ஆனையிறவு உப்புக்கு உரிமைகோரும் பா உ சிறிதரன் !
ஆனையிறவு உப்புக்கு இவர்கள் ராஜலுனு என்று பெயர் வைத்ததைக் கண்டித்து தான் கொடுத்த அழுத்தத்தால் தான் அதற்கு ‘ஆனையிறவு உப்பு’ என்று பெயர் வைக்கப்பட்டதாக பா உ சிறிதரன் ரீல் விட்டுள்ளார். அமைச்சர் ஹெந்து நெத்திக்கு போன் பண்ணி அழுத்தம் கொடுத்ததால் தான் அதன் பெயர் மாற்றப்பட்டதாக உரிமை கோருகின்றார். இதனை மறுத்த பா உ இளங்குமரன் 2020க்களில் சிறிதரனுடைய உள்ளுராட்சி சபைதான் அதற்கான அனுமதியை வழங்கியிருக்க வேண்டும் என்றார்.
ஆனையிறவு உப்பளம் ஆரம்பிக்கப்பட இருப்பதை அறியாத பா உ சிறிதரன் அதனை இந்தியாவிடம் கையளிக்குமாறு பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். ஆனால் பா உ சிறிதரன் இதனைத் தெரிவித்து சில நாட்களிலேயே ஆனையிறவு உப்பளத்தை அமைச்சர் சந்திரசேகரன் உட்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
அந்நிகழ்வில் உரையற்றிய அமைச்சர் சந்திரசேகர், இதற்கு ஆனையிறவு உப்பு என்றே பெயரிட உள்ளோம், ஆனால் ஏற்கனவே முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஒப்பந்தத்தை மாற்ற சிறிதுகாலம் எடுக்கும் என்பதைச் சுட்டிக்காட் இருந்தார். தற்போது அமைச்சர் சந்திரசேகரன் உறுதியளித்தபடி ஆனையிறவு உப்பு என்ற பெயரிலேயே ஆனையிறவு உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றது.