03

03

அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் !

எதிர்காலத்தில் உலகில் அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் தவறான புரிதல் ஏற்பட்டால் அணு ஆயுதப் போர் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாடுகளின் அழுத்தங்கள் அணுவாயுதப் போருக்கு வழிவகுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரே இதற்கு சிறந்த உதாரணம் எனவும் ஐ.நா பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, இஸ்ரேல், வடகொரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ராணி எலிசபெத் வாழ்த்துச் செய்தி !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ராணி எலிசபெத் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மகாராணியின் வாழ்த்தை அனுப்பியுள்ளது.

“இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அதிபராக இருக்கும் போது இரு நாடுகளுக்கிடையிலான அன்பான நட்புறவைத் தொடர நான் எதிர்நோக்குகிறேன்.

எதிர்காலத்தில் உங்களுக்கான அனைத்து செயற்பாடுகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என ராணி எலிசபெத் இன் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.