தோழர் இரத்தினசபாபதி அவர்களின் அனுதாப பிரேரணையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (24) ஆற்றிய உரை.
._._._._._.
துப்பாக்கி வேட்டுக்களை விடவும் சொற்கள் ஒவ்வொன்றும் வலிமையானவை. வெடி குண்டுகளை விடவும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் வீரியம் நிறைந்தவைகள்.
அந்த வலிமையான சொற்களுக்கும் வீரியம் நிறைந்த கருத்துக்களுக்கும் சொந்தக்காரரான தோழர் இரத்தினசபாபதி அவர்களுக்கு இந்த நாடாளுமன்றம் மரியாதை செலுத்துவது குறித்து இந்த நாடாளுமன்றத்திற்கு நான் முதலில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.
எம்மைப் பொறுத்தவரையில் எமக்கு காலத்திற்கு காலம் வழி காட்டிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் கௌரவ இரட்ணசபாபதி அவர்களின் வழி காட்டல் என்பது தவிர்க்க முடியாத ஒரு காலச்சூழலில் மிகவும் காத்திரமான வழி காட்டலை எமக்கு வழங்கியிருக்கின்றார்.
தமிழ் மக்களின் அரசியலுரிமை போராட்டமானது புதிய உத்வேகத்தை பெற வேண்டிய ஒரு காலச்சூழலில் அதன் கட்டாயத்தை உணர்ந்து கௌரவ இரட்ணசபாபதி அவர்கள் ஆற்றியிருந்த ஆற்றல் மிகு பங்களிப்பு என்பது எமது வரலாற்றில் அழியாத பதிவாக எழுதப்பட்டிருக்கின்றது
அது போலவே மாறி வந்திருந்த எமது மக்களின் மன நிலைகளைப் புரிந்து கொண்டவராக உலகத்தின் போக்கையும் அதற்கான நடைமுறை யதார்த்தங்களையும் புரிந்து கொண்டவராக தோழர் இரட்ணா அவர்கள் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சனைக்கு ஜனநாயக வழிமுறை ரீதியாகவே தீர்வு காண வேண்டும் என்று எண்ணியிருந்ததும் எமக்கு அவர் மீதான பற்றுதலை மேலும் உருவாக்கியிருந்தது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்ததை அடுத்து எம்மை போல் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியிருந்த தோழர் இரட்ணா அவர்கள் 40000 மக்களின் விருப்பு வாக்குகளை பெற்று இந்த நாடாளுமன்றத்திற்கான பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
கௌரவ இரட்ணசபாபதி அவர்கள் அன்றைய ஆளும் அரசுக்கு எதிராக உரிமைப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவராக இருந்த போதிலும் அவர் ஆயுதங்கள் மீது மோகம் கொண்டவராக ஒரு போதும் இருந்தவரல்ல.
தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் என்புது அன்றைய ஆளும் அரசுக்கு எதிராக இருக்க வேண்டுமே என்று நினைத்தவரே ஒழிய அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிராக இருக்க வேண்டும் என்று கருதியவர் அல்ல�
இலங்கைத்தீவிலும் சரி அதற்கு அப்பால் இருக்கும் அயலுலக அரசியல் சூழலிலும் சரி அதையும் கடந்து சர்வதேச அரங்கிலும் சரி எதிரிகள் யார்?… நண்பர்கள் யார்?… என்ற தெளிவான பார்வையை அவர் கொண்டிருந்தவர்.
அதன் காரணமாகவே அன்றைய ஆளும் அரசுகளால் ஒடுக்கப்படுகின்ற அனைத்து இன சமூக மக்களின் பக்கமும் அவர் தனது பார்வையை செலுத்தியிருந்தவர்.
மதத்தால் இந்து ஆனாலும், மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும், தீரச்சைவன் ஆனாலும் ஈழத்தழிழர் ஈழவரே. அவர் எங்கிருந்தாலும் எம்மவரே.
இதுவே தோழர் இரட்ணா அவர்களின் கருத்தாகும். இதுவே பரந்து பட்ட மக்கள் நலன் சார்ந்து அவர் சிந்தித்திருந்த அவரது உண்மையுள்ள தத்துவமாகும்.
தமிழ் முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் என்று அனைத்து மக்கள் சமூகத்தையும் நேசித்திருந்த கௌரவ இரத்தினசபாபதி அவர்கள் அதற்கான தெளிவான கொள்கையினையும் வகுத்து அதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தவர்.
எமது உரிமைப்போராட்டம் என்பது தனிநபர் பயங்கரவாதமாக அன்றி ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்டதான ஸ்தாபன வடிவமாக உருவாக வேண்டும் என