21

21

தமிழகத்தில் தொடரும் கட்டப் பஞ்சாயத்துக்கள் – ஈழத் தமிழரை இழிவு படுத்தி பணம் பண்ணும் நக்கீரன்! : ENDLF

Nakeeran_ENDLF_Coverநக்கீரன் என்ற அருமையான தமிழ்ப்புலவரின் பெயரைப் பயன்படுத்தி வம்புச் செய்திகளும், ஒட்டுச்செய்திகளும், பட்டுப்பட்ங்களும், கட்டுக்கதைகளும் வெளியிட்டு பிழைப்பு நடத்தும் கேவலமான கூட்டம் இன்று சமூகத்தில் அந்தஸ்துடன் உலவுகிறது.

நாங்கள் ஈழத்தமிழர்கள். இந்த நக்கீரன் என்ற விசமப்பத்திரிகை பற்றிக் கருத்துச் சொல்லவேண்டிய தேவை எமக்கில்லை. ஏனெனில் தமிழகத் தமிழர்கள் சினிமா பார்ப்பது, கதை கேட்பது என்று இத்துறையில் தங்கள் வாழ்வை இணைத்துள்ளனர். எனவே நக்கீரன் என்ற பத்திரிகை கதை சொல்லப் புறப்பட்டு தமிழர்களுக்கு வாராவாரம் இரண்டு முறை கதை சொல்ல ஆரம்பித்தது. ஒரே கதையை பலவாரங்களுக்கு பல வடிவங்களில் சொல்வார்கள். வாரம் இருமுரை புதுக்கதைகளும் சொல்லவேண்டும். அப்போதுதான் வியாபாரம்நன்கு நடக்கும். இப்படிக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஈழத்தமிழர்கதை. ஈழத்தமிழரும் விடுதலைப்புலிகளும் பற்றிய கதை சொல்ல இந்தப் பத்திரிகை ஆரம்பித்து கொழுத்த பணம் ஈட்டியது.

Pirabaharan_Still_Alive_Nakeeranஆட்டோசங்கர் கதை, வீரப்பன் கதை, டாக்டர் பிரசாத் கதை பின்னர் விடுதலைப்புலிகள் கதை இவைகள் மூலம் பணம் பார்த்த ஒரே வார வெளியீடு இந்த நக்கீரன்தான். இவர்களது கதைகளைப் படித்த விடுதலைப் புலிகள் இவர்கள் அல்லவா (நக்கீரன் நபர்களை) எங்களை விடச் சிறப்பான போராளிகள் என்று நினைத்தனர். நாங்கள் நினைக்காததை, செய்யாததை எல்லாம் திடடமிட்டோம், செயல் படுத்தினோம் என்று எங்களுக்குப் புகழ் சேர்க்கிறார்கள் என்று வியந்து இவர்களிடம் செய்தி சொல்லப் புறப்பட்டனர் புலிகள். நக்கீரனுக்கு வருவாய் கழுத்தைத் தாண்டியது. தாங்கள் எதை எழுதினாலும் மடமக்கள் நம்புகின்றனர் என்று கண்டு கட்டுக்கதைகளில் கரைகண்டனர் இந்த நபர்கள்.

வழக்கம் போன்றே ஓர் அதிர்ச்சித் தகவலையும் கட்டுக்கதைகளையும் வெளியிட்டனர், செப்டம்பர் 11-14, 2010 தேதியிட்ட அவர்களது அவதூற்றுப் பத்திரிகையான நக்கீரனில். எங்கள் இயக்கப் பெயரைக் கெடுக்கும் வகையில் கதைவசனம் எழுதியுள்ளனர் இந்த வம்படி நபர்கள். எனவேதான் இவர்கள் பற்றி நாம் எழுதவேண்டி ஏற்பட்டது. அதற்காக வருந்துகிறோம். ஏனெனில் இவர்கள் ஒன்றும் தியாகிகளோ, போராளிகளோ அல்ல. வெறும் வேசதாரிகள். ஒருவரின் நற்பெயரைக் கெடுத்து அதில் பிழைப்பு நடத்துபவர்கள். ஆயினும் தொடர்ந்து இந்த நபர்கள் எங்கள் விடயத்தில் தலையிடாமல் இருக்கவே இதனை எழுதுகிறோம்.

இவர்கள் வடித்த தலைப்பு ‘கடத்தல், சித்திரவதை, கொள்ளை, தமிழகத்தில்
ராஜபக்சேயின் வெள்ளைவேன், அலறும் ஈழத்தமிழர்கள்’ இவைதான் அந்த வாரத்தின் வெடிச்செய்தி! இவர்கள் பின்னிய இந்த வெடிக்கதையின் முக்கியமானவற்றை கீழே தருகிறோம்!

ஈழத் தமிழரை இழிவுபடுத்தி பணம் பண்ணும் நக்கீரன் கடந்த வாரம் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார் ஈழத்தமிழ் இளைஞர் சிவபாலன். வெள்ளைவேன் வந்தது. விடுதலைப் புலியா என்று கேட்டனர். அவர் மறுக்கிறார். அப்படியானால் குவாலிஸ் வேனில் இருக்கும் இந்திய அதிகாரியிடம் விளக்கிச் சொல்லிவிட்டுப் போங்கள் என்று கட்டாயப் படுத்துகின்றனர். அவரும் சம்மதித்து வர, அவரைத் தூக்கிக் கொண்டு இரண்டு வேன்களும் கிழக்குக் கடற்கரைசாலை சவுக்குத்தோப்புக்கு பறந்தன. அடி, உதை என்று அவர் சித்திரவதைப் படுகிறார். இறுதியில் பணம் நான்கு லட்சத்தைக் கண்டதும் அடிப்பதை நிறுத்திவிட்டு சிவபாலனை சவுக்குத்தோப்பில் தள்ளிவிட்டுப் பறந்து விட்டனர். சிவபாலனுக்கு மரணபயம் அவரது கண்களை விட்டு அகலாமல் நடனமாடுகிறது என்று நக்கீரன் கோவாலு எழுதியுள்ளார்.

பிறகு மடிப்பாக்கத்தில் இலங்கைத் தமிழ் குடும்பமாம், உறவினர் சிங்கள ராணுவமுகாமிலாம், அவர்களை வெளியில் எடுத்துவிடுவது என்று கூறி 25 இலட்சம் ரூபாயை அடித்து உதைத்து பறித்துச் சென்றனர். அதிலும் தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு வரச்சொல்லி பறித்துச் சென்றனர்.

பிறகு கியூபிராஞ்ச் ஈழத்தமிழர் ஒருவரை பிடித்துச் சென்று விட்டது. அவரை விடுவிக்க அந்த அப்பாவியிடமிருந்து பத்து லட்சத்தை பறித்துச் சென்றுவிட்டனர். இவை எல்லாவற்றையும் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றதை ஆதரித்த அமைப்பான ராஜன் தலைமையிலான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னனி என்ற அமைப்பைச் சேர்ந்த மோகனும் ரஜனியும் செய்கின்றனர் என்று ரஜனியின் புகைப்படத்தை வெளியிட்டு எங்களது இயக்கத்தின் பெயரை கெடுக்க நக்கீரன் கோபாலும் பிரகாஷ் என்ற நபரும் சேர்ந்து கதைவிட்டு வசனம் எழுதி பெற்றுக்கொண்ட பணத்துக்கு விசுவாசமாக செயல்பட்டுள்ளனர். அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் என்ற கட்சியைச் சேர்ந்த வன்னிஅரசு என்பவர்தான்  இந்தக் கதையைச் சொன்னதாகவும் அவர்கள் எழுதியுள்ளனர். இவர்களது கட்டுக்கதையில் பணம், பேருந்து நிலையம் இவைபற்றி அடிக்கடி வருகிறது. கோபாலும் அருப்புக் கோட்டையிலிருந்து பஸ் ஏறி வயிற்றுப்பிழைப்பிற்காக சென்னை வந்ததை இன்றுவரை மறக்கவில்லை என்பது நல்ல விடயம்தான்.

”ஈழத்தமிழன் ஒருவன் நான்கு இலட்சம் பணத்துடன் திருவான்மியூர் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார்”

இலங்கைத்தமிழர் ஒருவர் இலட்சக்கணக்கான பணத்துடன் திருவான்மியூர் லோக்கல் பஸ் நிலையத்தில் அடையாறு போவதற்காக காத்துக் கொண்டு நிற்கமாட்டார். ஐம்பது ரூபாய் கொடுத்து ஆட்டோவில் சென்று விடுவார். இந்தப் பேருந்துக் கதை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் சொல்ல வேண்டும்.

அடுத்து, இந்திய அதிகாரிகள் என்று சொன்னதும் அவர் மதிப்பு கொடுத்து போலீஸ் வேனுக்கு சென்றதாக கூறுகிறார்கள். இந்த நபர்கள். அடி, உதை, சித்திரவதை செய்தபின்னர் பணம் நான்கு இலட்சத்தை கண்ட பின்னர்தான் அடிப்பதை நிறுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளனர். தம்பி கோபாலு, பணத்தைக் கண்டால் வாயைப்பிளப்பது உங்களைப் போல பிழைப்புத்தேடி சென்னைக்கு வந்தவர்கள்தான். ஈழத்தமிழர்கள் பணத்தைத் தேடி சென்னைக்கு வந்தவர்கள் அல்ல!!

நீங்கள் வீரப்பன் தூதராகி எவ்வளவு பணம் சுருட்டினீர்கள் என்பது அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தெரியும். போலீஸ் மற்றும் உளவுத் துறையினருக்கும் தெரியும். நாங்கள் பிழைப்புக்காக விடுதலைப் போராட்டத்துக்கு வரவில்லை. எங்கள் விடுதலை இயக்கங்கள் பற்றி விமர்சிக்கவோ, விளக்கவுரை கொடுக்கவோ உங்கள் யாருக்கும் தகுதி கிடையாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

”அமைதிப்படையை வரவேற்ற ராஜன்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.”

இப்போதும் சொல்கிறோம், இந்திய அமைதிப்படை மீண்டும் ஈழத்திற்கு வந்தால் நாங்கள் முன்னின்று ஆதரவு வழங்குவோம். வரவேற்ப்புக் கொடுப்போம். இதற்கான காரணங்கள் என்ன என்று மீசையை மட்டும் வளர்த்த கோவாலுக்குத் தெரியாது, தெரியவும் வாய்ப்பில்லை. ஏனெனில் ஒப்பந்தமும் அமைதிப்படையும் நிகழ்ந்த காலங்களில் நீங்கள் தராசு பத்திரிகையில் லே அவுட் ஆர்ட்டிஸ்ட். படங்கள் வரைந்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தீர்கள். இப்போது கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து நீங்கள் எங்களுக்கும் பட்டம் சூட்டப் புறப்பட்டு விட்டீர்கள்.

அமைதிப்படையை வைத்துக்கெர்ண்டு எங்கள் உரிமைப் பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படியான ஓர் வாய்ப்பினைக் கெடுத்து குட்டிச்சுவராக்கிய பெருமை தமிழகத்துப் புலி ஆதரவாளர்களையே சாரும். இன்றைய நிலையில் ஓர் படை ஈழத்துக்குச் செல்லாமல் எந்தவித உரிமைகளையும் நாங்கள் சிங்கள அரசிடமிருந்து பெற முடியாது. ஈழத்தமிழர்கள் எந்த நிலையை அடைந்தாலும் உங்களுக்கு இழப்பு ஏதுமில்லை. தொடர்ந்து பணவரவுதான். சில சமயங்களில் குறையலாம். இப்போதும் வீரவசனம் பேசி பணம் பறிக்கும் முயற்சியால்தான் தங்களைப்போன்ற பணவிரும்பிகள் ஈழத்தமிழருக்கு கதைகள் சொல்கின்றனர். அவர்களும் அவற்றை நம்பி இப்போதும் பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். அதற்கு விசுவாசமாக நீங்களும் ஈழத்தமிழ் இயக்கங்களுக்கு பட்டம் சூட்டி, விளம்பரம் செய்து மகிழ்ந்து வாழ்ந்து வருகிறீர்கள்.

ராஜபக்சேயுடன் இணைந்து வெள்ளைவேனில் கொள்ளை அடிக்கின்றனர், அதனைப் பார்த்து வன்னிய அரசு என்று பெயர் சூட்டிக் கொண்ட ஜெயராஜ் என்பவர் வேதனைப்படுகிறாராம். இந்த ஜெயராஜ் – வன்னியஅரசு பற்றி பின்னர் நாம் சொல்கிறோம். கவலைப்பட இவரென்ன ராஜபக்சயால் விரட்டப்பட்டு அகதியாக தமிழகம்வந்தவரா? இலங்கைத் தமிழரது பணத்திலல்லவா இவர் வாழ்வை நடத்தி வருகிறார்!

நான்கு லட்சத்தை பறிகொடுத்த சிவபாலன் என்பவர் ‘இந்திய அதிகாரிகளிடம் வந்து கூறிவிட்டுச் செல்லவும்” என்று சொன்னதைக் கேட்டு மதிப்பு கொடுத்து வேன் நின்ற இடத்துக்கு வந்தவர் அடி, உதைபட்டுப் பணத்தைப் பறி கொடுத்ததும் நேராக போலீஸ் நிலையத்துக்குச் சென்று முறையீடு கொடுத்திருந்தால் உடனே அந்தத்திருடர்களை பிடித்திருக்கலாமே!

அவரது முகத்திலிருந்த மரணபயத்தை நக்கீரன் கோவாலுதான் கண்டுபிடித்து கதை எழுத முற்பட்டாரா? பணத்தைப் பறிகொடுத்த சிவபாலன் கோவாலுவையா சந்திக்கச் சென்றார்? அல்லது ஜெயராஜ் என்ற வன்னிய அரசிடமா சென்றார்? ஏன் தமிழ்நாட்டில் போலீஸ், சட்டம், ஒழுங்கு என்று எதுவுமே கிடையாதா? கோவாலுவும் வன்னியஅரசுமா தமிழ்நாட்டை நிர்வகிப்பவர்கள்?

அடுத்து இலங்கையில் இருக்கும் கைதி ஒருவரை மீட்க பணம் ரூ25 லட்சம் கேட்டு, பின் பஸ்’ நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து பறித்துச் சென்றனர் என்று வர்ணனை செய்து வருத்தப்படுகிறார். இந்தியப் பணத்தில் 25 லட்சம் என்றால் இலங்கைப் பணத்தில் 75 லட்சம். இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வெளியே வர ஒரு நபர் முயற்சிக்கிறார் என்றால் அவர் என்ன பொட்டு அம்மானின் ஸ்தானத்திலா இருந்தார் வன்னியில்?

அட மடப்பயல்களா! நாங்கள் இந்தத் தரகர் வேலை எதுவும் செய்வது கிடையாது. இப்போதும் புலிகளின் நபர்கள்தான் இந்தத் தரகுவழி பணப்பறிப்பைச் செய்கின்றனர். இன்றைய நிலையில் புலிகளின் முப்பது சதவீத நபர்கள் இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுகின்றனர். கொழும்பு விமானநிலையத்தில் உளவு வேலை பார்ப்பவர்கள் புலிகளின் அங்கத்தினர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்பது உண்மைதான். வன்னிப்பகுதியில் புதைக்கப்பட்ட பணம், நகைகளை, சிங்களஇராணுவத்துடன் இணைந்து காட்டிக் கொடுத்துப் பங்குபோடுகின்றனர் விடுதலைப் புலிகளின் ஒரு பகுதியினர்.

புலிகள் புனிதமானவர்கள், ஏனைய அனைவரும் அயோக்கியர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று நீங்கள் பிரசாரம் செய்தால் உங்களுக்குப் பணம் குவியும், புலிகள் வாரி வழங்குவார்கள் என்பதைக்கண்ட உங்களைப் போன்ற பலரும் இதுபோன்ற விசமப் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். நாங்கள் துரோகிகள் என்றால் பிரபாகரன் பிரேமதாசாவுடன் இணைந்தது போன்று நாங்களும் ராஜபக்சேயுடன் இணைந்திருப்போம். டக்கிளஸ், கருணா, பத்மநாதன் போன்று நாமும் வாழலாமே இலங்கையில்!

அடுத்து இன்னுமோர் புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டுள்ளீர்கள். கியூ பிராஞ்ச் பிடித்துச் சென்ற ஒருவரை விடுவிக்க 10 லட்சம் பேசி பறித்துக் சென்றனர். பத்து லட்சம் கொடுத்து தப்பிச்செல்லும் அளவுக்கு அந்த நபர் கொடூரப்புலிப் பயங்கரவாதியா? புலிப் பயங்கரவாதியாக இருந்தால் தான் இப்படி பத்து லட்சம் கொடுக்க வேண்டும். அப்பாவி ஈழத்தமிழருக்கு பத்து லட்சம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அத்துடன் புலிப் பயங்கரவாதி என்றால் ENDLF அங்கத்தினரை ஏன் அணுகவேண்டும்? புலி ஆதரவாளர்களை அல்லவா அணுகி இருப்பார்கள்? நக்கீரன் கோவாலு, கதை எழுதினால் அதை எழுதிய உங்களுக்கு என்றாலும் புரியவேண்டும்.

நோர்வேயிலிருந்து நெடியவன் எதையாவது சொல்ல நீங்கள் பெற்றுக் கொண்ட பணத்துக்காக ஏனைய இயக்கத்தவர்கள் மீது உங்களது பாணியில் சேற்றை வாரி வீசக்கூடாது.

ராஜீவ்காந்தி அவர்களைப் படுகொலை செய்தது போன்ற இன்னுமோர் நிகழ்வைச் செய்ய ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அனுமதிக்கக்கூடாது. ராஜபக்சேயுடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமான புலிகள் இன்று கைகோர்த்து செயல்படுகின்றனர். ராஜீவ் அவர்களைப் போன்ற இன்னொரு சம்பவம் நிகழ்த்தப்பட்டால் ஈழத்தமிழர்கள் இலங்கையை விட்டு முற்றாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி ஓர் நிகழ்வை ராஜபக்சே எதிர்பார்த்து இருக்கிறார். அதிலும் புலிகளை வைத்தே இந்தச் செயலை மீண்டும் செய்விக்க அவர்கள் முயற்சித்து வருகிறார்கள். புலிகளில் பலபேர்களைக் கூலிகளாக்கி நாச வேலை செய்ய சிங்களஅரசுடன் இணைந்துள்ளனர்.

அப்படி ஓர் சம்பவம் நடந்தால் அதற்கும் விளக்கக்கூட்டம் போட புலிகளின் ஆதரவாளர்கள் தயாராக இருக்கின்றனர். இழப்பு தமிழகப் புலி ஆதரவாளருக்கோ, தலைவர்களுக்கோ தீவிர வாய்வீச்சாளர்களுக்கோ அல்ல! வீழ்வதும் பாதிக்கப்படுவதும் ஈழத்தமிழர்கள்தான்!

நோர்வே நெடியவன் தூண்டுதலால் அப்படியோர் நிகழ்வு ஏற்பட இருந்ததை நாம் தடுத்து நிறுத்தியுள்ளோம். அது பற்றியெல்லாம் கோவாலுவுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய தேவையில்லை. அதற்குப் பழிவாங்கவே நெடியவனின் தூண்டுதலில் ஜெயராஜூம் (வன்னியரசு) நக்கீரன் கோவாலுவும்.

எங்களைக் கேவலப்படுத்தி கதை விட்டுள்ளீர்கள். ‘பிடிபட்ட ரஜனி’ என்று ஓர் படத்தினை போட்டுள்ளீர்கள். யார் பிடித்தது? போலீஸ்சார் பிடித்தனரா? வலுக்கட்டாயமாக அவரது கடையிலிருந்தவரை வடபழனியிலிருக்கும் மயூரியா ஹோட்டலுக்கு இழுத்துச் சென்று புகைப் படம் எடுத்து அனுப்பிவிட்டு, ‘பிடிபட்ட ரஜனிகாந்த்” என்று மக்களை ஏமாற்றியுள்ளீர்கள். பிடிபட்டவர் என்றால் போலீசில் பிடிபட்டவர் என்ற அர்த்தம் தோன்றும் வகையில் கதை பின்னியுள்ளீர்கள்.  ஈழத்தமிழர் மத்தியில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி பிழைப்பு நடத்தும் வன்னியஅரசு உமக்கு தமிழகப் போலீஸாகத் தெரிகிறார். ஏனெனில் நீங்கள் அனைவரும் குறுக்கு வழியில் சென்று பணத்தை நாடும் பண்பாளர்கள் தானே! தமிழ் நாட்டில் உள்ள புலி ஆதரவுப் பத்திரிகைகள் சில எங்களைக் கேவலமாக விமர்சித்து செய்தி வெளியிடுவதன் மூலம் புலிகளிடத்து நற்பெயரும் பணமும் பெற்றுள்ளார்கள். இப்படி இலாபம் சம்பாதிக்கும் சிறந்த குறுக்கு வழிதான் இந்தக் கட்டுக் கதையிலும் அடங்கியிருக்கிறது.

விடுதலை என்ற சொல்லைக் கேள்விப்பட்டும், புலிகளின் பணத்தைப் பார்த்த பின்னரும்தான் நீங்கள் ஈழவிவகாரத்தில் புகுந்தீர்கள். நாங்கள் வாழ்க்கையை விடுதலைக்காக இழந்து அகதிகளாகவும் அடக்கப்பட்டவர்களாகவும் நாடற்றவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நீங்கள் எங்களுக்குப் பட்டம் சூட்டும் பணியைச் செய்யாதீர்கள். அகதிகளாகவும் அடிமைகளாகவும் வாழும் வாழ்க்கையின் வலி என்னவென்பதே தெரியாத நீங்கள் வியாபாரத்துக்காகவும் லாபத்திற்காகவும் ஈழப்பிரச்சினையில் மூக்கை நுழைத்து, கெடுதல் செய்து பணம் பண்ணுகிறீர்கள். நக்கீரன் என்ற பெயரைப் பயன்படுத்தி அவதூறும் பொய்யும் கட்டுக்கதையும் எழுதி அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் செயல் கேவலத்திலும் கேவலமான பிழைப்பு.

தெருவோரத்தில் நின்று கூச்சல் போடுவோராலும் காதுகள் கிழிய மேடையில் முழங்குவோராலும் கற்பனையில் கதை எழுதி பிழைப்பு நடத்தும் தங்களைப் போன்றோராலும் ஈழத்தமிழரின் ஒருபகுதியினர் ஏமாந்தது மட்டுமல்ல, அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். அப்படியிருந்தும் இன்னமும் விடுவதாகயில்லை. உங்களது வருவாய்க்காக எங்கள் மக்களை கூறுபோட்டு பணம் பண்ணப் பார்க்கிறீர்கள். பேராசைக்கு அளவு ஏது? ஆயினும் எங்களது இனப்பிரச்சினையில் இனியாவது பணம் சேர்ப்பதை நிறுத்தி ஒருவருக்கொருவர் சிண்டுமுடியும் வேலையைத் தவிர்த்தாலே நீங்கள் தமிழினத்திற்குச் செய்யும் பெரும்சேiவாக அது அமையும். வீரப்பனுக்காக கண்ணீர் விட்ட கோபாலு ஈழத்தமிழருக்காக நொந்து கண்ணீர் விடவேண்டாம். அவர்களிடமிருக்கும் பணத்தைப் பறிக்க வீரப்பன் வழியைப் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Pirabaharan_Still_Aliveகடந்த ஆண்டு மே மாதம் 18ந் தேதியுடன் தமிழர்களின் ஒட்டுமொத்தப் பகுதியையும் கைப்பற்றி விடுதலைப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக சிங்கள அரசு அறிவித்தது. அதன் பின்னர் 23-5-2009 அன்று பிரபாகரன் தனது படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற இந்தப் படத்தினை நக்கீரன் வெளியிட்டு பெருமை பெற்றது. இது ஒரு ஒட்டுப்படமோசடி என்பது அப்பாவித் தமிழர்களுக்குத் தெரியாது.

Pirbaharan_Still_Alive_Notஇந்த ஒட்டுப்படத்தின் உண்மையான படம் இதுதான். இது பாலசிங்கத்திடம் உரையாடிக் கொண்டிருக்கும் பிரபாகரனின் பழைய படத்தை இவ்விதம் ஒட்டு வேலை செய்து மொத்தத் தமிழினத்தையும் துணிந்து ஏமாற்றியது இந்த நக்கீரன். இப்படி ஓர் அழிவைச் சந்தித்த இனத்தின் முக்கியமான ஒருவர் புன்னகைக்ககூடிய காலகட்டமா அது! நக்கீரனின் ஒட்டுவேலை அவரை இழிவுபடுத்தியது என்பதுதான் உண்மை.

நக்கீரன் இதழின் வழக்கமான மோசடிதான் இது என்று தெரியாமல் இந்த மோசடிக்காரருக்கு வாழ்த்து சொன்ன அப்பாவி இளிச்சவாய்த் தமிழர்கள்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(E.N.D.L.F) வெளியீடு !!!

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புதின வைபவத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

fawzi_minister.jpgஎதிர்வரும் டிசெம்பர் மாதம் 26ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புதின நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புதின நிகழ்வு முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தை நினைவு கூர்ந்து தேசிய பாதுகாப்பு தினம் அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டது. இது இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.

இந்நிகழ்வகளை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக கடந்த வாரம் அனர்த்தமுகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாநகரசபைக்கு இலங்கை இந்திய நட்புறவுச் சங்கத்தால் பஸ்கள் அன்பளிப்பு.

India_Donated_Busesஇலங்கை இந்திய நட்புறவுச் சங்கத்தினால் யாழ். மாநகரசபைக்கு வழங்கபபட்டுள்ள பஸ்களை நேற்று திங்கள்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாநகர சபையின் சாரதிகளிடம் கையளித்தார்.

India_Donated_Busesஇந்த பஸ்கள் ஒவ்வொன்றும் 17 இலட்சரூபா பெறுமதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள ஐந்து பஸ்கள் இலங்கைப் போக்குரத்துச் சபையின் பஸ்கள் சேவையிலீடுபடாத யாழ். நகரத்தை அண்டிய பகுதிகளில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ். நாவலர் வீதி, அரியாலை, கோவில் வீதி. போன்ற வேறு பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடாத சிறு பாதைகள் ஊடாக இந்த பஸ்கள் பாடசாலை மாணவர்கள் பொது மக்களின் நன்மை கருதி சேவையிலீடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த இரத்தினபுரி குக்குலேகம மக்கள் இன்னும் குடியிருப்புக்குத் திரும்பவில்லை!

Vasudeva Nanayakaraஇரத்தின புரியில் உள்ள நிவித்திகல குக்குலெகம தோட்டத்திலிருந்து தாக்குதல் அச்சம் காரணமாக வெளியேறியுள்ள மக்கள் இன்னமும் தங்களின் இடங்களுக்குச் செல்லாமல் நண்பர்கள் உறவினர் வீடுகளிலேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மக்கள் தற்போது எங்கிருக்கின்றார்கள் எனத் தெரியவில்லை எனவும் அவர்கள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தால் அவர்களுக்கான நிவாரணத்தைப பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அச்சம் காரணமாக வெளியெறியுள்ள இம்மக்கள் தமது அலுவலகத்துடனோ, அல்லது தமது தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொண்டால் அவர்களுக்கான நிவாரண உதவிகளை மேற்nகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் குக்குலெகம தோட்டத்தில் சிங்கள காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து சில சிங்களவர்கள் இரவு வேளையில் தமிழர்களின் குடியிருப்புக்குள் புகுந்து அவர்களின் வீடுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள் உட்பட அவர்களின் அனைத்து ஆவணங்களையும் தீக்கிரையாக்கினர். இதனையடுத்து தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தேயிலைச் செடிகளுக்குள்ளும், காடுகளுக்குள்ளும் மறைந்திருந்து விட்டு விடிந்ததும் உறவினர், நண்பர்கள் விடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர்.

இது இவ்வாறிருக்க மலையக அரசியல்வாதிகள் இச்சம்பவம் குறித்தும், இம்மக்களின் பாதுகாப்பு குறித்தும் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எவையும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 இரத்தினபுரி தோட்டமொன்றில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மக்கள் அச்சத்தினால் இடம்பெயர்ந்தனர்.

Ratnapuri_Map_of_SLஇரத்தினபுரி தோட்டமொன்றில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மக்கள் அச்சத்தினால் இடம்பெயர்ந்தனர். இரத்தினபுரி தோட்டம் ஒன்றில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி நிவித்திகல பொலிஸ் பிரிவிலுள்ள குக்குலகல தோட்டத்தைச்சேர்ந்த சிங்கள தோட்டக் காவல் தொழிலாளி ஒருவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போய் பின்னர் அவர் சடலமாக மீட்க்கப்பட்டதையடுத்து சிலரால் அப்பகுதியிலுள்ள இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலுள்ள பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இத்தோட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து இரு பிரிவினருக்கிடையில் சில இடங்களில் கைகலப்புச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் அனைவரும் பருவ மழைக்கு முன்னர் மீள்குடியமர்த்தப்படுவர் என அரசாங்கம் அறிவிப்பு.

milroy_fernando.bmpபருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னதாக இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் தொகை தற்போது 25 ஆயிரம் மட்டுமே எனவும் இவர்கள் அனைவரும் வெடிபொருட்கள் அகற்றப்பட்டவுடன் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் எனவும் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். பருவமழைக்கு முன்பு இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னர் வடபகுதியின் அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழனின் இன்றைய யதார்த்தம்! : வாசுதேவன்

Students_Mannarதமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் இன்று குழிதோண்டிப் புதைத்துவிடப்பட்டுள்ளது. ஆனால் புலம்பெயர் மன்ணில் உள்ள எச்ச சொச்ச தேசிய படை வீரர்கள் கறுப்பு சிவப்பு என்று தற்போது தமக்குள் மோத வெளிக்கிட்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் இருப்பை காக்க என்று தொடங்கிய போராட்டம் இன்று தமிழ் மக்களின் அரசியலை நிர்வாணமாக்கி அவர்களை நட்டாற்றில் விட்டுள்ளது. தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக மாற்றிய அனைவரும் புலிகளின் அராஜகத்தால் அழித்தொழிக்கப்பட மிஞ்சிய புலிகளும் அரசினால் அழித்தொழிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அவர்களுக்கு இருந்த உரிமைகளையும் பறிகொடுப்பதற்கே வழி வகுத்தது. தமிழ் பேசும் மக்களிற்கு குறைந்தபட்சம் கிடைக்க இருந்த பல தீர்வுகள் இந்த போராட்டத்தல் நிராகரிக்கப்பட்டு இன்று தருவது எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கில் தமிழ் மக்கள் உள்ளனர்.

இந்த போராட்டத்தினால் இன்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் சொல்லில் அடங்காது. பட்டினிக் கொடுமைகளை காணத வடக்கு கிழக்கில் இன்று பலர் பட்டினிக் கொடுமையால் தங்கள் குழந்தைகளை அநாதை இல்லத்தில் சேர்க்கும் கட்டத்தில் உள்ளனர்! வேலையற்ற எந்த வித தொழில் பயிற்சியுமற்ற மற்றவர்கள் தருவதை எதிர்பார்க்கும் ஒரு சமூகத்தை இந்த போராட்டம் தோற்றுவித்துள்ளது. எண்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் இன்று தமது எதிர்காலத்தை வெறும் சூனியத்துடன் எதிர் நோக்கியுள்ளனர். வீதியோரங்களில் தம் வீடுகளை இழந்த சமூகம் ஒன்று வெறும் கொட்டில்களை போட்டு முற்றாக  நம்பிக்கையிழந்த நிலையில் ஏதோ வாழ வேண்டும் என்று தம் வாழ்கையை தொடங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான அநாதைக் குழந்தைகள் பெற்றோர்கள் அற்ற தம் வாழ்க்கைகளை அன்னியர்களுடன் வாழத் தொடங்குகிறார்கள். விடுதலைத் தீயினில் சங்கமிக்க வாருங்கள் என்று அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் சிறைகளில் தம் இருண்ட எதிர்காலத்தை உறுத்துப்பார்த்தபடி விரக்தியுடன் காலத்தை ஓட்டுகின்றனர். இவர்களின் பலர் தங்கள் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு யுத்த களத்தில் நிறுத்தப்பட்டவர்கள். 

IDP_Camp_Injured_Manஆனால் புலத்திலோ கறுப்பு சிவப்பு பச்சை என்று பல்வேறு கூட்டங்கள் தங்கள் இருப்பை காக்க தங்களுக்குள் மோதிக்கொண்டு ஆளுக்காள் சேற்றை வாரியடித்துக் கொண்டுள்னர். யுத்த காலத்தில் அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் இன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அரைச்சதம் கொடுப்பதற்கு ஆயிரம் கதை கூறுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசு தான் எனவே சிறீலங்கா அரசு செய்யட்டும் என்று புறந்தள்ளி விட்டு தங்கள் குழந்தை செல்வங்களின் முதல் மாதவிடாய்க்கு 5 நட்சத்திர விடுதியில் விழா எடுக்கிறது புலம்பெயர் சமூகம்! ஆயிரக்கணக்கில் அகதிகள் அனாதைகள் விதவைகள் அடுத்த வேளை உணவிற்கு அல்லலுறுகையில் மாதமொரு ஆண்டு விழா வாரமொரு அரங்கேற்றம் நாளுக்கொரு பிறந்தநாளுடன் இருக்கின்ற சுபதினங்களில் கல்யாணம் கச்சேரியில் வயிறுபுடைக்க உண்டுவிட்டு தலைவர் நடுக்கடலிலை சுத்துறார் ஒரு நாளைக்கு வெளியிலை வருவார் என்று ஏப்பக்கதைகள் கதைக்கிறார்கள். இவர்கள் உண்ணாத உணவுகளை கறுத்தப்பைகளில் சேர்க்க கோட்டு சூட்டுடன் வாடகைக்கு அமர்த்தப்படும் வெள்ளைக்காரர்கள்.

ஒவ்வொரு ஈழப்போரிற்கும் அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் புலிக்கு பணம் சேர்த்த பண முதலைகளின் இருப்பை காக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்கிறார்கள். போரில் வெற்றி வந்தால் கொண்டாடும் இந்த சமூகம் தோல்விக்கு இன்று ஒருவரை தேடி அவரை துரோகி என முத்திரை குத்துவதில் காலத்தை ஓட்டுகின்றனர். தற்போது இந்த துரோகிகள் பட்டியல் மைல் கணக்கில் நீண்டுகொண்டு முடிவற்று செல்கிறது. அதிலும் பதவிகள் துரோகி மேஜர் ஜெனரல், துரோகி லெப்டினட் கேணல் என்று. ஆனால் இந்த பட்டியலில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் மட்டும் வரவே வராது! ஏனெனில் அவர் இப்போது எம்மோடு இல்லை. குறைந்தபட்சம் புலிகளின் தோல்வியை கூட சுதந்திரமாக சுயவிமர்சம் செய்யத் தயங்கும் இவர்கள் இன்னமும் புலிகள் வளர்த்த புழுத்துப்போன கலாச்சாரத்தில் நின்று சுற்றி சுற்றி வருகிறார்கள் ‘அவர் வருவார், வந்து ஒரு பதில் தருவார்’ என்று கனவுலகில் சஞ்சரிக்கும் இவர்கள் தற்போது நாடுகடந்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்.

தாயகத்தில் அரசிற்கும் புலிகளிற்கும் இடையில் சிக்கி சின்னாபின்மாகிப் போன மக்களை யாரும் கவனிக்க தயாராக இல்லை! சிறு சிறு குழுக்களாக ஒரு சிலர் இன்று பல்வேறு உதவிகளை செய்த போதும் இது தேவைப்படும் உதவிகளில் ஒரு கடுகளவே! உதவிகள் என்பது வெறும் பணம் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. உளவியல் ரீதியாக இன்று பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்களிற்கு பல்வேறு தேவைகள் இன்று உள்ளன. பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்கள் தம் மன அழுத்தங்களால் இன்று மனநோயாளிகளாக மாறி வருகின்றனர். யுத்தம், இரத்தம், சதைத் துண்டங்கள் போன்ற அவலங்களை பார்த்த குழந்தைகள் மூர்க்கதனமான பழக்க வளக்கங்களை சாதரணமாக செய்கிறார்கள். தன்னுடன் படிக்கும் சக மாணவனை கல்லால் அடித்து விட்டு ரத்தம் ஒழுகுவதை பார்த்து ரசிக்கும் கூரூர மனப்பாங்கில் உள்ள பல குழந்தைகளை இன்று ஆசிரியர்கள்  எதிர்நோக்க வேண்டியுள்ளது. தன் கண்முன்னே கொல்லப்பட கணவனை அரை குறையாக புதைத்து விட்டு ஓடிய மனைவியின் மன அவலங்கள் இன்னும் அவர்களின் மனதில் ஒட்டியுள்ளது. இந்த மன உளைச்சலுடன் வெளியல் வந்து தம் வாழ்வை தொடங்க முயல்கையில் ‘முண்டச்சி முழிவியளத்திற்கு வந்திட்டுதுகள்!’, ‘தாலியறுந்ததுகள் வீடுகளுக்கை இருக்காமல், எங்கடை உயிரை எடுக்குதுகள்’ என்று வசைவாங்கியே தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

IDP_Camp_Barbed_Wireஇதற்கும் மேல் இடம்பெயர்ந்து வந்த ஒரு புதுச்சாதி யாழ் குடாவில் உள்ளது. இவர்களை ஒரு தாழ்த்தப்பட்ட சமூகமாக அங்கு வசித்து வருபவர்கள் ஒதுக்கி வைத்து உள்ளனர். காரணம் இவர்கள் என்ன சாதியென்று தெரியாதாம். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த இந்த மக்கள் புலிகள் அல்லது புலிகளின் ஆதவராளர்கள். எனவே இவர்களுக்கு தொழில் கொடுக்க பயப்படுவதுடன் இவர்களை ஒரு கள்வர்களை போல பார்க்கிறர்கள். சந்திக்கு சந்தி நின்று பெண்களுடன் சேட்டை பண்ணும் இன்னுமொரு கூட்டம் மாலையானதும் மதுவில் மயங்குகிறார்கள். மாலை மயக்கதில் வீடுகளை பூட்ட மறந்தால் முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து இரத்தம் கண்ட பின்னே அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு சென்று விடுவார்கள்.

இன்று யாழ் குடாவில் தற்போது பல வீதிகள் செப்பனிடும் பணி ஆரம்பமாகியுள்ளது. ஆனால் இதற்கு கூட தெற்கில் இருந்து தான் ஆட்களை கெண்டு வரவேண்டியுள்ளது. காரணம் பலருக்கு இந்த வேலைகள் பிடிப்பில்லை. அத்துடன் ஒரு சிலருக்கே இந்த தொழில் தெரிந்திருக்கிறது. மேசன் வேலை செய்ய ஆட்கள் இல்லை. தச்சுத் தொழில் செய்ய வவுனியாவிலிருந்து ஆட்களை கொண்டு வரவேண்டியுள்ளது. இதற்கு காரணம் புலம்பெயர் நாட்டில் இருக்கும் நம்மவர்கள் அனுப்பும் பணமா அல்லது சோம்பலா அல்லது தொழில் சார் அறிவீனமா? புரியவில்லை. ஒரு சிறு வேலையை கூட சுயமாக சிந்திக்க தெரியாத ஒரு சமூகமாக உருவாகியுள்ள சமூகத்தில் இன்று ஓரளவு படித்து வேலை செய்பவர்கள் வெளிநாடு போவதையே லட்சியமாக கொண்டுள்ளனர்.

அரசு கவனிக்கவில்லை அரசு புறந்தள்ளுகிறது என்று சோம்பேறித்தனமாக சாட்டுச் சொல்பவர்கள் மத்தியல் ஒரு சிறுபான்மையானவர்கள் கடும் வேலைசெய்து முன்னேற முனைவது ஒரு சிறு ஆறுதலாக உள்ளது. வெளிநாட்டில் உறவினர்கள் ஏதுமற்ற குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அண்மையில் தன் தாயாரிற்கு 7 லட்சம் செலவு செய்து இருதய சத்திரசிகிச்சை செய்துள்ளார். இவர்கள் அனைவரும் யாழ் குடாவில் படித்து அங்கேயே தங்கி வேலை செய்பவர்கள். அரச வேலை செய்யும் அதே நேரம் ஒரு சிறு வியாபார நிறுவனத்தை நடாத்தி அதன் மூலம் தங்கள் வருமானத்தை பெருக்கி இந்த மருத்துவ சிகிச்சைக்கு யாரிடமும் கை நீட்டாது தங்களின் தாயாரின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இவர்கள் ஒன்றும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. தாயார் தையல் தொழில் தந்தையார் மரக்கறி வியாபாரி. இவர்களும் மற்றவர்கள் போல் யாழ் குடாவில் பல்வேறு சமயங்களில் இடம் பெயர்ந்தவர்கள். சொந்த காணி கூட இல்லாது வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள். தங்கள் விடா முயற்றியால் இன்று சொந்தமாக ஒரு காணி வாங்கி வீடு கட்டி வருகிறார்கள். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்  என்பதை இவர்கள் நிருபித்துள்ளார்கள். 

தாயகப்பிரதேசம் வடக்கு கிழக்கு அது இணைந்தே தீர்வே தீர்வு என அகங்காரமாக வந்த தீர்வுகளையெல்லாம் தூக்கியெறிந்த ஆளப்பிறந்த இனம் என கொக்கரித்த தமிழ் தேசியப்பற்றாளர்கள்  இன்று ஆட்டம் கண்டு என்ன செய்வது என்று தெரியாது நிற்கிறார்கள். ஆள ஒரு துண்டு நிலம் கொடுத்தாலும் ஆட்சி செய்ய மன்னன் அற்ற நிலைதான் இன்று. இதன் வண்ட வாளங்களை இன்று வவுனியா நகரசபை நிர்வாகங்களில் நன்கே காண முடிகிறது. நகர சபைகளை கூட இயக்க தகுதியற்றவர்கள் மாகாண சபையை எப்படி நிர்வாகிக்க போகிறார்கள்? இது அவர்களின் தவறல்ல. தொழில் சார் அறிவு முகாமைத்துவ அனுபவம் தனிமனித தலைமைத்துவ பண்புகளற்ற ஒரு சமூகத்தை தான் இந்த போர் படைத்துள்ளது. இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் சிந்திக்க வேண்டிய காலம்.

Murukandi_Kovilஅண்மையில் பேராசியர் ராஜன் கூல் நாடு திரும்ப முன் சந்தித்த சந்திப்பில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றுபட்ட விடயம் நிரந்தரமாக நாடுதிரும்ப முடியாத அறிஞர்கள் விடுமுறையிலாவது அங்கு சென்று தம் அறிவுசார் அனுபவங்களை அங்குள்ள துறைசார்ந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது.

Nallur_Thiruvillaசிறுதுளி பெரு வெள்ளம் போல் இன்று தோன்றிய இந்த சிறு மாற்றங்கள் தொடரும் பட்சத்தில் மீண்டும் வடக்கு கிழக்கில் ஒரு மாற்றும் உருவாகும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. ஆனால் இன்று பல்வேறு திசைகளில் பயணிக்க தயாராகும் புலம்பெயர் தமிழர்கள் ஒற்றுமையாக குறைந்த பட்சம் அந்த மக்களின் வாழ்விற்காகவவது ஒன்றுபடுவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்! 

கரடியனாறு வெடி விபத்து; உருக்குலைந்த சடலத்தின் பாகங்களை மரபணு சோதனைக்கு அனுப்ப ஏற்பாடு

உருக்குலைந்த சடலமொன்றின் பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யிலிருந்து மரபணு பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளன.

கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் உருக்குலைந்த சடலங்கள் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவ்விரண்டு உருக்குலைந்த சடலங் களில் ஒரு சடலம் ஞாயிற்றுக்கிழமை யன்று அடையாளம் காணப்பட்டது.

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் கடமைபுரிந்த கண்டி, தெல்தெனிய கொமடதின எனும் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்தலால் என்பவரின் சடலமென அடையாளம் காணப்பட்டது.

இதன் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவான் சின்னய்யா மேற்கொண்டார். இதையடுத்து இச்சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட் டது.