உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 20 க்குப் பின் !
2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பெறுபேறுகள் வெளியானவுடன் , பின்வரும் முறைகளில் நீங்கள் அவற்றை சரி பார்கலாம் என இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப் பூர்வமான இணையதளமான https://www.doenets.lk இலும், அல்லது https://www.results.exams.gov.lk இலும் காண முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.