கனடா தமிழ் திருமணம் செய்து வைக்கின்ற ஐயரின் திருவிளையாடல்கள் – ஐயர் பிரவின் ரனிஜன் கைது !
லண்டனில் இரு வாரங்களுக்கு முன் தமிழ் பெண்களைப் பாலியல்துஸ்பிரயோகம் செய்தவர் என்று குற்றம்சாட்டப்பட்ட புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க்பட்டு இருந்தது. ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ந்த குற்றத்திற்காகவும் அவர் மீது பாலியல் வன்புணர்வுக்கு முயன்றமைக்காகவும் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தண்டனை விதிக்கப்பட்டு இரு வாரங்களுக்குள்ளாக அட்லான்டிக் சமுத்திரத்தின் மறுமுனையில் கனடாவில் 44 வயது நிரம்பிய பிரவின் என்ற ஆன்மிக குருவாகக் கருதப்பட்டவரை யோர்க் பொலிஸார் தமிழ் புத்தாண்டு அன்று கைது செய்துள்ளனர். தமிழ் திருமணங்களை முன்நின்று நடாத்துகின்ற இவர், மாணவர்களுக்கு ஆன்மீகமும் கற்பிப்பவராக இருந்தள்ளார். இவர் தான் வாழ்கின்ற பிக்கரிங் பகுதியில் உள்ள வாழ்விடத்தில் இருந்து ஆன்மிக – சமயக் கல்வியைப் போதித்து வருபவர் என யோர்க் பிரதேச பொலிஸாரின் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட பிரிவு தெரிவிக்கின்றது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரவின் ரனிஜன் தன்னிடம் ஆன்மீக – சமயக் கல்வி கற்க வந்த மாணவியை ஆறு தடவைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இப்பாலியல் தாக்குதல்கள் 2021 முதல் 2024 வரையான காலகட்டத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மற்றுமொரு இளம்பெண் தன்னை குறித்த நபர் 2024இல் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்னும் பல பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸாரிடம் முறைப்பாடுகளை பதிவு செய்ய முன் வருவார்கள் எனப் பொலிஸார் எதிர்பார்க்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொலிஸில் முறையிட வேண்டும் என அங்குள்ள பெண்கள் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியப் பரப்பில் உள்ள ஆண்கள், பெண்களை பாலியல் பண்டமாக நோக்கும் போக்கு பாரிய அளவில் அதிகரித்து வருகின்றது. பா உ சிறிதரனின் வலதுகரமாக இயங்கிய வேளமாழிதன் மேற்கொண்ட பாலியல் லஞ்சங்கள் அம்பலமாகி இருந்தது. தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவங்கள் பற்றிக் கூட கட்சி கண்துடைப்பிற்காகவாவுதல் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. தற்போது பா உ சிறிதரனின் பிரச்சாரப் பீரங்கிகளில் ஒருவரான அலன் 16 சிறுவர்கள் மீது மேற்கொண்ட பாலியல் துஸ்பிரயோகம் கிளிநொச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்து பா உ அர்ச்சுனா பொறாமை மற்றும் காரணங்களுக்காக பெண்களை இழிவுபடுத்தி அவர்களது நிர்வாணங்களை ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற பெயரில் வெளியிட்டு வருகின்றார். இவர்களுக்கு ஆதரவாக தமிழ் அடியான் என்ற பிரித்தானிய யூரியூபாளர் செயற்படுகின்றார். இவர்கள் வெளியிடும் நிர்வாணங்களைக் காண தமிழ் தேசிய ஆண்கள் இவர்களது முகநூல்கள் காணொலிகளை நோக்கி ஈகள் போல் மொய்க்கின்றனர்.
இவ்வாறான மூன்றாம் தரமான அரசியல் போக்குகள் காரணமாக அரசியலில் ஆர்வமுடைய பெண்கள் கூட AI மூலம் தங்களுடைய நிர்வாணங்களைத் தயாரித்து வெளியிட்டு விடுவார்கள் என அஞ்சுகின்றனர். அதனால் அரசியலில் இருந்து ஒதுங்குகின்றனர். இந்த நிர்வாணப் போட்டியில் கௌசல்யா நரேனின் நிர்வாணப் படம் வெளியாகினதை அடுத்து அவர் பொதுச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். பா உ அர்ச்சுனா – ஊழல் ஒழிப்பு அணி வன்னி – தமிழ் அடியான் கூட்டு பெண்களுக்கு எதிரான மிகக் கீழ்த்தரமான தாக்குதல்களை பொதுத்தளத்தில் மேற்கொள்கின்றனர். இவர்களால் ஈர்க்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கு எதிரான பெண்கள், முன்னாள் காதலிகள், முன்னாள் மனைவிகளின் படங்களை இவர்களுக்கு அனுப்பி அப்பெண்களை இழிவுபடுத்தி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பிரபல்யமான பெண்கள் இவர்களின் தாக்குதல் இலக்காக உள்ளனர். இவர்களின் தாக்குதலுக்கு தற்போது உள்ளாகி இருப்பவர் டென்மார்க்கைச் சேர்ந்த மாலினி மார்க்கண்டு என்ற காணொலியாளர்.
இதுவரை இவர்கள் குற்றம்சாட்டிய எந்தப் பெண்ணும் பாலியல் தாக்குதலிலோ பாலியல் துஸ்பிரயோகத்திலோ ஈடுபடவில்லை. அவர்கள் பெண்கள் என்பதால் அவர்களுடைய பலவீனத்தை இவர்கள் பலமாக்கிக் கொண்டு அவர்களது நடத்தையை நயவஞ்சகமாக களங்கப்படுத்தி அவர்களது சமூக அந்ததஸ்தை குறைத்து தங்களைப் போன்ற ஆணாதிக்க சிந்தனையுடையவர்களுக்கு தீனி போடுகின்றனர்.
ஆனால் உண்மையிலேயே பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பீடாதிபதிகள், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள் ஒட்டுமொத்தத்தில் ஆண்கள் பற்றி பா உ அர்ச்சுனா, ஊழல் ஒமிப்பு அணி வன்னி மற்றும் தமிழ் அடியான் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இலங்கை, பிரித்தானியா, கனடா என்று பல நாடுகளிலும் ஆண்கள் கைது செய்யப்பட்டு தண்டணையும் பெற்றுள்ளனர். ஆனால் அதைப்பற்றிக் கண்டுகொள்வதில்லை. பெண்களது நிர்வாணத்தை வெளியிடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர்.