01

01

மீண்டும் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் திகதி போர் தொடுத்தது.

இந்தப் போர் தொடங்கி ஓராண்டையும் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம். அதிபர் ஜோ பைடன் இதற்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும் போர்த்தளபாட உதவிகளே உக்ரைன் மீதான போருக்கான காரணம் என ரஷ்யா குற்றச்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

திருடப்படும் வங்கித் தகவல்கள் – அன்ரோயிட் பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கக் கூடிய 101 அண்ட்ரோய்ட் செயலிகளில் ஸ்பின்ஓகே(sipnok) என்னும் உளவு மென்பொருள் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் பலரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த 101 செயலிகளில் “Noizz, zapya, share, VFly, MVbit, Biugo, Cashzine, Fizzo, Novel, Cash Em, Tick, Watch to Ean, Crazy drop gaming ஆகிய 10 செயலிகளை மட்டும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலிகள் மூலம் பயனர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் தகவல்கள் திருட்டுப் போக வாய்ப்புள்ளதால் இவற்றை உடனே அழித்துவிட(uninstall) வேண்டும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளை கண்காணிக்கும் பணியில் பல்வேறு உளவு மென்பொருள் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.