24

24

கிழக்கு முதலமைச்சருக்கு பொன்னாடை!

pillayan_rajadurai.jpgமட்டக் களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனின்  சேவை நலனைப் பாராட்டி அவருக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார்.

கடந்த புதன்கிழமை மட்டக்களப்பில் அவரது வீட்டில் முதலமைச்சர் சநத்திரகாந்தனைச் சந்தித்துப் பேசிய இராஜதுரை- கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல சேவைகளைப் புரிந்து வருவதாகவும் மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஓரு கட்சியாகச் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருப்பதால் தொடர்ந்து தமது ஆதரவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் அலூர்! டிசம்பரில் வெள்ளோட்டம்

ship_.jpgஉலகி லேயே மிகப்பெரிய விரைந்து செல்லக்கூடிய இலகுரக சொகுசு கப்பலான அலூர் வரும் டிசம்பர் மாதம் வெள்ளோட்டத்திற்கு விடப்படவுள்ளது. கப்பல் தயாரிப்புப் பணியினை மேற்கொண்டு வரும் ரோயல் கரிபியன் இன்டர்நேஷனல் எனும் கப்பல் கட்டுமான நிறுவனம் இந்தத் தகவலை  தெரிவித்துள்ளது.

இந்த சொகுசு கப்பல் குறித்து அதன் கேப்டன் ஹெர்மான் ஜினி கூறுகையில் அலூர் கப்பல் கட்டும் பணி கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கியது. 16 அடுக்குகளையும், 360 மீ நீளம் 64மீ அகலமும் கொண்டது.

2 லட்சத்து 25 ஆயிரத்து 282 தொன் எடையினை தாங்கும் திறன் கொண்டது. 2700 அறைகள் 6296 பயணிகளும் 2394 கப்பல் பணியாளர்களும் தங்கும் வகையில் சிறிய நகரம் போன்று வடிவமைக்கப்பட்டள்ளது.

விளையாட்டு மைதானம் பூங்கா கேட்போர் கூடங்கள் உள்பட பல்வேறு அம்சங்களுடன் உள்ள அலூர் கப்பல் கட்டும் பணிகள் தற்போது முடியும் நிலையில் உள்ளன. இந்த கப்பல் வரும் டிசம்பர் மாதம் பயணிகள் போக்குவரத்து விடப்படும் என்றார்

உயிரிழந்த நபர்களுக்கிடையே காதல் தொடர்பு

love-images.jpgசியம்பலா ஆண்டுவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தன்னையும் சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர் 2 பிள்ளைகளின் தந்தையார் எனவும் பதுளையில் வசித்தவர் எனவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இரணடு நபர்களுக்கிடையே காதல் தொடர்பு இருந்ததாக தெரிய வந்துள்ளது..

மேலதிக வாசிப்புக்கு முன்னைய செய்தி

அருட்சல்வன் வி, செய்திகள்
மொனரா கலை, சியம்பலாண்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சியம்பலாண்டுவ மத்திய மகா வித்தியாலயத்தில் அத்துமீறி, நுழைந்த ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஆசிரியையொருவர் பலத்த காயங்களுக்குட் பட்ட நிலையில் மொனராகலை சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமானார். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று (23) காலை 8.45 மணியளவில் மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த ஆசிரியை குறித்த பாடசாலையில் சேவையாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியை லக்ஷிகா தமயந்தி (வயது 29) ஆபத்தான நிலையில் இருப்பதால் நேற்று மாலை அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட நபரின் மரண விசாரணைகள் நேற்று மாலை இடம்பெற இருந்தது. மொனராகலை பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

http://thesamnet.co.uk/?p=22424

இலங்கைக்கு எதிரான சவால்களை இனங்கண்டுள்ளோம். அதில் பாரிய சவாலாக இருப்பது கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதாகும். – ஐ. நா. பொதுச்சபையில் ஜனாதிபதி உரை

mainpic.jpgஇலங்கைக்கு எதிரான சவால்களை நாம் இனங்கண்டுள்ளோம். அதில் பாரிய சவாலாக இருப்பது எமது கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதாகும். இந்நிலையில் அதற்காக இவ்வருட முற்பகுதியில் கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அது பொறுப்புத் தன்மையுடனான கொள்கைக்கு முற்றிலும் உட்பட்டது என்று ஜனாதி பதி மஹிந்த ராஜாபக்ஷ நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றிய போது கூறினார். ஐ. நா. பொதுசபை கூட்டத் தோடரில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-

எனது இரண்டாவது பதவிக் காலம் முதலாவது பதவிக் காலத்தை விட பெரிதும் மாறுபட்டது. 2005 ஆம் ஆண்டு நான் முதலில் தெரிவு செய்யப்பட்ட போது எனது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்பதாக வாக்குறுதி வழங்கினேன். அதை நிறைவேற்றியுள்ளேன். சில காலத்துக்கு முன் அங்கு கனவாக மட்டுமே இருந்த சமாதானம் இப்போது அங்கு நனவாகியுள்ளது.

எனது இரண்டாவது பதவிக் காலத்தில் சமாதானம் மற்றும் சபீட்சத்தை ஸ்திரப்படுத்துவதுடன் பயங்கரவாதம் மீண்டும் ஒருமுறை தலைதூக்க இடமளிக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை எனது மக்களுக்கு வழங்குகிறேன். விரைவிலேயே மறந்துபோன உண்மை என்னவென்றால் மிகவும் கொடூரமான, நன்கு திட்டமிட்டு செயற்பட்ட சிறந்த நிதி உதவியை பெற்று, நன்றாக இயங்கிய ஒரு பயங்கரவாத இயக்கத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதாகும். இது ஏனைய நாடுகளிலும் தனது வலையை விரிக்கக் கூடியதாக இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

மேற்கு நாடுகள் அண்மைக் காலத்தில் அனுபவித்துவரும் பயங்கரவாதத்தின் கொடூரத்தை இலங்கை மக்கள் சுமார் 30 வருடங்கள் அனுபவித்து வந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் அதில் உயிரிழந்தனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இலங்கை ஜனாதிபதி ஒருவரும் முன்னோக்க தரிசனத்துடன் கூடிய ஒரு இந்தியத் தலைவரும் நூற்றுக்கணக்காக புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர்.

வழி தவறிப் போன சிலருக்கு நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் பிரிவினைவாதம், குரோதம், மற்றும் வன்முறைக்கு துணை போகாதீர்கள். அதற்கு மாறாக எம்முடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திய வண்ணம் புதிய பரிமாணங்களை நாம் எட்ட முடியும்.

எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அதன் காயங்களை ஆற்றுவதற்குமான நடைமுறை எமக்குள்ளேயே உருவாக வேண்டும் என்று நாம் நம்புகிறோம். சரித்திரம் நமக்கு ஒன்றை சொல்லிக் கொடுத்திருக்கிறது. என்றால் அது வெளியில் இருந்து திணிக்கப்பட்ட தீர்வுகள் மனக்கசப்பை தோற்றுவித்து இறுதியில் தோல்வியையே ஏற்படுத்தும் என்பதாகும். அதற்கு மாறான எமது உள்நாட்டு நடைமுறையானது எமது மக்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பதாக அமைகிறது.

எமது நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்து வரும் நிலையில் அதற்கு நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை வரவேற்கிறோம் சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் பரிமாண வளர்ச்சி மூலம் சர்வதேச சமூகத்துடன் கூட்டாக செயற்பட நாம் தயாராக இருக்கிறோம்.

சமாதானத்தின் பெறுபேறாக எமது பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்கிறது. கடந்த காலாண்டு காலத்தில் எமது வளர்ச்சி நிலையாகவும் ஸ்திரமாகவும் உள்ளதுடன், 8 சத வீதத்துக்கு மேற்பட்ட வளர்ச்சி வீதத்தை காட்டி நிற்கிறது. பண வீக்கம் குறைந்த நிலையிலும் வட்டி வீதங்களும் குறைந்து காணப்படுகின்றன. கடந்த 5 வருடங்களில் எமது தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. அதனை மேலும் முன்னேற்றச்செய்து 2016 ஆம் ஆண்டளவில் அதனை தற்போது இருப்பதிலும் இரட்டிப்பாக்குவது எமது குறிக்கோளாகும்.

மஹிந்த சிந்தனை, எதிர்கால நோக்கு என்ற எனது தேர்தல் விஞ்ஞாபனம் உறுதியான உட்கட்டமைப்பை கொண்டிருக்கும் எனது எதிர்கால தரிசனத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தேசிய, மாகாண மற்றும் கிராம மட்டங்களில் இடம்பெறும் இந்த தரிசனம் எமது முழுமையான சமூகத்தின் அபிவிருத்தியை அர்த்தமுள்ளதாக்கும்.

அதேவேளை எனது நாட்டின் பொருளாதார தந்திரோபாயம் புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளை சுலபமாக நிறைவேற்றக்கூடிய நிலையில் இருப்பதை சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். ஐக்கிய நாடுகளின் காலக்கெடுவுக்கு முன்னரே அதனை இலங்கை நிறைவேற்றும் என்று நம்பலாம்.

ஐக்கிய நாடுகளின் அமைதிப் படைக்கு இலங்கை பங்களிப்பு வழங்கிய 50ஆவது நிறைவு 2010 ஆம் ஆண்டு என்பதை கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். எமது படையினரும் பொலிஸாரும் இன்று சிறப்பான யுத்தப் பயிற்சியுடன் எந்தச் சவாலான நிலையிலும் கடமையாற்றக் கூடிய திறனுடன் உள்ளனர். ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்து உதவும் எமது விருப்பத்தை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.

எமது பிராந்தியத்தில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அழிவுகள் முறையான செயற்பாட்டின் தேவையை கோடிட்டுக் காட்டுகின்றன. இதற்கு கூட்டான பங்களிப்பு தேவைப்படுகிறது. அதன் மூலமே மனித வேதனையைக் குறைக்க முடியும். சுவாத்திய மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவை இன்று அனைத்து நாடுகளினதும் அவதானத்தை ஈர்க்கும் விடயமாகியுள்ளதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டுவரும் அரசியல் விவகாரங்களில் பலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படும் விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். இந்த விடயம் தாமதமின்றி தீர்க்கப்பட்டு அடுத்த வருட பொதுச்சபை கூட்டத்தில் பலஸ்தீனம் பூரண அங்கத்துவ நாடாக கலந்து கொள்ளும் என்று நாம் நம்புகிறோம். உலகளாவிய ரீதியில் இன்று ஒவ்வொரு நாடும் ஒன்றையொன்று சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. எனவே நாம் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும். தேவையான வேளையில் நாம் ஒருவரையொருவரின் ஆலோசனையுடன் செயற்பட முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. நா. பொதுச்சபையில் குறிப்பிட்டார்.

சம்பந்தன் எம்.பி.க்கு மூன்று மாத விடுமுறை

rsambanthan.jpgதமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்ட எம். பி. இரா. சம்பந்தன் மூன்று மாத காலத்திற்கு சபைக்கு சமுகமளிக்காதிருப்பதற்கான விடுமுறை பிரேரணைக்கு பாராளும ன்றம் நேற்று அங்கீகாரம் வழங்கி யது. தமிழரசுக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் சபாநாயகரின் அனுமதியைப் பெற்று இப்பிரேரணையை சபைக்குக் கொண்டு வந்தார். இச் சமயமே பாராளுமன்றம் இப்பிரேரணைக்கு அனுமதி வழங்கியது.

பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து சுமந்திரன் எம். பி. இப்பிரேரணையை சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதன்மைச்சித்தி பெற்றவர்கள்!

subatha.jpg2010 ஆம் ஆண்டு 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபெறுகள் நேற்று வெளியாகியுள்ளன. இதில் திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் மாணவி மாளவன் சுபதா 193 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றுள்ளார்.

இவர், தம்பிலுவில் அம்மன் கோவில் முன் வீதியில் வசித்துவரும் மாளவன் உமையாள் தம்பதிகளின் புதல்வியாவார்.

sabeer.jpg இதில் இரண்டாம் இடத்தை கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த கலகா நகரில் இயங்கும் ஸ்ரீ கிராமகிருஷ்ணன் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன் சுக்ரி மொஹமட் சபீர் பெற்றுள்ளார். இவர் 192 புள்ளிகளைப் பெற்று இப்பாடசாலைக்குப் பெருமை தேடித் தந்துள்ளதாகப் பாடசாலை அதிபர் எம். பி. சந்திரசேகரன் தெரிவித்தார்.

இம்மாணவன் கலகாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது இவர் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருகின்றார். தாயுடன் வசித்துவருகிறார்.

இவரது சகோதரியும் இதே பாடசாலையில் கல்வி பயின்று வருவதுடன், அவரும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

nesan.jpgதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 190 புள்ளிகளைப் பெற்ற வவுனியா விபுலானந்தா வித்தியாலய மாணவனான யோகேஸ்வரன் பிரியநேசன் 3 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

சமயபுரத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் சிரானிதமயந்தி தம்பதிகளின் இரண்டாவது மகன். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இவரின் தந்தையார் முச்சக்கரவண்டி சாரதி, நடுத்தர வருமானத்தைக் கொண்ட குடும்பம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெனிஸ் ஜீட் விதுசன் பிஃகுராடோ 190 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

புலிகள் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்கு உரிய ஏற்பாடு அவசியம் – பிரதமர் ஜயரட்ன

புலிகள் மீண்டும் தலைதூக்குவதை சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை ஆளும்தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- பயங்கரவாதம் தோற்கடிக்கப் பட்டதையிட்டு உலகில் பல நாடுகள் இலங்கையைப் பாராட்டியுள்ளன. இதனூடாக சமூக, பொருளாதார ரீதியாக நாடு பாரிய நன்மைகளைப் பெற்று ள்ளது. குறிப்பாக உல்லாசப் பயணத் துறையில் பாரிய மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இது நாட்டின் பாதுகாப்பு நிலமை உயர் நிலைமையில் இருப்பதை சர்வதேச மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கை தொடர்பாக உலக மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயம் வளர்ந்து வருகின்றது. எமக்கு கிடைக்கப் பெற்று வருகின்ற பாராட்டுக்களை நாம் தொடர்ந்தும் பேணிக் கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். இத்திட்டங்களை இன, மத, பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடிப்படையில் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தவென பலவிதமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.  இதன் பயனாக அண்மைக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்தை அடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், உலகில் மக்கள் திருப்தியுடன் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடத்தில் இருப்பதையும் மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மேலும் ஈழக் கனவை கைவிடாதவர்கள் உலகில் இருக்கவே செய்கின்றார்கள். அவர்கள் தங்களுக்குத் தேவையான பின்புலத்தைத் தயாரித்துக் கொள்ளுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது செயற்பாடுகளை நோக்கும் போது, அவர்கள் மீண்டும் இந்நாட்டில் செயற்பட முயற்சிப்பதையும் அவர்களது செயற்பாடுகளை மீளமைக்கத் திட்டமிட்டிருப்பதையும் எடுத்துக் காட்டுவதாக அவை உள்ளது. அதனால் புலிகள் மீண்டும் தலைதூக்குவதை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இதேவேளை புலிகளின் ஆதரவு இயக்கங்கள் வளர்ச்சி பெற்று வருவதையும் அவதானிக்க முடிகிறது. அத்தோடு புலிகளின் சர்வதேச வலையமைப்பு நாட்டுக்கு வெளியே ஈழ இராச்சியத்தை அமைக்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்காக சர்வதேச ஆதரவை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.இதற்காக ஐரோப்பாவிலும் மேற்கு நாடுகள் பலவற்றிலும் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வடக்கு, கிழக்கிலும், கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களும், வெடி பொருட்களும் தொடர்ந்தும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.பயங்கரவாத செயற்பாடு மீண்டும் தலைதூக்குவதைத் தவிர்ப்பதற்காக தொடர்ந்தும் செயற்படுவது அவசியம். இதற்காக நிலையான வேலைத்திட்டம் மிகவும் அவசியமாகும்.

இலங்கையில் உறுதியான பாதுகாப்பு வேலை திட்டத்தை கடைப்பிடிப்பதற்கு கடற்படையைப் புனரமைப்பது மிகவும் அவசியமான காரணமாகும். யுத்தம் இல்லாவிட்டாலும் நாட்டின் பிரதான பாதுகாப்பு துறையே கடற்படையாகும்.ஏனெனில் இது கடலால் சூழப்பட்ட ஒரு நாடாகும். அதனால் நாட்டைப் பாதுகாக்கும் வேலியே கடற்படையேயாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும், வெடிபொருட்களும் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் வந்து சேருவதை கடற்படையினரால் தான் கட்டுப்படுத்த முடியும். சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வருவதையும், வெளிநாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பதையும் தவிர்ப்பதற்கும், கடல் வலயங்களை ஒன்று சேர்த்து பாதுகாப்பதற்கும் உல்லாச பயணத் துறைக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும். கரையோரங்களைப் பாதுகாப்பதற்கும் கடற் படையை வலுப்படுத்துவது அவசியம்.

அதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் முழு நாட்டினதும் கரையோரங்களைப் பாதுகாப்பதற்காக கடற்படையினரின் முகாம்கள் வலையமைப்பை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது எதிர்கால பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் பாராட்டத்தக்க வேலைத் திட்டமாகும்.

இதேவேளை சரணடைந்துள்ள மற்றும் இனம் காணப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை புலன் விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநேரம் தெரிந்தெடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றன. அவர்களுக்கு தொழிற் பயிற்சி பெற்றுக் கொடுக்கப்பட்டு சமூக வாழ்வில் ஈடுபடுத்தும் வேலைத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் ஏற்கனவே மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளை அவர்கள் வெளிப்படுத்தி இராத போதிலும் அவை இப்போது மேற்கொள்ளப்படும் புலன் விசாரணைகளில் தெரியவருகின்றது. அதனால் தொடர்ந்தும் விழிப்பாக இருப்பது அவசியம்.

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வந்த பயங்கரவாத சந்தேக நபர்களும் விசாரணைகளின் பின்னர் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இதனோடு சேர்த்து அப்பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப் படுகின்றன. இதனூடாக அப்பகுதி மக்களின் எதிர்காலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

அவசர காலச்சட்டம் 92 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

sri-lankan-parliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை 92 மேலதிக வாக்குகளால் நேற்று சபையில் நிறைவேறியது.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 112 வாக்குகளும், எதிராக 20 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இப்பிரேரணைக்கு ஆதரவாக ஆளும் கட்சியுடன் இணைந்து அரசுடன் சேர்ந்துள்ள ஐ.தே.க. எம். பி.க்களும் ஆதரவாக வாக்களித்தனர்.

இப்பிரேரணைக்கு எதிராக தமிழரசுக் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு எம். பி.க்களுடன் ஐ. தே. க. வின் சில எம். பி. பிக்களும் சேர்ந்து வாக்களித்தனர்.ஐ. தே. க. எம்.பிக்களான ஜோசப் மைக்கல் பெரேரா, லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தங்கள் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.

சியம்பலாண்டுவையிலுள்ள பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு; ஆசிரியை மரணம்

மொனரா கலை, சியம்பலாண்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சியம்பலாண்டுவ மத்திய மகா வித்தியாலயத்தில் அத்துமீறி, நுழைந்த ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஆசிரியையொருவர் பலத்த காயங்களுக்குட் பட்ட நிலையில் மொனராகலை சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமானார். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று (23) காலை 8.45 மணியளவில் மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த ஆசிரியை குறித்த பாடசாலையில் சேவையாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியை லக்ஷிகா தமயந்தி (வயது 29) ஆபத்தான நிலையில் இருப்பதால் நேற்று மாலை அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட நபரின் மரண விசாரணைகள் நேற்று மாலை இடம்பெற இருந்தது. மொனராகலை பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.