உலகி லேயே மிகப்பெரிய விரைந்து செல்லக்கூடிய இலகுரக சொகுசு கப்பலான அலூர் வரும் டிசம்பர் மாதம் வெள்ளோட்டத்திற்கு விடப்படவுள்ளது. கப்பல் தயாரிப்புப் பணியினை மேற்கொண்டு வரும் ரோயல் கரிபியன் இன்டர்நேஷனல் எனும் கப்பல் கட்டுமான நிறுவனம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.
இந்த சொகுசு கப்பல் குறித்து அதன் கேப்டன் ஹெர்மான் ஜினி கூறுகையில் அலூர் கப்பல் கட்டும் பணி கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கியது. 16 அடுக்குகளையும், 360 மீ நீளம் 64மீ அகலமும் கொண்டது.
2 லட்சத்து 25 ஆயிரத்து 282 தொன் எடையினை தாங்கும் திறன் கொண்டது. 2700 அறைகள் 6296 பயணிகளும் 2394 கப்பல் பணியாளர்களும் தங்கும் வகையில் சிறிய நகரம் போன்று வடிவமைக்கப்பட்டள்ளது.
விளையாட்டு மைதானம் பூங்கா கேட்போர் கூடங்கள் உள்பட பல்வேறு அம்சங்களுடன் உள்ள அலூர் கப்பல் கட்டும் பணிகள் தற்போது முடியும் நிலையில் உள்ளன. இந்த கப்பல் வரும் டிசம்பர் மாதம் பயணிகள் போக்குவரத்து விடப்படும் என்றார்