April

April

சூரிய படலங்களை செயலில் இருந்து நீக்குமாறு மின்சாரசபை கோரிக்கை !

சூரிய படலங்களை செயலில் இருந்து நீக்குமாறு மின்சாரசபை கோரிக்கை !

இலங்கை மின்சார சபை மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் வெளியிடும் குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் பிற்பகல் 3 மணி வரையில் வீட்டின் கூரைகளில் உள்ள சூரிய மின்படலங்களை செயலில் இருந்து நீக்குமாறு மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக, தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

விடுமுறை காலம் என்பதால் பல தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் குறைந்தளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால் அதிகளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டால் அது அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஏப்பிரல் மாத இறுதிக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

ஏப்பிரல் மாத இறுதிக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையானது கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

நாடு முழுவதும் 2,312 பரீட்சை மையங்களிலும் 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளானது ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்

 

ஆனையிறவு உப்புக்கு உரிமைகோரும் பா உ சிறிதரன் !

ஆனையிறவு உப்புக்கு உரிமைகோரும் பா உ சிறிதரன் !

ஆனையிறவு உப்புக்கு இவர்கள் ராஜலுனு என்று பெயர் வைத்ததைக் கண்டித்து தான் கொடுத்த அழுத்தத்தால் தான் அதற்கு ‘ஆனையிறவு உப்பு’ என்று பெயர் வைக்கப்பட்டதாக பா உ சிறிதரன் ரீல் விட்டுள்ளார். அமைச்சர் ஹெந்து நெத்திக்கு போன் பண்ணி அழுத்தம் கொடுத்ததால் தான் அதன் பெயர் மாற்றப்பட்டதாக உரிமை கோருகின்றார். இதனை மறுத்த பா உ இளங்குமரன் 2020க்களில் சிறிதரனுடைய உள்ளுராட்சி சபைதான் அதற்கான அனுமதியை வழங்கியிருக்க வேண்டும் என்றார்.

ஆனையிறவு உப்பளம் ஆரம்பிக்கப்பட இருப்பதை அறியாத பா உ சிறிதரன் அதனை இந்தியாவிடம் கையளிக்குமாறு பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். ஆனால் பா உ சிறிதரன் இதனைத் தெரிவித்து சில நாட்களிலேயே ஆனையிறவு உப்பளத்தை அமைச்சர் சந்திரசேகரன் உட்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

அந்நிகழ்வில் உரையற்றிய அமைச்சர் சந்திரசேகர், இதற்கு ஆனையிறவு உப்பு என்றே பெயரிட உள்ளோம், ஆனால் ஏற்கனவே முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஒப்பந்தத்தை மாற்ற சிறிதுகாலம் எடுக்கும் என்பதைச் சுட்டிக்காட் இருந்தார். தற்போது அமைச்சர் சந்திரசேகரன் உறுதியளித்தபடி ஆனையிறவு உப்பு என்ற பெயரிலேயே ஆனையிறவு உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றது.

இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார் ! பா உ சிறிதரன் – “கறன்ட் கம்பம் இல்லாம கறன்ட் வராதில்லா” பா உ இளங்குமரன்

இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார் ! பா உ சிறிதரன் – “கறன்ட் கம்பம் இல்லாம கறன்ட் வராதில்லா” பா உ இளங்குமரன்

பா உ சிவஞானம் சிறிதரன் பா உ இளங்குமரனின் தொழிலை நையாண்டி செய்து கிளிநொச்சியில் உரையாற்றினார். தனக்கு கட்சிக்குள் நடக்கின்ற சொந்தக் கதை சோகக் கதைகளை எல்லாம் கொட்டித் தீர்த்து கிளிநொச்சியில் உள்ள நான்கு பிரதேச சபைகளைக் கைப்பற்றப் பெரும் பிரயத்தனம் எடுத்துவருகின்றார். கிளி கனிஸ்டா மகாவித்தியாலயத்தில் அதிபராக இருந்தவர். இன்றும் அப்பாடசாலையின் செயற்பாடுகளில் கட்டுப்பாடுகளை வைத்துள்ளார். கிளிநொச்சி பா உ சிறிதரனின் கோட்டை என்றால் மிகையல்ல. சிறிதரன் ஏன் எனக்கு இவ்வளவு பயப்படுகின்றார் என்று சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கேள்வி எழுப்பினார். அவருடைய பிரச்சாரப் பீரங்கி அலனைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சியை நாங்கள் முறியடித்தோம். அது தான் அவருக்குக் கோபம் என்றார் பா உ இளங்குமரன்.

 

கிளிநொச்சிக் கூட்டத்தில் அண்மையில் உரையாற்றுகின்ற போது பா உ இளங்குமரன் மின்சார சபையில் ஊழியராகப் பணியாற்றியதை கிண்டலடித்து: “இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார்” எனத் தனது தொழில் மேலாண்மையை வெளிப்படுத்தினார். இதே போல் பா உ இளங்குமரனின் தொழிலைக் கிண்டலடித்து ‘நாயைப் பிடியுங்கோ என்று வீடுவீடாய் மீற்றர் ரீடிங் எடுத்தவர், தன்னைப் போல் எம்பிபிஎஸ் படிக்காதவர்’ என்ற தொனியில் கருத்து வெளியிட்டு இருந்தார்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கிளி ஊடகவியலாளர் தமிழ்செல்வனை ‘வடக்கத்தையான்’ என்று பா உ சிறிதரன் திட்டிய ஒளிப்பதிவு வெளியாகி இருந்தது. அதுபோல் பா உ அர்ச்சுனா அமைச்சர் சந்திரசேகரை மலையகத் தமிழர்கள் பற்றிய பொதுப்புத்தியில் இருந்து கைநாட்டு எழுத வாசிக்கத் தெரியாதவர் என நையாண்டி பண்ணியதோடு தான் கப்பல் விட்ட பரம்பரையிலிருந்து வந்ததாகவும் மலையக மக்களை கள்ளத் தோணிகள் கப்பலில் வந்தவர்கள் எனவும் தெரிவித்திருந்தார். பா உ இரா சாணக்கியனும் அமைச்சர் சந்திரசேகரனது நாசியில் உள்ள ஒவ்வாமைப் பிரச்சினையை வைத்து நளினம் செய்திருந்தார். தமிழ தமிழ் தேசியத் தலைமைகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசியலை எதிர்கொள்ளும் அரசியல் வலிமை இல்லாததால் அவர்கள் தங்களது சாதி, பிரதேச, மதவாத அரசியலையும் எதிரணியினரின் தொழிலையும் வைத்து அரசியல் செய்யும் மூன்றாம்தர நிலைக்கு கீழிறங்கி உள்ளனர்.

இதே மூன்றாம் தர அரசியலைஇ தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகுதி மக்களுக்கு எதிராகவும் இந்த தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள் செய்கின்றனர். இவர்கள் விளிம்புநிலை மக்களை சமூகத்தில் பல்வேறு வகையிலும் ஒடுக்கப்படும் மக்களை, தொழிலாளர்களை, ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதிபர்கள், மருத்துவர்கள் என மேட்டுக்குடியைச் சேர்ந்த பரம்பரை மேல் தட்டினரையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதாலேயே தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியில் பா உ இளங்குமரன் என்ற சாதாரண மின்சாரசபை ஊழியரும் உள்ளார். சிறிபவானந்தரா மருத்துவ கலாநிதி இவ்வாறு பல தரப்பட்ட சமூக தொழில் பிரிவுகளில் உள்ளவர்களும் தோழமை அடிப்படையில் மக்களோடு மக்களாக இணைந்து செயற்படுகின்றனர்.

சிறிதரனின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது போல் அமைச்சர் சந்திரசேகர் கருத்துத் தெரிவிக்கையில் நீங்கள் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு பிரிந்து நின்று குழாயடிச் சண்டை பிடிக்கின்றீர்கள் என்று குற்றம்சாட்டினார்.

கனடா தமிழ் திருமணம் செய்து வைக்கின்ற ஐயரின் திருவிளையாடல்கள் – ஐயர் பிரவின் ரனிஜன் கைது !

கனடா தமிழ் திருமணம் செய்து வைக்கின்ற ஐயரின் திருவிளையாடல்கள் – ஐயர் பிரவின் ரனிஜன் கைது !

லண்டனில் இரு வாரங்களுக்கு முன் தமிழ் பெண்களைப் பாலியல்துஸ்பிரயோகம் செய்தவர் என்று குற்றம்சாட்டப்பட்ட புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க்பட்டு இருந்தது. ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ந்த குற்றத்திற்காகவும் அவர் மீது பாலியல் வன்புணர்வுக்கு முயன்றமைக்காகவும் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தண்டனை விதிக்கப்பட்டு இரு வாரங்களுக்குள்ளாக அட்லான்டிக் சமுத்திரத்தின் மறுமுனையில் கனடாவில் 44 வயது நிரம்பிய பிரவின் என்ற ஆன்மிக குருவாகக் கருதப்பட்டவரை யோர்க் பொலிஸார் தமிழ் புத்தாண்டு அன்று கைது செய்துள்ளனர். தமிழ் திருமணங்களை முன்நின்று நடாத்துகின்ற இவர், மாணவர்களுக்கு ஆன்மீகமும் கற்பிப்பவராக இருந்தள்ளார். இவர் தான் வாழ்கின்ற பிக்கரிங் பகுதியில் உள்ள வாழ்விடத்தில் இருந்து ஆன்மிக – சமயக் கல்வியைப் போதித்து வருபவர் என யோர்க் பிரதேச பொலிஸாரின் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட பிரிவு தெரிவிக்கின்றது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரவின் ரனிஜன் தன்னிடம் ஆன்மீக – சமயக் கல்வி கற்க வந்த மாணவியை ஆறு தடவைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இப்பாலியல் தாக்குதல்கள் 2021 முதல் 2024 வரையான காலகட்டத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மற்றுமொரு இளம்பெண் தன்னை குறித்த நபர் 2024இல் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்னும் பல பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸாரிடம் முறைப்பாடுகளை பதிவு செய்ய முன் வருவார்கள் எனப் பொலிஸார் எதிர்பார்க்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொலிஸில் முறையிட வேண்டும் என அங்குள்ள பெண்கள் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசியப் பரப்பில் உள்ள ஆண்கள், பெண்களை பாலியல் பண்டமாக நோக்கும் போக்கு பாரிய அளவில் அதிகரித்து வருகின்றது. பா உ சிறிதரனின் வலதுகரமாக இயங்கிய வேளமாழிதன் மேற்கொண்ட பாலியல் லஞ்சங்கள் அம்பலமாகி இருந்தது. தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவங்கள் பற்றிக் கூட கட்சி கண்துடைப்பிற்காகவாவுதல் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. தற்போது பா உ சிறிதரனின் பிரச்சாரப் பீரங்கிகளில் ஒருவரான அலன் 16 சிறுவர்கள் மீது மேற்கொண்ட பாலியல் துஸ்பிரயோகம் கிளிநொச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து பா உ அர்ச்சுனா பொறாமை மற்றும் காரணங்களுக்காக பெண்களை இழிவுபடுத்தி அவர்களது நிர்வாணங்களை ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற பெயரில் வெளியிட்டு வருகின்றார். இவர்களுக்கு ஆதரவாக தமிழ் அடியான் என்ற பிரித்தானிய யூரியூபாளர் செயற்படுகின்றார். இவர்கள் வெளியிடும் நிர்வாணங்களைக் காண தமிழ் தேசிய ஆண்கள் இவர்களது முகநூல்கள் காணொலிகளை நோக்கி ஈகள் போல் மொய்க்கின்றனர்.

இவ்வாறான மூன்றாம் தரமான அரசியல் போக்குகள் காரணமாக அரசியலில் ஆர்வமுடைய பெண்கள் கூட AI மூலம் தங்களுடைய நிர்வாணங்களைத் தயாரித்து வெளியிட்டு விடுவார்கள் என அஞ்சுகின்றனர். அதனால் அரசியலில் இருந்து ஒதுங்குகின்றனர். இந்த நிர்வாணப் போட்டியில் கௌசல்யா நரேனின் நிர்வாணப் படம் வெளியாகினதை அடுத்து அவர் பொதுச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். பா உ அர்ச்சுனா – ஊழல் ஒழிப்பு அணி வன்னி – தமிழ் அடியான் கூட்டு பெண்களுக்கு எதிரான மிகக் கீழ்த்தரமான தாக்குதல்களை பொதுத்தளத்தில் மேற்கொள்கின்றனர். இவர்களால் ஈர்க்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கு எதிரான பெண்கள், முன்னாள் காதலிகள், முன்னாள் மனைவிகளின் படங்களை இவர்களுக்கு அனுப்பி அப்பெண்களை இழிவுபடுத்தி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பிரபல்யமான பெண்கள் இவர்களின் தாக்குதல் இலக்காக உள்ளனர். இவர்களின் தாக்குதலுக்கு தற்போது உள்ளாகி இருப்பவர் டென்மார்க்கைச் சேர்ந்த மாலினி மார்க்கண்டு என்ற காணொலியாளர்.

இதுவரை இவர்கள் குற்றம்சாட்டிய எந்தப் பெண்ணும் பாலியல் தாக்குதலிலோ பாலியல் துஸ்பிரயோகத்திலோ ஈடுபடவில்லை. அவர்கள் பெண்கள் என்பதால் அவர்களுடைய பலவீனத்தை இவர்கள் பலமாக்கிக் கொண்டு அவர்களது நடத்தையை நயவஞ்சகமாக களங்கப்படுத்தி அவர்களது சமூக அந்ததஸ்தை குறைத்து தங்களைப் போன்ற ஆணாதிக்க சிந்தனையுடையவர்களுக்கு தீனி போடுகின்றனர்.

ஆனால் உண்மையிலேயே பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பீடாதிபதிகள், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள் ஒட்டுமொத்தத்தில் ஆண்கள் பற்றி பா உ அர்ச்சுனா, ஊழல் ஒமிப்பு அணி வன்னி மற்றும் தமிழ் அடியான் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இலங்கை, பிரித்தானியா, கனடா என்று பல நாடுகளிலும் ஆண்கள் கைது செய்யப்பட்டு தண்டணையும் பெற்றுள்ளனர். ஆனால் அதைப்பற்றிக் கண்டுகொள்வதில்லை. பெண்களது நிர்வாணத்தை வெளியிடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர்.

சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவில் ஐஃபோன்கள் உற்பத்தி அதிகரிப்பு !

சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவில் ஐஃபோன்கள் உற்பத்தி அதிகரிப்பு !

ஆப்பிள் நிறுவனம் கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் 22 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஐஃபோன்களை உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 60 வீதம் அதிகமான உற்பத்தியை அப்பிள் நிறுவனம் இந்தியாவில் செய்துள்ளது. ஒரு வகையில் அப்பிள் நிறுவனம் சீனாவிற்குப் பதில் இந்தியாவில் அதன் தயாரிப்பையும் விநியோகத்தையும் அதிகரித்திருப்பதாக தெரிகின்றது. முன்னர் அமெரிக்க ஜனாதிபதி புதிய வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஃபோன்களை அமெரிக்கா அனுப்புவது விரைவுபடுத்தப்பட்டது. ஆனால் ஏப்பில் 11 அமெரிக்க ஜனாதிபதி திறன்பேசிகள், கணினிகள் உட்பட்ட மின்னணுப்பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதனால் இந்தியா சற்று ஆறுதலடைந்துள்ளது.

10.2: ஆகவே ஐஃபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கும் டொனால்ட் ட்ரம்பின் கனவு விரைவில் பலிக்காது எனவே கூறப்படுகிறது. ஊழியர் பற்றாக்குறை மற்றும் மூலப்பொருள் வசதியின்மை போன்ற இன்ன பல காரணங்களால் அப்பிள் ஐஃபோன்கள் உற்பத்தியை அமெரிக்காவிற்கு இடம்மாற்றுமா? என்பது கேள்விக்குறியேயாகும்.

 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கினார் – சீனா மீதான புதிய வரிகளை நீக்க தீர்மானம் !

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கினார் – சீனா மீதான புதிய வரிகளை நீக்க தீர்மானம் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் ஒன்பதாம் திகதி முதல் சீனாவில் இருந்து வரும் பொருட்கள் மீது 125 % வரி விதிக்கப்பட்ட்டு தற்போது இவ்வரி 145% ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத் தக்கது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்திருந்தது.

ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட சில முக்கிய மின்னணுப் பொருட்களுக்கான பரஸ்பர வரியை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார். அமெரிக்க மக்கள் அதிகமாக வாங்கிக் குவிக்கும் இந்த பொருள்களின் விலையேற்றம் பெரும் சுமையாக அமைவதைத் தடுக்கும் வகையில் இந்த வரிகுறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விலக்கினால் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு 145% வரி பொருந்தாது. ஆப்பிளின் ஐபோன்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின்னணு சாதனங்கள் சீனாவில் தயாரிக்கப்படுவதால், இது தொழில்நுட்ப முதலீட்டாளர்களுக்கு நன்மையளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வடக்கில் மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் – முதலீட்டாளர்களுக்கு அழைப்பு !

வடக்கில் மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் – முதலீட்டாளர்களுக்கு அழைப்பு !

வடமாகாணத்தில் குறுகிய காலகட்டத்தில் உருவாகவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் முதலீடு செய்ய, அந்த மாகாணத்தைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களை யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கழகத் தலைவர் இ. ஜெயசேகரன் தெரிவித்ததாவது,

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம், பரந்தன் இரசாயன தொழிற்சாலை வளாகம் மற்றும் மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம் ஆகியவை முதலீட்டு வலயங்களாக உருவாக்கப்பட உள்ளன.

வடமாகாணத்தில் அமையவுள்ள இந்த வலயங்களில் விவசாயம் சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மீன்பிடி சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மின்சார உபகரணங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கடதாசி சார் உற்பத்திப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், இரசாயனம் சார் உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட இலங்கையில் தடை செய்யப்படாத பொருட்களை தயாரிக்க முடியும். இவ்வலயங்களில் நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவம், மின்சாரம், வீதி வசதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகள் வழங்கப்படும். மேலும், 200 வீதம் முதலீட்டுக் கழிவுரிமை வழங்கப்படும் எனவும், தொழிற்சாலைகளுக்கான அனுமதிகள் மற்றும் இறக்குமதி சலுகைகள் எளிதில் பெற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டு முயற்சிகள் வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு, அதிகளவான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்முனைப்பாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டு சபைக்கு விரைவாக சமர்ப்பிக்குமாறு யாழ் வணிகர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு 021 222 1336 அல்லது jeyamanonr@boi.lk என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மரத்தடியில் காத்திருப்பு !

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மரத்தடியில் காத்திருப்பு !

2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சீரமைக்கவென 1,950 மில்லியன் ரூபாயும் இந்திய உதவியாக 300 மில்லியனும் செலவு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும் பலாலி விமான நிலையத்தில் வசதிகள் மிகக் குறைவாகவே உள்ளன என்று குற்றம் சாட்டப்படுகிறது. சமீபத்தில் 47 ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சி மற்றும் யாழ்ப்பாண விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டுக்கு வந்துள்ள பலாலி விமான நிலையம் தொடர்பில் பயணிகள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. விமானப் பயணத்திற்காக பயணிகள் மரங்களுக்கு கீழ் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் சேலம் ஆர் ஆர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளரான தமிழ்ச்செல்வன் கூட குறைப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் தனது சேலம் ஆர் . ஆர். பிரியாணி உணவகத்தை ஆரம்பித்துள்ள அவர் கொடுத்த போட்டியில் யாழ்ப்பாண விமானநிலையம் தற்காலிக கொட்டகையிலேயே இயங்குவதாக குறிப்பிட்டிருந்தார். மலசல கூட வசதி பற்றியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இத்தனை மில்லியன்கள் செலவு செய்து தற்காலிக கொட்டகைதான் போட முடிந்துள்ளது என்பது வேடிக்கை. கடந்தகால ஆட்சியாளர்களின் ஊழல் எத்தகையது என்பதற்கு இவையெல்லாம் சான்றாகவுள்ளது.

தமிழ்நாடிலிருந்து கொழும்புக்கு நேரடி ரயில் பாதை கனவு நனவாகிறது !

தமிழ்நாடிலிருந்து கொழும்புக்கு நேரடி ரயில் பாதை கனவு நனவாகிறது !

மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலன் தமிழ்நாடு – கொழும்பு நேரடி ரயில் பாதைக்கு அடிகோலியுள்ளது என “இந்தியா ருடே” இணையத்தளம் விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து கொழும்புக்கு நெடுஞ்சாலை அல்லது ரயில் பாதையை அமைக்க தேவையாகவிருந்த 25 கிலோ மீற்றர் பாலத்தை பாம்பன் பாலம் நிறைவு செய்துள்ளது என இந்தியா ருடே புளங்காகிதம் அடைகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் வர்த்தகம் மேம்படும் என்றும் இந்தியா ருடே ஆரூடம் கூறியுள்ளது.