July

July

பாராளுமன்றம் அருகே இன்று ஆர்ப்பாட்டம்.

par.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இன்னொரு பதவிக் காலத்தை கொடுக்கக் கூடிய வகையில் மேற்கொள்ளப்படுகின்ற அரசமைப்புத் திருத்தத்தை அரசு கை விட வேண்டும், 13 ஆவது அரசமைப்புத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி. ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னின்று நடத்தினார்.

par.jpg

வவுனியா தாட்சாயினி ஜெயராசசிங்கத்திற்கு சித்திரப் போட்டியில் 1ம் இடம்

pr.jpgதேசிய தபால் அருங்காட்சியகம் இன்று கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் புதிய முத்திரைக்கான உருவப்படத்தை வரைந்து முதலாம் இடத்தைப் பெற்ற வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த தாட்சாயினி ஜெயராசசிங்கத்திற்கு ஜனாதிபதி பரிசை வழங்கினார்.

ஐநா அலுவலகம் முன்பாக பாரிய ஆர்பாட்டம்

wimal-weerawansa.jpgகொழும்பு பௌத்தலோகா மாவத்தையிலுள்ள ஐநா அலுவலகம் முன்பாக பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுக்கு ஆட்சேபம் தெரிவித்தே அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐநா அலுவலர்கள் எவரையும் அலுவலகத்துள் நுழையவோ அன்றி அலுவலகத்திலிருந்து வெளியெறவோ விடாமல் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பில் 20 000 பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளனர்!

Batticaclalo_Studentsமட்டக்களப்பு மாவட்டத்தில் போரினாலும், சுனாமி இயற்கை அனர்த்தம் மற்றும், எனைய சமூக காரணிகளாலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் போரினாலும் சுனாமியினாலும் தங்கள் பெற்றொரை இழந்து நூற்றுக்கணக்கான பிள்ளைகள் அநாதைகளாக்கபட்டுள்ளர்கள். இவர்கள் தங்கள் உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வருகினறனர்.  இதனால், அவர்கள் பாடசாலைக்குச் செல்லும் வசதிகளற்றவர்களாகவுள்ளனர்.

இதேவேளை, மத்திய கிழக்குப் போன்ற நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக சென்ற பெண்களின் பிள்ளைகளும் பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாதபடி பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.  இவ்வாறு சுமார் 20 ஆயிரம் பிள்ளைகள் தங்கள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆனால் ஐயாயிரம் வரையிலானவர்களே பாடசாலைக்கல்வியை கைவிட்டுள்ளதாக அரச நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இவ்வாறு பாசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்ட பிள்ளைகளை மீண்டும் கல்விகற்க வைப்பது. அல்லது, தொழில் பயிற்சிகளை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் அங்கு போதிய வளங்களில்லாததாலும், சரியான திட்டங்கள் வகுக்கப்படாத காரணத்தினாலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகளையும் அது எவ்வாறு மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதைப் பாதிக்கின்றது என்பதனையும் பிபிசி தமிழோசைக்காக அம்மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலரட்ணம் சீவகன் அந்த மண்ணின் வாசனையுடன் தொகுத்துள்ளார். மூன்று பாகங்களாக வெளிவரவுள்ள இந்தத் தொகுப்பின் முதல் பாகத்தை அருகில் உள்ள இணைப்பினூடாகக் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/news/story/2010/07/100704_battischooldropout.shtml

மருத்துசிகிச்சையை உடனடியாகப் பெற முடியாத தாய் மரணமாகிறாள் தாயின் மரணத்திற்குப் பின் தந்தை குழந்தைகளை அநாதரவாக கைவிட்டுச் சென்று மறுவாழ்வை அமைக்கிறார். கைவிடப்பட்ட குழந்தைகள் தாய்வழி உறவுகளால் குறிப்பாக வயதான அம்மம்மா அம்மப்பாவால் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களது முதுமை வறுமை குழந்தைகளைப் பராமரிக்க முடியாதநிலை. குழந்தைகளின் பள்ளி வரவு ஒழுங்கீனமாகிறது. அல்லது பள்ளிக்கே செல்வதில்லை.

இன்றைய குழந்தைகளே நாளைய சமூதாயம். ஒரு மாவட்டத்தில் மட்டுமே 20 000 மாணவர்கள் பள்ளி செல்லவில்லை என்றால் உருவாகப் போகும் சமூதாயம் எவ்வாறு அமையும் என்கின்ற அச்சம் தவிர்க்க முடியாதது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகள் தங்களால் முடிந்த பணிகளைச் செய்யவே முற்படுகின்றனர். செய்தும் வருகின்றனர். ஆனால் அந்த சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினையோ மிக ஆழமானது மிக விசாலமானது. அதனை வெளி ஒத்துழைப்பின்றி ஓரளவு தன்னும் பூர்த்தியாக்க முடியாது.

SLVisistலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர், ஆலயம் அகிலன் பவுண்டேசன், லூசியம் சிவன் கோயில் போன்றன முன்னுதாரணமாக பல முயற்சிகளை எடுத்துள்ளன. இவ்வமைப்புகள் நூற்றுக்கணக்கான அநாதரவான மாணவர்களை தங்களது இல்லங்களில் வைத்து பராமரிப்பதுடன் அவர்களுக்கான கல்வியையும் உறுதிப்படுத்தி உள்ளன.

London_Sivan_Kovil_illamஆனால் அங்குள்ள மாணவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் முன்னரே குறிப்பிட்டது போல ஆழமானது விசாலமானது. இதனை ஒரு சில அமைப்புகளின் தீவிர ஒத்துழைப்பினால் மட்டும் தீர்த்து வைக்க முடியாது. புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆலயங்கள் பொதுஸ்தாபனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் மாணவர்களின் நிலையை மாற்றியமைக்க பல்வேறு வகைகளிலும் உதவமுடியும். அதற்கு முன்வர வேண்டும்.

‘ஒரு பானை’ என்கின்ற லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் தனது பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது. இவ்வாறு ஏனைய அமைப்புகளும் இந்நிலையை மாற்ற முன்வர வேண்டும். இலங்கை அரசு செய்ய வேண்டும் என்று சொல்லி அதன் பொறுப்பில் மட்டும் இம்மாணவர்களைக் கைவிட்டால் நாம் குறைவிருத்தியான ஒரு தமிழ் சமூகத்தைத்தான் அடுத்த தசாப்தத்தில் காண நேரிடும்.

14 பேரை கொலை செய்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1989ஆம் ஆண்டு தொடக்கம் 14 பேரை கொலை செய்த நபர் ஒருவரை 21 வருடங்களின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறிலங்காவின் தென்பகுதியிலுள்ள எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆறு பிள்ளைகளின் தந்தையான நபரே கைது செய்யப்பட்டவராவார். குறித்த நபர் எம்பிலிப்பிட்டிய, தங்காலைப் பகுதிகளைச் சேர்ந்த 13 பேரை படுகொலை செய்து புதைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

14வது நபரை கொலை செய்து புதைத்ததன் பின்னர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் தாம் செய்த கொலைகள்  குறித்து ஒப்புக்கொண்டுள்ளார். காணிப் பிரச்சினை காரணமாக அண்மையில் 22 வயதான ஒருவரைக் கொலை செய்து வாழைத் தோட்டமொன்றில் புதைத்தமை குறித்தும் தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடைசியாக கொலையுண்டவருக்கு இறுதியாக கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு தொடர்பாக விசாரணை நடத்தியபோதே கொலையாளியை கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய 16ஆயிரத்து 11 படையினர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்!

Check_Pointசிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 16ஆயிரத்து 11 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மூன்று கட்டங்களாக, இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான படையினர் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த யூன் மாதம் 30ஆம் தகதி முடிவடைந்த மூன்றாவது பொதுமன்னிப்பு காலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 62 படையினர் உத்தியோக பூர்வமாக தங்கள் சேவையிலிருந்து விலகிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சொந்த கிராமத்தில் மீள்குடியேற முடியாத நிலையில் கிளிநொச்சி சாந்தபுரம் மக்கள்!

Rehabilitation_Wanniவவுனியா செட்டிக்குளம் அகதி முகாமிலிருந்து மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்ட கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் அழைத்து வரப்பட்டு மூன்று மாதங்களாகியும் பாடசாலையொன்றிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

கிளிநொச்சியில் இரணைமடுவிற்கும் தெற்கில் ஏ-9 பாதைக்கு கிழக்காக அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் வறியமக்கள் வாழும் ஒரு கிராமமாகும். இக்கிராமத்திலுள்ள காணிகள் இராணுவத் தேவைகளுக்காக எடுக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இம்மக்கள் மீள்குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி இடைத்தங்கள் முகாமில் வைக்கப்பட்டிருந்து தற்போது சாந்தபுரம் பாடசாலைக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்கள். அப்பாடசாலை சிறிய கட்டடமாகையினால் வெளியில் சிறு கூடாரங்களும் அமைக்கப்பட்டு இம்மக்கள் வசதிகளற்ற நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சாந்தபுரம் பாடசாலையில் இப்போது தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் அங்குள்ள தங்கள் காணிகளைப் பார்வையிட படைத்தரப்பால் தடைசெய்யப்பட்டுள்ளது. இப்பகுதியிலுள்ள 10ஆம் ஒழுங்கைக்கு அப்பால் சென்று பார்வையிட படையினரால் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதிகளிலுள்ள தங்கள் வீடுகளின் கூரைகள், மரந்தடிகள் காணாமல் போயுள்ளதாகவும், தென்னை மரங்களிலுள்ள தேங்காய்களும் களவாடப்பட்டிருப்பதாகவும் அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இலங்கையர் இப்போதும் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியும் மீளாய்வு அறிக்கையில் ஐ.நா.

இலங்கையின் பாதுகாப்பு நிலைவரம் முன்னேற்றமடைந்திருக்கின்ற நிலையிலும் இலங்கையைச் சேர்ந்த புகலிடம் கோருவோர்கள் தற்போதும் அதனைக் கோருவதற்கான தகைமையைக் கொண்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடம்கோரும் இலங்கையரின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில்லை. இடைநிறுத்தியிருந்தது. அகதிகளுக்கான ஐ.நா. முகவர் நிலையம் (யூ.என்.எச்.சி.ஆர்.) நாடுகளுக்கான தனது ஆலோசனையை புதுப்பிக்கும்போது தனது தீர்மானத்தை மீளாய்வு செய்வதாக அவுஸ்திரேலிய அரசு கூறியிருந்தது.

இதேவேளை,தனது மீளாய்வு செய்யப்பட்ட வழிகாட்டுதல்களை நேற்று இரவு ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள், சிறுவர்கள் உட்பட இலங்கைச் சமூகத்தின் சில பிரிவுகள் விசாரணைக்குட்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கலாபூசணம் புன்னியாமீன் இன் ‘சர்வதேச நினைவு தினங்கள்’ : முனைவர் மு. இளங்கோவன்

cover-03-1.jpgஇலங்கை மத்திய மலைநாட்டில் தலைநகர் கண்டி மாநகருக்கு அண்மையில் அமைந்துள்ள சிற்றூரில் பிறந்து வாழ்ந்துவரும் கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் என் நெஞ்சங் கவர்ந்த எழுத்தாளர். உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் இணையதளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன். இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்.

தமிழில் இதுவரை 170 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 1960 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் பீர்மொகமது, சைதா உம்மா ஆகியோரின் புதல்வராகப் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டம் பெற்றவர். மேலும்,  ஊடகத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். கல்லூரி ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, கல்லூரி முதல்வராகவும், பின்பு மத்திய மாகாண கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றி 45 வயதிலேயே ஓய்வுபெற்றவர். இவர், தற்போது முழுநேர ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும், சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பதறிந்து மகிழ்கிறேன்.

1970களில் சிறுகதை மூலம் இலக்கியத்துறையில் நுழைந்த இவரின் முதலாவது நூல் 1979 ஆம் ஆண்டில் “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்றுவரை சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசறிவியல் நூல்கள், தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், க.பொ.த.சாதாரண தரம்; மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், ஆய்வு நூல்கள்….. என பலதுறை சார்ந்த 170 இற்கும் அதிகமான நூல்களைத் தமிழில் எழுதி, வெளியிட்டுள்ளார். இவரின் சிறுகதைகள் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தாமரை, தீபம், கணையாழி, கலைமகள் போன்ற இலக்கிய ஏடுகளிலும் இடம்பெற்றுள்ளன. இவரின் ஆக்கங்கள் பல்கலைக்கழக மட்டத்தில் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த பத்தாண்டு காலமாக இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி அவற்றை ஈழத்து முன்ணணித் தேசிய ஏடுகளுள் ஒன்றான ‘ஞாயிறு தினக்குரலில்’ எழுதி வருகின்றார். அவற்றைத் தொகுத்து இதுவரை 15 தொகுதிகளாக நூலுருப்படுத்தியுள்ளார். தேசிய, பன்னாட்டு நிலையில் பலவற்றை ஆவணப்படுத்திவரும் இவரின் இப்பணி ஈழத்து இலக்கியப் பயணத்தின் இமயமாகத் திகழ்கின்றது.

இலங்கையில் தமிழ்மொழி மூல நூல்களை வெளியிடுவதில் வெளியீட்டுப் பணியகங்கள் குறைவு என்பதை உணர்ந்து ‘சிந்தனைவட்டம்’  எனும் பெயரில் பதிப்பகம் ஒன்றை உருவாக்கி இதுவரை 320 இற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இந்த வெளியீட்டுப் பணியகத்தினூடாக நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

பயிற்றப்பட்ட கணித,  அறிவியல் ஆசிரியையான எம். எச். எஸ். மஸீதாவின் அன்புக் கணவரான இவருக்கு சஜீர் அகமது,  பாத்திமா சம்ஹா ஆகிய இரண்டு மக்கட் செல்வங்கள் உள்ளனர்.

‘சர்வதேச நினைவு தினங்கள்’ எனும் தலைப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய, சர்வதேச அச்சு ஊடகங்களிலும், இணைய ஊடகங்களிலும் இவர் எழுதியுள்ளார். அவற்றைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக நூலுருப்படுத்தி வெளியிடும் இம் முயற்சி இவரின் தமிழ் எழுத்துப் பணியின் மற்றுமொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டுகின்றது. இவரின் முயற்சிகள் வெற்றிபெற மனதார வாழ்த்துகின்றேன்.

http://muelangovan.blogspot.com/

P.M.PUNIYAMEEN
P.Box 01
POLGOLLA
Srilanka.

cover-01.jpg

cover-02.jpg

cover-03.jpg

cover-04.jpg

சல்மான்கான்களின் வருகையால் பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகின்றனர் பாராளுமன்றத்தில் எம்.பி. சுனில் ஹந்துநெத்தி

இலங்கைக்கு சல்மான்கான்கள் வருவதால் கொழும்பில் பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகின்றார்கள். வறுமையை ஒழிப்பதற்குப் பிச்சைக்காரர்களை ஒழித்துப் பயனில்லையென்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. யான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சட்டத்தின் ஆதிக்கத்தை அரச கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் பயன்படுத்த வேண்டும். ஆனால், அண்மைய சம்பவங்கள் வேறுமாதிரியாகவுள்ளன. கொழும்பில் பிச்சைக்காரர்கள் கொங்கிறீட் கட்டைகளால் தாக்கிக் கொல்லப்படுகின்றனர். தற்போது கொழும்பில் கொங்கிறீட் கட்டைக் கொலைக் கலாசாரம் ஆரம்பமாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து சல்மான்கான் படம் தயாரிக்க வரும் போதுதான் இந்தப் பிச்சைக்காரர் கொல்லப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பிச்சைக்காரர்கள் இன்று சுதந்திரமாக பிச்சையெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சல்மான்கான் வருவது பிரச்சினையல்ல. ஆனால், “பிச்சைக்கான்’கள் கொல்லப்படுவதுதான் பிரச்சினை.