30

30

பிரபல நடிகர் ராஜன் பி. தேவ் காலமானார்

rajan_actor.jpgபிரபல இந்திய  திரைப்பட நடிகர் ராஜன் பி. தேவ் (58) புதன்கிழமை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

தமிழ; மலையாளம்,  தெலுங்கு, கன்னடம், என பல துறைகளில் நடித்துவந்த அவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர். ஈரல் கோளாறு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ராஜன் பி.தேவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், அவரது உடல்நிலை மோசமாகவே புதன்கிழமை அவர் உயிரிழந்தார்.

ஆலப்புழை மாவட்டம், சேர்தலாவில் பிறந்த ராஜன், ஒரு நாடக நடிகராக வாழ்க்கையைத் தொடங்கினார். காட்டுக்குதிரை என்னும் நாடகத்தில் “கொச்சுவாவ’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இந்த நாடகம் ஆயிரம் முறை அரங்கேற்றப்பட்டது.

சினிமாவில் “இந்திரஜாலம்’ இவருக்கு முதல் படம். சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்துவந்த ராஜன்,  விரைவிலேயே பிரபலமானார். 30 ஆண்டுகளில் மலையாளம், தெலுங்கு,  கன்னடம், தமிழ் என மொத்தம் 180 படங்களில் அவர் நடித்துள்ளார்

பேருவளை மோதல் சம்பவம்; 131 சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்; ஓகஸ்ட் 6ம் திகதி வரை விளக்கமறியல்

beruwela.jpgபேருவளை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதான 131 சந்தேக நபர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மேற்படி சம்பவம் தொடர்பாக கைதான மற்றும் பொலிஸில் சரணடைந்த சந்தேக நபர்கள் நேற்று (29) களுத்துறை நீதவான் நீதிமன்ற த்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன் போதே 131 சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட களுத்துறை மேலதிக நீதவான் சாந்தினி டயஸ் சம்பவத்துடன் தொடர்புடை யதாகக் கூறப்படும் ஏனைய பிரதான சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்தார்.

பேருவளை மஹகொட பகுதியில் கடந்த சனியன்று இடம்பெற்ற மோதலில் மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வாசல் தாக்கப்பட்டதோடு இருவர் கொல் லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கைதான சந்தேக நபர்கள் கடந்த 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதோடு இவர்கள் நேற்று வரை (29) விளக்கமறிய லில் வைக்கப்பட்டி ருந்தனர்.

சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிக ளான சிரில் பெரேரா, கனிஷ்க ஆகியோர் ஆஜரானதோடு மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பாக சட்டத்தரணி பிரேமரத்ன ஆஜரானார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் புஹாரி தக்கியா பிரதான சேகிற்கும் தொடர்பிருப் பதாக ‘பி’ அறிக்கை மூலமும் சாட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளதாகவும், எனவே பிரதான சந்தேக நபர்களை கைதுசெய்யுமா றும் சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், பொலி ஸார் விசாரணைகளை வேறு பக்கம் திருப்ப முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், சந்தேக நபர்கள் சார்பாக ஆஜ ரான சட்டத்தரணி சிரில் பெரேரா இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததோடு சம்பவ நேரம் இரவு 12.30 மணியளவில் பிரதான சேக் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடலில் இருந்ததாகவும் சம்பவத்துக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறினார். பொலிஸாரும் இதே கருத்தையே நீதிமன் றத்தில் முன்வைத்தனர்.

இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்குப் பணித்தார். வழக்கு விசாரணையை பார்வையிட பெருந்திரளான மக்கள் நீதிமன்ற வளாகத் திற்கு வருகை தந்திருந்ததோடு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை, தாக்கப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலை சுத்தப்படுத்தும் பணிகள் நேற்று (29) இடம்பெற்றன. பள்ளி வாசலில் சிந்தியிருந்த இரத்தக் கறைகள் கழுவப்பட்டதோடு தீ வைக்கப்பட்ட இடங் களும் சுத்தப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப் படுகிறது.

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு ஆகஸ்ட் முதல் புதிய உபவேந்தர்

பேராதனை பல்கலைக்கழக உபவேந்தராக பொறியியற் பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.பீ. அபயகோன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி பழைய மாணவரான எஸ்.பீ.அபயகோன் உபவேந்தர் பதவிக்கான தேர்தலில் 15 வாக்குகளை பெற்றிருந்தார் இவருக்கு அடுத்தபடியாக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் ஹரிச்சந்திர அபயகுணவர்தன 9 வாக்குகளே பெற்றிருந்தார்.

ஆகஸ்ட் 1ம் திகதி முதல் புதிய உபவேந்தர் தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளார். இவர் சார்க் பல்கலைக்கழக குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது போட்டி இன்று

sri-lanka-cri-te.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்று டெஸ்ட் போட்டியில் இலங்கை – அணி 2 – 0 என தொடரைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. டெஸ்ட் தொடரை கைவிட்ட நிலையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணி ஒரு நாள் தொடரில் வெல்லும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.

இரு அணிகளும் பலம் வாய்ந்த நிலையில் களத்தில் குதிப்பதால் யார் வெற்றி பெறப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விமானச்சீட்டு விலை குறைப்பு ஜயலத் எம்.பி. நன்றி தெரிவிப்பு

யாழ். கொழும்பு விமானப் பயணத்திற்கான விமானச்சீட்டு விலை 1,500 ரூபாவால் குறைக்கப்பட்டமை தொடர்பாக மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்.கொழும்பு விமானச்சீட்டு விலையைக் குறைக்குமாறு கடந்த முதலாம் திகதி சிவில் விமான சேவை அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் பராக்கிரம திஸாநாயக்கவிற்கு அனுப்பிய வேண்டுகோளுக்கமைய 1,500 ரூபாவாக குறைக்கப்பட்டமைக்காக மிகவும் மனமகிழ்கின்றேன். இது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

யாழ்கொழும்பு விமானச்சீட்டு விலையை இந்த அளவிலாவது குறைப்பதற்கு அரசாங்கம் முன்வந்தமை பாராட்டத்தக்க விடயமாகும். இது தொடர்பாக பராக்கிரம திஸாநாயக்கவுடன் நான் பலமுறை கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளேன்.

மீள் குடியேற்றத்திற்கு உதவுவதாக பஹ்ரேய்ன் உறுதி

kalifa-shik-binsalman.jpgஇலங் கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பஹ்ரேய்ன் பிரதமர் கலீபா பின் ஷல்மான் அலி கலீபா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன் மூன்று முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

வடக்கில் இடம்பெயர்ந்தோரின் புனர் வாழவு மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இதற்கான பூரண ஒத்துழைப்பை தமது அரசாங்கம் வழங்குமென பஹ்ரேய்ன் பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய பஹ்ரேய்ன் பிரதமர், பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளுக்கும் இது சிறந்த முன்னுதாரணமாக அமையுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலக்கை நோக்கிய திடமான பயணத்தில் கொண்டிருந்த கொள்கையும் துணிச்சலுமே அரசாங்கம் பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள முக்கிய காரணமாக அமைந்தது என தெரிவித்த அவர், இத்தகைய சந்திப்புகள் இருநாடுகளுக்கிடை யில் நிலவும் நல்லுறவை பலப்படுத்தவும் அதன் மூலம் நாடுகளுக்கிடையிலான வர் த்தக, பொருளாதார நடவடிக் கைகளை மேம்படுத்தவும் உதவுமென தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ, பஹ்ரேய்ன் நாட் டில் தொழில் புரியும் 25,000 இலங்கை யருக்கு அவ்வரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புகளுக்காக நன்றி தெரிவித்தார். அத்துடன் வடக்கில் அரசாங்கம் மேற்கொள் ளும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பஹ்ரேய்ன் அரசாங்கம் வழங்கி வரும் நிதி மற் றும் ஏனைய ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி இத்தருணமானது முதலீடுகளுக்கான சிறந்த வாய்ப்பாக அமையுமெனவும் பஹ் ரேய்ன் முதலீட்டாளர்களுக்கும் இதற்கான வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இலங்கைக்கும் பஹ்ரேனு க்குமிடையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இரு நாடுகளின் தலைவர்கள் முன்னி லையில் இவ்வொப்பந்தங்கள் கைச்சாத் திடப்பட்டன. இலங்கை மற்றும் பஹ்ரேய்ன் நாடுகளு க்கிடையிலான ஒத்துழைப்புக்கான ஒப்பந் தத்தில் இலங்கையின் சார்பில் வெளிவிவ கார அமைச்சர் ரோஹித போகொல்லா கமவும் பஹ்ரேய்ன் சார்பில் அந்நாட்டின் பிரதிப் பிரதமர் செய்க் மொகமட் பின் முபாரக் அல் காலிபாவும் கைச்சாத்திட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளா தார, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்து ழைப்புகளுக்கான ஒப்பந்தத்திலும் இவர்கள் கைச்சாத்திட்டனர்.

அத்துடன் இரு நாடுகளுக்குமிடை யிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு மேம்பாடு தொடர்பான ஒப்பந்தம் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் பஹ்ரேய்ன் கலாசார மற்றும் தகவல் தொடர்பான அமைச்சுக்கிடையில் கைச்சா த்தாகின. இவ்வொப்பந்தத்தில் இலங்கை யின் சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணதிலக்கவும், பஹ்ரேயின் சார் பில் அந்நாட்டின் பிரதிப் பிரதமர் செய்க் மொகமட் பின் முபாரக் அல் காலிபாவும் கைச்சாத்திட்டுள்ளனர்.

நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பெளஸி, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கெஹெலிய ரம்புக்வெல்ல, அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரத்ன, பிரதி அமைச்சர் ஹ¤சேன் பைலா ஆகி யோரும் கலந்துகொண்டனர்

கிழக்கில் அதிஉஷ்ணம்: தென்மேல் பருவ பெயர்ச்சியே காரணம்

கிழக்கு மாகாணத்தில் உஷ்ணம் அதிகரித்திருப்பதற்குத் தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலநிலையே காரணம் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்தி ஹெட்டிஹேவா நேற்றுத் தெரிவித்தார்.

திருமலையில் 36.5 சதவீதம், பொத்துவில் 35.1 சதவீதம், மட்டக்களப்பு 33 சதவீதம், அநுராதபுரம் 34 சதவீதம் என்றபடி நேற்று முன்தினம் உஷ்ணம் பதிவாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.

என்றாலும், இவ்வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் கடந்த மார்ச், மாதம் குருநாகல் மாவட்டத்திலேயே அதிக உஷ்ணம் பதிவாகி இருப்பதாகவும், அதுவும் 38.1 சதவீதமாக இருந்ததாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தற்போது தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி கால நிலையாகும்.

அதனால் காற்று தென்மேற்காக வீசுகின்றது. இதன் விளைவாகத் தான் கிழக்கு மாகாணத்தில் தற்போது உஷ்ணம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதேநேரம், இவ்வருடத்தில் ஜனவரி மாதம் இந்நாட்டில் மிகவும் குறைந்த உஷ்ண நிலை நுவரெலியாவில் காணப்பட்டது. அது 2.1 சதவீத மாகப் பதிவானது என்றார்.

மடுமாதா ஓகஸ்ட் உற்சவம்: பக்தர்கள் இறுதி 4 நாட்களே புனித பிரதேசத்தில் தங்க முடியும்

madhu_mary.jpgமடு மாதா ஓகஸ்ட் திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள் இறுதி நான்கு நாட்களுக்கு மாத்திரமே மடு புனிதப் பிரதேசத்தில் தங்க முடியுமென உயர்மட்டத் தரப்பில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

மடு தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இவ்விசேட கலந்துரையாடலில் மன்னார் மறை மாவட்ட ஆயர் உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் பிரார்த்தனையில் ஈடுபடும் வகையிலும் ஒழுங்குகள் இக்கூட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் எதிர்வரும் 06 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரையில் மடு தேவாலய உற்சவத்துக்காக வரும் பக்தர்கள் மடு புனித பிரதேசத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். உற்சவம் முடிந்ததும் பக்தர்கள் மதவாச்சி சோதனைச்சாவடிக்கூடாக அநுராதபுரம் சென்றுவிட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையிலான இறுதி நான்கு நாட்களும் பக்தர்கள் மடு புனிதப் பிரதேசத்தில் தங்க அனுமதிக்கப்படுவர். ஓகஸ்ட் 06 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மதவாச்சி சோதனைச் சாவடி திறந்திருக்கும்.

12, 13 ஆகிய தினங்களில் காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரையிலும், 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் சோதனைச்சாவடி திறந்திருக்கும். விசேட உற்சவ தினமான 15 ஆம் திகதியன்று அதிகாலை மூன்று மணி முதல் மாலை 4 மணி வரையிலும் சோதனைச் சாவடியினூடாக பக்தர்கள் தேவாலயத்தை தரிசிக்க வந்துபோக முடியும்.

இதேவேளை 06 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையில் இரவு 10 மணிக்குப் பின்னரும் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னரும், 15, 16 ஆகிய திகதிகளில் இரவு 10 மணிக்குப் பின்னரும், 17 ஆம் திகதி இரவு 2 மணிக்குப் பின்னரும் மதவாச்சி சோதனைச் சாவடி திறக்கப்பட்டிருக்கும். 

மியன்மார் ஜனநாயகக் கட்சித் தலைவர் மீதான வழக்குத் தீர்ப்பு வெள்ளிக் கிழமை – குற்றவாளியானால் 5 வருட சிறைத்தண்டனை

miyanmar_s.pngமியன் மாரின் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சாங் சுகீ மீதான வழக்கு விசாரணை தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்ட பிறகு நீதிபதி தாயுங் நியுந்த் இதைத் தெரிவித்தார்.

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற 64 வயதான மியன்மார் ஜனநாயகக் கட்சித் தலைவரான ஆங் சாங் சுகீ வீட்டுக் காவலை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கர் ஒருவர் அவரது வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டுக் காவலில் இருப்பவர்கள்,  வெளிநாட்டவர்களைச் சந்திக்கக் கூடாது என்பது விதியாகும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆங் சாங் சுகீ 5 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்  என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வெளியாக இருந்த போதிலும் முன்னதாகவே தீர்ப்பு வெளியாக இருப்பதற்கான காரணம் புரியவில்லை என்று ஆங் சாங் சுகீ யின் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆங் சாங் சுகீ-யைச் சந்தித்த அமெரிக்கர் ஜான் டபிள்யூ யெட்டாவுக்கு அதிகபட்சம் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. குடியேற்ற விதிகளை மீறியது மற்றும் நீச்சல் குளம் இல்லாத பகுதியில் குளித்தது உள்ளிட்ட குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன

கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார் ஆங் சாங் சுகீ

கொழும்பு யாழ்.பஸ் சேவை 1ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

bussss.jpg“ஏ9′  வீதியூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குமான இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவை ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் ஒன்றுவிட்ட ஒரு நாள் ஆரம்பமாகவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அத்துடன் மதவாச்சி வரை செல்லும் இரவு நேர தபால் ரயில் சேவையை இவ்வார இறுதிக்குள் வவுனியா வரை நீடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஏ9 வீதியூடான யாழ் – கொழும்பு இ.போ.ச. பஸ் சேவை பற்றிக் கேட்டபோது அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விபரங்களை கூறினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குமான இ.போ.ச. பஸ் சேவையை எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. திங்கட்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு தரப்பினருடனான கூட்டத்தின் போது இது குறித்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த பஸ் சேவையானது ஒன்றுவிட்ட ஒருநாள் சேவையாகவே இருக்கும். அதாவது முதல்நாள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரும் பஸ்கள் ஒருநாள் கழித்து அதற்கு மறுதினமே மீண்டும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும்.

இந்த பஸ் சேவைக்கு மக்களிடமிருந்து வரும் ஆதரவுக்கு அமையவே பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்லது குறைப்பதா என்பது பற்றி முடிவெடுக்கப்படும்.

இதேநேரம், தற்போது மதவாச்சி வரை செல்லும் இரவு நேர தபால் ரயில் சேவையை வவுனியா வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடனும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யுடனும் பேசியிருக்கின்றேன்.

எனவே, இந்த சேவை நீடிப்பை இவ்வார இறுதிக்குள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

ஏனெனில், இந்த இரவு நேர தபால் சேவை ரயிலில் மதவாச்சி வரை செல்லும் மக்கள் அங்கிருந்து வவுனியா செல்ல கொழும்பிலிருந்து மதவாச்சி வரை பயணிக்க செலவிடப்பட்ட தொகையைவிட அதிகமாக செலவிடுகிறார்கள். இதை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார்.