ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கினார் – சீனா மீதான புதிய வரிகளை நீக்க தீர்மானம் !

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கினார் – சீனா மீதான புதிய வரிகளை நீக்க தீர்மானம் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் ஒன்பதாம் திகதி முதல் சீனாவில் இருந்து வரும் பொருட்கள் மீது 125 % வரி விதிக்கப்பட்ட்டு தற்போது இவ்வரி 145% ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத் தக்கது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்திருந்தது.

ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட சில முக்கிய மின்னணுப் பொருட்களுக்கான பரஸ்பர வரியை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார். அமெரிக்க மக்கள் அதிகமாக வாங்கிக் குவிக்கும் இந்த பொருள்களின் விலையேற்றம் பெரும் சுமையாக அமைவதைத் தடுக்கும் வகையில் இந்த வரிகுறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விலக்கினால் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு 145% வரி பொருந்தாது. ஆப்பிளின் ஐபோன்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின்னணு சாதனங்கள் சீனாவில் தயாரிக்கப்படுவதால், இது தொழில்நுட்ப முதலீட்டாளர்களுக்கு நன்மையளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *