05

05

இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு ‘கோல்டன் விசா’ !

இலங்கையின் இளம் பாடகி யோஹானி டி சில்வா துபாயில் ‘கோல்டன் விசா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கலை, கலாசாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு துபாய் அதிகாரிகள் வழங்கும் உயரிய விருது ‘கோல்டன் விசா’ என அழைக்கப்படுகிறது.

யோஹானி இலங்கையின் பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் சமகால பாப் இசை ஆகியவற்றின் தனித்துவமான கலவையால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார், மேலும் ‘கோல்டன் விசா’ கலைச் சிறப்பிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் உலகளாவிய அளவில் கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறது.

சுவீடனில் உண்மையில் செக்ஸ் சாம்பியன்ஷிப் நடைபெறுகிறதா..?

சுவீடனில் உடலுறவு என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாகவும் செய்தி வேகமாக பரவி வருகிறது. ஜூன் 8ம் திகதி தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்திகளில் பெரும்பாலான செய்திகள் ட்வீட்களை ஆதாரங்களாக காட்டியுள்ளன.

இந்த தகவலைப் பார்த்த பலரும் முகம் சுளித்ததுடன், இதென்ன அபத்தமான போட்டி என விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர். ஆனால் சுவீடனில் இருந்து அறிக்கையோ அல்லது சர்வதேச அளவிலான அறிக்கையோ வெளியாகாத நிலையில், இந்த செய்தி போலியானது என தெரியவந்துள்ளது.

அதாவது, சுவீடன் செய்தி நிறுவனமான கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் தகவலின்படி, செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான விண்ணப்பம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

‘சுவீடன் நாட்டில் செக்ஸ் கூட்டமைப்பு உள்ளது. அதன் தலைவர் டிராகன் பிராக்டிக் ஒரு சாம்பியன்ஷிப் போட்டிக்காக அழைப்பு விடுத்தார். உடலுறவை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார். உடலுறவானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார். எனினும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது’ என கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.