழிப் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரவும், அந்த உரிமை மறுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராக அறவழியில் போராடவும் தமிழர்களுக்கு உரிமையுண்டு. அதை இராணுவத்தைக்கொண்டு அல்லது பொலிஸாரைக் கொண்டு அல்லது நீதிமன்றத்தைக் கொண்டு தடுத்து நிறுத்தும் ஈனத்தனமான செயலை இந்த அரசு உடன் கைவிட வேண்டும்” – என்றார்கள்.

தடைகளையும் தாண்டி மட்டக்களப்பு  கல்லடி விஸ்ணு ஆலயத்தில் மட்டக்களப்பு இளைஞர்களால் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி !

தியாகிதிலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க கூடாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.சாவகச்சேரியில் தமிழ்தேசிய கட்சிகள் கூடி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

திலிபனின் நினைவுதின அனுஸ்டிப்பை தடைசெய்ய பொலிஸாரும் கண்காணிப்புக்குழுவினரும் தடைசெய்ய மும்முரமாக செயற்பட்டு வருகின்ற போதிலுமு் கூட  இலங்கை அரசின் பல தடைகளையும் தாண்டி மட்டக்களப்பு  கல்லடி விஸ்ணு ஆலயத்தில் மட்டக்களப்பு இளைஞர்களால் தியாக தீபம் திலீபனுக்கு மலர்தூவி பிராத்தனை அஞ்சலி அனுஸ்டிப்புப்பு இடம்பெற்றுள்ளது.

1 38

”பொலிஸார் மற்றும் அரச புலனாய்வு பிரிவினரின் கெடுபிடிகளுக்கும் கண்காணிப்புகளுக்கும் மத்தியில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் உண்ணாநோன்பு போராட்டம் !

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலிலும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலின் இறுதி நாளான இன்று (26.09.2020) அடையாள உண்ணாநோன்பு இடம்பெற்று வருகின்றது.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை கோரி இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் தியாக தீபம் திலீபன் அவர்களின் வழியில் இடம்பெற்று வருகின்றது.

பொலிஸார் மற்றும் அரச புலனாய்வு பிரிவினரின் கெடுபிடிகளுக்கும் கண்காணிப்புகளுக்கும் மத்தியில் உண்ணாநோன்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

unnamed 27

இந்த உண்ணாநோன்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா , முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் , கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

புரட்டாதி சனி விரதம் இன்றைய நாளில் அனுஷ்டிக்க பட்டு வரும் நிலையில் ஆலயத்துக்கு அதிகளவான மக்கள் வருகைதருகின்ற நிலையில் இந்த உண்ணாநோன்பு முன்னெடுக்க பட்டு வருகின்றது.

தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்பு !

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

போராட்ட இடத்தில் கண்காணிப்புக் கடமையில் இருக்கும் பொலிஸார், மாணவர்களை போராட்ட இடத்துக்கு அனுமதியளிக்க மறுத்தனர். எனினும் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பொலிஸாருக்கு விடயத்தை எடுத்துக் கூறியதன் அடிப்படையில் பின்னர் அனுமதித்தனர்.
உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்.பல்கலை. மாணவர்களும் இணைவு | Muthalvan  News
சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இன்று காலை 9 மணி தொடக்கம் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பலரும் பங்கேற்றுள்ளனர்.

தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டது.

இந்த நிலையிலேயே அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகிறது.

உக்ரைனில் ராணுவ விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 22 பேர் உடல் கருகி பலி !

உக்ரைன் நாட்டின் ராணுவ விமானம் ஒன்றில் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று (25.09.2020) பயணம் செய்து கொண்டிருந்தனர். ராணுவ விமான தளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
A total of 25 people dead in military plane crash in eastern Ukraine - CNN
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து நடந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் உக்ரைனில் ஏற்பட்ட விமான விபத்தில் 176 பேர் பலியானது Fwpg;gplj;jf;fJ.