17

17

”20ஆவது அரசியலமைப்பின் அதிகாரங்கள் இராணுவ பின்னணியை கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ போன்ற ஒருவர் கையில் கிடைக்கப் பெற்றால் அது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் ” – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை!

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகூடிய அதிகாரம், இராணுவ பின்னணியை கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ போன்ற ஒருவர் கையில் கிடைக்கப் பெற்றால் அது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் .

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்று இடம்பெற்றது . இதே வேளை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தமட்டில் அவர் பல போராட்டங்களுக்கு மத்தியில் அரசியலில் முன்னேறி வந்தவர். நீண்டகால அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள இவர் மக்கள் தொடர்பில் தெளிவான விளக்கத்தை கொண்டு செயற்படுபவர்.

இந்நிலையில் எவ்வாறு மக்களின் விருப்பத்தை வெற்றிக் கொள்வது , எந்த சந்தர்ப்பத்தில் மக்கள் நாட்டின் தலைமைத்துவத்தின் மீது வெறுப்புக் கொள்வார்கள் என்ற விடயங்கள் தொடர்பில் நன்கு அறிந்துக் கொண்டுள்ளவர்.

அதனால், இவருக்கு இத்தகைய அதிகாரங்கள் கிடைக்கப் பெற்றால் , அதில் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படுத்தாவிட்டாலும் , ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் கையில் கிடைக்கப் பெற்றால் அது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கூறமுடியாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

”பல்கலைகழகங்களில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக புலனாய்வுப்பிரிவினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் ” – கேஹலிய ரம்புக்வெல்ல

பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கடந்தவருடம் யாழ் பல்கலைகழகத்தில் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக நிர்வாணமான படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு புதிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதனை செய்ய தவறுகின்ற மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு சமூகமளிக்க வேண்டாமென சிரேஷ்ட மாணவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பத்திரிக்கை மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் பல கோணங்களில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

”ஹட்டன் நகரை மலையகத்தின் தலைநகராக்குவதே இலக்கு” – ஜீவன் தொண்டமான்

ஹட்டன் நகரை மலையகத்தின் தலைநகராக்குவதே இலக்கு எனவும் அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்  என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன் நகரிலுள்ள வர்த்தகர்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இடையிலான சந்திப்பு இன்று ( 17.09.2020 ) ஹட்டன் நகரசபையில் நடைபெற்றது.

இதன்போது ஹட்டன்- டிக்கோயா நகரத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள், பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கானதீர்வு திட்டம் ஆகியன தொடர்பில்   விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு உரையாற்றிய ஜீவன் தொண்டமான் கூறியதாவது, ”  ஹட்டன் நகரில் குப்பைப்பிரச்சினையென்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு தற்காலிக தீர்வு கிடைத்திருந்தாலும் நிரந்தர தீர்வே எமது எதிர்ப்பார்ப்பாகும். அட்டன் பிளான்டேசனுடன் கலந்துரையாடினோம். குப்பைகளை கொட்டுவதற்கு 2 ஏக்கர் வழங்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.

உரிய இயந்திரங்கள் பொறுத்தப்பட்டு கழிவு முகாமைத்துவம் செய்யப்படும். உரம் தயாரிப்புடம் இடம்பெறும்.அதன்மூலமும் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும்.

தன்னிச்சையான முறையில் முடிவுகளை எடுப்பதைவிட மக்களுடனும், நகரத்திலுள்ள வர்த்தகர்களுடனும் கலந்துரையாடி திட்டங்களை வகுப்பதே சிறப்பாக இருக்கும். அப்போதுதான் உங்களுக்கும் திருப்தி, எங்களுக்கும் திருப்தி.

ஹட்டன் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை உள்ளது, வீதியை பெரிதாக்கினால்கூட அது தீராது, எனவே, உரிய ஏற்பாடுகளை செய்தபின்னர் பிரிதொரு இடத்துக்கு பஸ்தரிப்பிடத்தையும், டிப்போவையும் கொண்டுசெல்லவேண்டும். இதன்மூலம் வர்த்தகம் பாதிக்கப்படும் என சிலர் நினைக்கலாம் அவ்வாறு இல்லை,எல்லாதவி ஏற்பாடுகளையும் செய்த பின்னரே திட்டம் செயற்படுத்தப்படும்.

ஹட்டன் நகரை மலையகத்தின் தலைநகராக்குவதே இலக்கு. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். அட்டனிலிருந்து, சிவனொலிபாதமலைவரை சிறந்த சுற்றுலா வாய்ப்பு இருக்கின்றது. அதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு, எமது இளைஞர், யுவதிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயற்படுத்தப்படும். கடந்தகாலங்களில் தற்காலிக அபிவிருத்தி பற்றியே சிந்திக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்ப்பார்ப்பது பொருளாதார அபிவிருத்தி. அது முறையாக நடக்கும்.” -என்றார்.

இலங்கையில் சிறுவர் என்ற அங்கீகாரத்துக்கான வயதெல்லையில் மாற்றம் !

சிறுவர்கள் என்ற அங்கீகாரத்துக்கான வயதெல்லையை 14 இலிருந்து 18 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதேநேரம் வேலைவாய்ப்புக்கான குறைந்தபட்ச வயதை 15 முதல் 16 வயது வரை உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதற்கிடையில், கடவுச்சீட்டு மற்றும் அரசாங்க ஆவணங்களை அச்சிட அரசு அச்சிடும் துறைக்கு மட்டுமே அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, அந்நிய செலாவணி நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், அத்தகைய ஆவணங்களை அச்சிடுவதற்கான உபகரணங்கள் வாங்குவதை மதிப்பீடு செய்யும் பணியை தேசிய திட்டமிடல் துறைக்கு ஒப்படைக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

”இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடவேண்டும்” –

இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடவேண்டும் என கனடாவில் உள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொரு நாட்டில் நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதைத் தடுக்கும் விடுபாட்டுரிமையை கனடாப் பிரதமர் நீக்க வேண்டும் எனவும் தமிழ் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அவ்வாறான நடவடிக்கை இலங்கையில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தங்கள் குடும்பத்தவர்களுக்காக நீதியைக் கோருவதற்கு உதவும் என கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவைச் சேர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் குமணண் குணரட்ணம் செய்தியாளர் மாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது மனிதர்கள் அனைவரினதும் ஆழ்ந்த கரிசனைக்குரிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இறைமையுள்ள நாடு ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் விடுபாட்டுரிமையை கனடா உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும். வர்த்தக பரிமாற்றங்களுக்காக அதை அகற்ற முடியும் என்றால் ஏன் சர்வதேச குற்றங்களுக்காக அதை நீக்க முடியாது?

விடுபாட்டுரிமையை நீக்கும் சட்டமூலம் தமிழர்களுக்கு மாத்திரமல்ல சர்வதேச அளவில் காணாமல்போகச் செய்யப்பட்டமையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவியாக அமையும்” – என்றார்.

”ஜனாதிபதி பதவிக்கு ஜோ பிடன் தகுதியானவர் அல்ல” . அவர் பிரச்சாரத்துக்காக போதைப்பொருட்களை பயன்படுத்துவதாகவும் ட்ரம்ப் குற்றச்சாட்டு !

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் களமிறங்குகிறார். இரு கட்சியினரும் பரபரப்பாக பிரச்சாரம் மேற்கொண்டு ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜோ பிடன் விவாதங்களில் கலந்து கொள்ளும் போது தனது திறனை மேம்படுத்துவதற்காக போதைப் பொருளை பயன்படுத்துவதாக ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பிடன் பேசுவதை பார்க்கும் போது, ஏதோ ஒன்று வித்தியாசமாக தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இனி அடுத்த விவாதங்களில் கலந்து கொள்வதற்கு முன்பாக, அவர் போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு ஜோ பிடன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்கள் முட்டாள்தனமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.  ஜனநாயக கட்சியில் திறமையானவர்கள் நிறைய பேர் இருக்கும் போது, ஜோ பிடனை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததற்கு ஜனாதிபதி ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவிக்கு அவர் தகுதியானவர் கிடையாது என்றும் விமர்சித்துள்ளார்.

மூன்று கோடியை தாண்டியது உலகில் கொரோனா பாதித்தோர் தொகை – 10இலட்சத்தை அண்மிக்கின்றது கொரோனா உயிர்ப்பலி !

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 25 ஆயிரத்து 96 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து 2 கோடியே 17 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 680 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 2,01,321
பிரேசில் – 1,34,174
இந்தியா – 82,066
மெக்சிகோ – 71,678

கொரோனா பாதிப்பால் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி இழப்பு !

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஏறக்குறைய ஆறு மாதங்கள் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் சீர்குலைந்து போயின. படிப்படியாக கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டாலும் ரசிகர்கள் இன்றியே நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த இழப்பு சர்வதேச கால்பந்து அமைப்பில் உறுப்பினராக உள்ள 211 நாடுகளுக்கு உட்பட்டது.

பொதுவாக கிளப் போட்டிகளின் மூலம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் புரளும். கொரோனா தாக்கத்தால் ஐரோப்பிய கிளப்புகள் தான் பெரும் இழப்பை சந்தித்து இருக்கின்றன.

தடைப்பட்ட கால்பந்து லீக் போட்டிகளை நடத்தாமல் விட்டு விடலாம்: 'பிபா' |  Makkal Osai - மக்கள் ஓசைமேற்கண்ட தகவலை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) கொரோனா நிவாரண திட்டத்திற்கான கமிட்டியின் சேர்மன் ஆலி ரென் தெரிவித்தார்.

மெக்ஸ்வெல்லின் அபார சதத்துடன் இங்கிலாந்தை பழிவாங்கியது அவுஸ்ரேலியா ! – வீணானது பேர்ஸ்டோவின் 10ஆவது சதம்.

மான்செஸ்டரில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியான வாழ்வாசாவா? போட்டியில் நாணயச்சுழற்சியில்  வென்ற இங்கிலாந்து தலைவர் மோர்கன் முதலில் துடுப்பெடுத்தாட  முடிவெடுத்தார்.

இங்கிலாந்து ஆட்டத்தை படுமோசமாகத் தொடங்கியது, மிட்செல் ஸ்டார்க் முதல் 2 பந்துகளில் ஜேசன் ராய், ஜோ ரூட்டை டக்கில் வெளியேற்றினார்.  இந்நிலையில் மோர்கன், பேர்ஸ்டோ இணைந்து எதிர்த்தாக்குதலில் இறங்கி 3வது விக்கெட்டுக்காக 67 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் ஆடம் ஸாம்ப்பா தனது சிறந்த பந்து வீச்சை மீண்டும் வெளிப்படுத்த மோர்கன் 23, பட்லர் 8, வெளியேற்ற 19வது ஓவரில் இங்கிலாந்து 96/4 என்று சரிந்தது.

ஆனால் பேர்ஸ்டோ, பில்லிங்ஸ் இணைந்து மேலும் 114 ஓட்டங்களைச் சேர்த்தனர். பேர்ஸ்டோ மிக சரளமாக ஆடி தன் 10வது ஒருநாள் சதத்தை 116 பந்துகளில் எடுத்தார், அதுவும் கமின்ஸ் பந்தை பிரமாதமாக ஸ்கொயர் லெக் மேல் சிக்சர் அடித்து கம்பீரமாக தன் சதத்தை எடுத்தார்.

ஆனால் கமின்ஸ் பந்துக்கு பேர்ஸ்டோ ஆட்டமிழக்க  41வது பந்துப்பறிமாற்றத்தில்  இங்கிலாந்து 220/6 என்று இருந்தது. தொடர்ந்து வோக்ஸ்  39 பந்துகளில் அதிரடி அரைசதம் அடிக்க குர்ரன் 19 ஓட்டங்கள் எடுக்க ரஷீத்  22 பந்துகளில் 36 ரன்கள் விளாச இங்கிலாந்து கடைசி 5பந்துப்பறிமாற்றங்களில்  53 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து சவாலான 302 ரன்களை எடுத்தது. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை 74 ஓட்டங்களுக்கும் ஸாம்ப்பா 3 விக்கெட்டுகளை 51 ஓட்டங்களுக்கும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியாவின் வார்னர் (24), பிஞ்ச் (12), ஸ்டாய்னிஸ் (4), லபுஷேன் (20) மிட்செல் மார்ஷ் (2) என்று வோக்ஸ், ஜோ ரூட்டிடம் ஆட்டமிழந்து வெளியேற 73/5 என்று 17வது பந்துப்பறிமாற்றத்தில் இருந்தது. அதன் பிறகு நம்ப முடியாத அளவுக்கு ஆடிய கிளென் மெக்ஸ்வெல் 108ஓட்டங்கள் (90 பந்துகளில்  4 பவுண்டரி 7 சிக்சர்கள்), அலெக்ஸ் கேரி (106 ஓட்டங்கள், 114 பந்து 7 பவுண்டரி 2 சிக்சர்) சேர்ந்து சுமார் 31 பந்துப்பறிமாற்றங்களில் 212 ஓட்டங்களை 6வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். கடைசியில் இருவரும் ஆட்டமிழக்க  கடைசி பந்துப்பறிமாற்றத்தில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது, ரஷீத் இறுதிப்பந்து பறிமாற்றத்தை  வீசினார். அதனை எதிர்கொண்ட  மிட்செல் ஸ்டார்க் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியோடு முடித்து வைத்தார்.

கடைசி பந்துப்பறிமாற்றத்தில் ஆவுஸ்ரேலியா வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட   2 பந்துகள் மீதமிருக்கையில் 305/7 என்று அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 கைப்பற்றியது.

இதன் மூலம் 2015-க்குப் பிறகு இங்கிலாந்து தன் மண்ணில் முதன் முதலாக ஒருநாள் தொடரை இழந்தது.

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே கிளென் மேக்ஸ்வெல் கைகளுக்குச் சென்றது.

maxwell-and-carey-tons-set-up-australia-series-win-over-england

 

”அதிகாரத்தின் மூன்று தூண்களும் ஒன்றை மற்றொன்று பலவீனப்படுத்த முயலாத முறையை நாங்கள் உருவாக்க முயல்கின்றோம் ” – சஜித் பிரேமதாச

அதிகாரங்கள் குறைக்கப்பட்ட நிறைவேற்று அதிகார முறைக்கு ஆதரவளிப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

“ஆரம்பத்தில் நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை உறுதியாக ஆதரித்தவன் எனினும் 2014 முதல் 2015 வரை இடம்பெற்ற விடயங்கள் காரணமாக அதிகாரங்கள் குறைக்கப்பட்ட ஜனாதிபதி முறையை விரும்பத் தொடங்கினேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தின் மூன்று தூண்களும் ஒன்றை மற்றொன்று பலவீனப்படுத்த முயலாத முறையை நாங்கள் உருவாக்க முயல்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தேவையேற்படும் போது காங்கிரஸ்,செனெட், ஜனாதிபதி ஆகியோர் ஒன்றாக இணைந்து செயற்படுவதற்கான சிறந்த உதாரணம் அமெரிக்கா எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.