சிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 16ஆயிரத்து 11 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மூன்று கட்டங்களாக, இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான படையினர் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த யூன் மாதம் 30ஆம் தகதி முடிவடைந்த மூன்றாவது பொதுமன்னிப்பு காலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 62 படையினர் உத்தியோக பூர்வமாக தங்கள் சேவையிலிருந்து விலகிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.