11

11

உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை 8.1 சதவீதத்தால் அதிகரிப்பு!

tourism.jpgஇலங் கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 8.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை உல்லாசப் பயண அபிவிருத்தி அதிகார சபையின் இயக்குணர் நாயகம் கலைச்செல்வம் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தகவல் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 363 வெளிநாட்ட உல்லாசப் பிரயாணிகள் இலங்கை வந்தனர். இவ்வருடம் இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 87 ஆயிரத்து 729 ஆகக் குறைந்தது. குறிப்பாக மேற்கு ஐரோப்பாää தெற்காசிய நாடுகளிருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.

எனினும் இவ்வருடம் மே மாதம் இலங்கையில் பயங்கரவாத  நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் பெருந்தொகையான வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வர ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாகவே கடந்த வருடத்தை விட இவ்வருடம் இலங்கை வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் முதல் அதிகரித்துள்ளது.

இலங்கையில் உள்ள உல்லாசப் பிரயாண ஹோட்டல்களில் சகல அறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த வருடம் சுமார் 5 லட்சம் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இலங்கை வருவார்கள் என்றும் அதன் மூலம் பெரும் இலாபம் அடைய முடியும் எனவும் எதிர்பார்கிறோம் எனவும் அவர் கூறினார்.