06

06

“கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடு ஒரு கண் துடைப்பு மாநாடு..” – சிறுமி கிரெட்டா துன்பர்க் ஆதங்கம் !

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாடு பெருந்தோல்வி எனக் கூறி சூழலியல் செயற்பாட்டாளரான கிரெட்டா துன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 1995-ம் ஆண்டிலிருந்து காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உச்சி மாநாடு நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற வேண்டிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டதால் இந்த ஆண்டு நடக்கிறது.

உலக அளவில் கார்பன் உமிழ்வு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து இந்த மாநாட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை 5 அறிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 6-வது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மாநாடு பெருந்தோல்வி என சூழலியல் செயற்பாட்டாளரான கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:

காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் ஒரு வார காலமாக உலகத் தலைவர்கள் வெற்றுப் பேச்சை பேசியுள்ளனர். இந்த மாநாடு படுதோல்வி என்பதை யாருக்கும் சொல்லித் தெரியத் தேவையில்லை. இது ஒரு கண் துடைப்பு மாநாடு. விஞ்ஞானிகள் காலநிலை மாற்றம் தொடர்பாக அறிவியல் ரீதியாக முன்வைக்கும் உண்மைகளை உலகத் தலைவர்கள் புறந்தள்ள முடியாது. அதுபோலத் தான் அவர்கள் எங்களையும் புறக்கணிக்க முடியாது. உண்மையில் தலைவர்கள் வழிநடத்துபவர்களாக இல்லை. இப்படித்தான் தலைமை இருக்கிறது என்பது வேதனை.” எனவும் இவ்வாறு அவர் பேசினார்.

கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) இவர் சுவீடன் நாட்டைச் சார்ந்த உலகின் பருவநிலை காக்க போராடும் 15 வயதேயான பெண் ஆவார். இவர் துவங்கிய பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம் (School strike for the climate) என்ற இயக்கம் உலக பிரசித்தி பெற்றது. இவர் டைம்ஸ் பத்திரிக்கையின் “உலகின் நபர் 2019” என தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எதிர்வரும் 19 ஆம் திகதி !

எதிர்வரும் 19 ஆம் திகதி நீண்ட சந்திர கிரகணம் நிகழும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது மூன்று மணித்தியாலம், 28 நிமிடங்கள், 23 வினாடிகள் நீடிக்கும் என்றும், இது 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதன்போது, நிலவின் மேற்பரப்பு 97 சதவீதம் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும். குறிப்பாக வட அமெரிக்க பிராந்தியத்துக்கு  இந்தச் சந்திர கிரகணம் தென்படும் என்றும்,  2100 ஆம் ஆண்டு வரை மீண்டும் இது போன்றதொரு நீண்ட சந்திரக் கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா கணித்துள்ளது.

எதிர்வரும் எட்டு தசாப்தங்களில் மேலும் 179 சந்திர கிரகணங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சராசரியாக ஒரு வருடத்திற்கு இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி இவ்வருடத்துக்கான சந்திர கிரகணம் நிகழும் நிலையில், அடுத்த வருடம் மே 16 ஆம் திகதி மற்றுமொரு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

இந்தியாவை அச்சுறுத்தும் சீகா வைரஸ் – குறுகிய காலத்தில் 50க்கும் அதிகமானோர் பாதிப்பு !

ஏற்கனவே உலகை கொரானா வைரஸ் கடுமையாக ஆட்டுவித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனா தாக்கத்தின் விளைவுகள் உலகின் எல்லா நாடுகளிலும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. தடுப்பூசிகள் – மருந்துகள் என பல அறிமுகப்படுத்தப்பட்ட போதும் கொரோனா பரவும் வீரியம் குறைவதாயில்லை.  கொரோனா அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. அண்மைய மாதங்களிலேயே இந்தியா ஓரளவுக்கு மீண்டெழ ஆரம்பித்துள்ள நிலையில் அங்கு சீகா வைரஸ் (Zika Virus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், இதுவரை 66 பேருக்கு சீகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த மதம் 23 ஆம் திகதி கான்பூரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவருக்கு சீகா வைரஸ் பாதிப்பு இருந்தமை கண்டறிப்பட்டது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர், அண்டை வீட்டார் என பலருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் இதுவரை 66 பேருக்கு சீகா வைரஸ் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 45 ஆண்கள் மற்றும் 21 பெண்கள் சீகா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகலில் கடிக்கக்கூடிய எய்டஸ் வகை கொசுக்களால் சீகா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. வெப்ப வலயங்கள் மற்றும் துணை வெப்ப வலய பகுதிகளில் அவ்வப்போது பரவி வரும் சீகா வைரசின் பிறப்பிடம் உகண்டா ஆகும். அங்கு கடந்த 1947-ல் முதன் முதலில் குரங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் 1952-ல் உகண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களிடமும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

கடந்த 1960 முதல் 1980 வரை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இந்த வைரஸ் 2007-க்கு பிறகு தொற்று நோயாக உருவெடுத்தது. 2015-ல் பிரேசிலில் பல முறை இந்த தொற்று பரவியது. அங்கிருந்து பிற நாடுகளுக்கும் பரவியது.தற்போதுவரை 86 நாடுகளில் இந்த வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

டெங்குவை பரப்பும் ஏடிஸ் நுளம்புகள் மூலம் இந்த வைரசும் பரவுகிறது. தொற்று பாதித்தவர்களுக்கு இலேசான காய்ச்சல், தோல் தடிமன், தசை-மூட்டு வலி, கண் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு மூளை மற்றும் நரம்பு கோளாறுகளும் ஏற்படும். ஆனால் பெரும்பாலும் தொற்று பாதித்த பலருக்கும் அறிகுறிகள் தென்படாது.

தொற்று பரப்பும் நுளம்பு கடித்த 2 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். இது ஒரு வாரம் வரை நீடிக்கும். அதேநேரம் கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும். அல்லது பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்தான மூளை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிறவி நோய்கள் ஏற்படும்.

இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் இன்னும் ஆய்வு கட்டத்திலேயே உள்ளன. எனவே கொசுக்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதே வைரசை தடுக்கும் சிறந்த வழிமுறையாகும்.

“இலங்கையில் சீனாவின் இராணுவதளம்.” – அமெரிக்காவின் பென்டகன் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் !

இலங்கையில் சீனா இராணுவதளமொன்றை உருவாக்க முயல்கின்றது என ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான  பென்டகன் அச்சம் வெளியிட்டுள்ளது.

சீனா இலங்கை பாகிஸ்தான் மியன்மார் உட்பட பல நாடுகளில் தனது இராணுவத்திற்கான தளத்தை உருவாக்க முயல்கின்றது என பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.தனது கடற்படை வான் மற்றும் தரைப் படையினரின் எதிர்கால திட்டங்களை அடிப்படையாக வைத்தே சீனா இந்தத் தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது என பென்டகன் தெரிவித்துள்ளது.

நமீபியாவில் சீனா தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ள பென்டகன் சீனா முதல் ஹர்முஸ் ஜலசந்தி வரை- ஆபிரிக்கா முதல் பசுபிக் தீவுகள் வரை சீனா கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பல நாடுகளின் பல இடங்களைத் தேடிச்செல்வதே சீன இராணுவத்தின் நோக்கம்.ஆனால் சில நாடுகள் மாத்திரம் உட்கட்டமைப்பு வசதி -படையினரின் நிலை- படையினர் வருகை தரும் உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளுக்கும் அல்லது தளங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக உள்ளன என பென்டகன் தெரிவித்துள்ளது.

இலங்கை உட்பட பல நாடுகளில் சீனா இராணுவதளங்களைஉருவாக்குவதற்கு முயல்கின்றது என பென்டகன் தெரிவித்துள்ளமைக்கு பதிலடி கொடுத்துள்ள  சீனதூதரகம் , சீன ஒரு திருடன் அனைவரும் திருடுகிறார்கள் என நினைப்பான் என தெரிவித்துள்ளது.

இலங்கையில் சீனா இராணுவதளமொன்றை உருவாக்க முயல்கின்றது என பென்டகன் அச்சம் வெளியிட் டுள்ளது.
அமெரிக்கா தற்போதைக்கு 750 க்கு மேற்பட்ட வெளிநாட்டு இராணுவ முகாம்களை ஸ்தாபித்துள்ளதை சீன தூதரகம் நினைவூட்டியுள்ளது. இந்த தளங்கள்அரசியல் சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் என பல வழிகளில் விலை உயர்ந்தவை என தெரிவித்துள்ளது.