தமிழ்நாடிலிருந்து கொழும்புக்கு நேரடி ரயில் பாதை கனவு நனவாகிறது !
மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலன் தமிழ்நாடு – கொழும்பு நேரடி ரயில் பாதைக்கு அடிகோலியுள்ளது என “இந்தியா ருடே” இணையத்தளம் விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து கொழும்புக்கு நெடுஞ்சாலை அல்லது ரயில் பாதையை அமைக்க தேவையாகவிருந்த 25 கிலோ மீற்றர் பாலத்தை பாம்பன் பாலம் நிறைவு செய்துள்ளது என இந்தியா ருடே புளங்காகிதம் அடைகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் வர்த்தகம் மேம்படும் என்றும் இந்தியா ருடே ஆரூடம் கூறியுள்ளது.