யாழில் எறும்புக்கடியால் சிசு பலி !
பிறந்த 21 நாளேயான பெண் சிசுவொன்றை எறும்புகள் கடித்துள்ளன. பெற்றோர் எறும்புக்கடி தொடர்பில் அசமந்தமாக இருந்துள்ளனர். நான்கு நாட்கள் கழித்து பால் குடித்த சிசு மரணமடைந்துள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனையின்படி எறும்புக் கடியால் கிருமித் தொற்று ஏற்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது. எறும்பு, மட்டத்தேள் மற்றும் பூரான் போன்ற பூச்சிகள் கடிக்கும் போது விரைவாக மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.