30

30

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள் !

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ள 17 நாடுகளும் இவை தான் !

ஒமிக்ரோன் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதுவரை நோய் பரவியுள்ள 17 நாடுகள் விவரம் வருமாறு:-

1. தென்ஆப்பிரிக்கா
2. ஹாங்காங்
3,. போட்ஸ்வானா
4. ஆஸ்திரேலியா
5. இத்தாலி
6. ஜெர்மனி
7. நெதர்லாந்து
8. இங்கிலாந்து
9. இஸ்ரேல்
10. பெல்ஜியம்
11. சுவிட்சர்லாந்து
12. கனடா
13. பிரான்சு
14. ஸ்பெயின்
15. போர்ச்சுக்கல்
16. டென்மார்க்

17. செக் குடியரசு